Tuesday 30 June 2015

செய்திகள் 

ஜூலை 2015 முதல் IDA  2.1 சதம்  உயரும் 
என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 
இத்துடன் மொத்தப்புள்ளிகள் 102.6 சதம் ஆகும். 
பண்பலை வானொலிகளின் அடையாள எண்கள் போல் 
நமது IDA  உயர்ந்து வருகின்றது. 
ஆனாலும் இணைப்புக்கான வழிதான் 
கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவில்லை.
==================================================================
தேசம் தழுவிய MNP மாற்று சேவைக்கு மாறும் வசதி ஜூலை 3 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
==================================================================
DIGITAL INDIA என்ற கொள்கையின்  கீழ் பல்வேறு திட்டங்கள் இன்று பிரதம மந்திரியால் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
==================================================================
ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் இரண்டு மாத காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என மாநில நிர்வாகம் 
மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.
==================================================================
குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு  CHILD CARE LEAVE 15 நாட்களுக்கு குறைவாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்ற DOPT  வழிகாட்டலை  அமுல்படுத்த BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
==================================================================
உடல் ஊனமுற்ற தோழர்கள் அரசுப்பணியில் அமர்வதற்கான வயது வரம்பு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.   பொதுப்பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், OBC பிரிவிற்கு 13 ஆண்டுகளும், SC/ST பிரிவிற்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
==================================================================
தண்டவாளம் ஏறும்... தனியார்மயம் 
இரயில்வே இன்று மக்கள் மயம்
நாளை.. தனியார் மயம் 
மக்கள் மயமான இரயில்வேத் துறையை 
தனியார் மயமாக்கிட..
வழக்கம் போல் குழு  அமைக்கப்பட்டு 
பிபேக் தேப்ராய் என்ற அந்தக்குழு 
தனது பாதக பரிந்துரையை அளித்துள்ளது.

குழுவின் பரிந்துரையின்படி 
  • இரயில்வே கணக்குகளை வணிகமுறைப்படுத்துவது..
  • இரயில்வே கட்டுப்பாட்டுக்குழு உருவாக்குவது..
  • இரயில்வே பாதுகாப்பை தனியாருக்கு விடுவது 
  • இரயில்வே ஊழியர்களுக்கான வசதிகளை தனியாருக்கு விடுவது 
  • இரயில்வே இருப்புப்பாதைகள் அமைப்பது 
  • இரயில்வே இருப்புப்பதைகளை பராமரிப்பது 
  • இரயில்வே தண்டவாளங்களை உற்பத்தி செய்வது 
  • இரயில்களைத் தனியார்கள் இயக்குவது
என அனைத்துப் பணிகளிலும் தனியாருக்குப்  
பஞ்சணை  வஞ்சனையாக விரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இரயில்வே ஊழியர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர்.

இரயில்வேயில் தனியார்மயத்தை எதிர்த்துப்போராடும் 
இரயில்வே ஊழியர்களுக்கு ஆதரவாக 
காரைக்குடி மாவட்டத்தில் 

NFTE - BSNLEU 
இணைந்த
 
இரயில்வே தனியார்மய 
எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம்.

 01/07/2015 - புதன் - மாலை 5 மணி 
பொதுமேலாளர்  அலுவலகம் 
காரைக்குடி. 

தோழர்களே.. வருக..

Monday 29 June 2015

NFTE 
மாவட்டச்செயற்குழுக்கூட்டம்  

30/06/2015 - செவ்வாய் - காலை 10 மணி 
தொலைபேசி நிலையம் - பரமக்குடி 

சிறப்புரை 
தோழர்.சேது 


  • தோழர்.கணேசன் பணி நிறைவு பாராட்டு விழா 
  • கவனிப்பாரற்ற BSNL சேவை 
  • கேட்பாரற்ற ஊழியர் பிரச்சினைகள் 
  • ஓயாத ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் 
  • அமைப்பு நிலை பிரச்சினைகள் 
விவாதிப்போம்.. முடிவெடுப்போம்.. 
போராடுவோம்.. வெற்றி பெறுவோம்.. 

தோழர்களே... வாரீர்..
அன்புடன் அழைக்கும் 
NFTE  காரைக்குடி மாவட்டசங்கம் 

Friday 26 June 2015

பணி நிறைவு வாழ்த்துக்கள் 
தோழர்.கணேசன் TM
NFTE  மாவட்ட உதவிச்செயலர் 
பரமக்குடி 
தோழர்.கணேசன் 
திருமதி.தமிழரசி கணேசன் 

கனிவு மிக்க கணேசன்.. 
நெஞ்சில் துணிவு மிக்க கணேசன்..

பணியில் சிறந்த கணேசன்.. 
எல்லோர்க்கும் பணிவில் நிறைந்த கணேசன்..

நேசம் புரிந்த  கணேசன்... 
வாழ்வில் வேஷம் அறியா   கணேசன்...

எளிமை கொண்ட கணேசன்
செயலில் வலிமை கொண்ட கணேசன்...

நல்லோர்க்கு நாணலாய் வளைந்திடும் கணேசன்...
சிறுமை செய்வோரிடம்  புயலாய் சீறிடும் கணேசன்..

பொலிவு மிக்க கணேசன்.. 
கொள்கையில் தெளிவு மிக்க கணேசன்..

வினை தீர்ப்பவன் கணேசன்... 
தொழிலாளர் துயர் தீர்த்திடும் கணேசன்..

பரமக்குடியில் பறந்திடும் செங்கொடி..
காலமெல்லாம் சொல்லும் கணேசன் பெயரை...

தோற்றத்தில் கருமை.. 
உள்ளத்தில் வெண்மை.. 
கொள்கையில் செம்மை..

வாழ்க... கணேசன்... 
வளர்க... கணேசன்.. 

அன்புடன் வாழ்த்தும் 
NFTE தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
TMTCLU ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி.
=================================================================
பணி நிறைவு பாராட்டு விழா 
30/06/2016 - செவ்வாய்க்கிழமை - காலை 10 மணி 
தொலைபேசி நிலையம் - பரமக்குடி.
================================================================

Thursday 25 June 2015

N F T E 
காரைக்குடி 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
=====================================
பரமக்குடியின் பண்புமிகு 
பணிவுமிகு   தலைவன்  
தோழர். A. கணேசன் 
பணி நிறைவு பாராட்டு விழா 
மற்றும்
 சிறப்பு மாவட்ட செயற்குழுக்கூட்டம்.
=======================================
30/06/2015 - செவ்வாய் - காலை 10 மணி 
தொலைபேசி நிலையம் - பரமக்குடி.
===================================================
-:தலைமை:-
தோழர்.வெ.மாரி - மாவட்டச்செயலர் 

-: வரவேற்புரை :-
தோழர். தமிழரசன் 
கிளைச்செயலர் - பரமக்குடி

-:வாழ்த்துரை : தோழர்கள்.

S. முருகன் 
மாவட்டத்தலைவர்  NFTE 

P . முருகன் 
மாவட்டச்செயலர் - AIBSNLPWA

B . முருகன் 
கிளைச்செயலர்  சிவகங்கை 

பாலமுருகன் 
கிளைச்செயலர் -  தேவகோட்டை 

இராமசாமி 
முன்னாள் கிளைச்செயலர் - பரமக்குடி.

தமிழ்மாறன்
மாவட்ட உதவிச்செயலர் 

லால் பகதூர் 
மாவட்ட உதவிச்செயலர் 

சுபேதார் அலி கான் 
கிளைச்செயலர் - GM அலுவலகம் 

ஆரோக்கியம் 
கிளைச்செயலர் - காரைக்குடி

அல்போன்ஸ் 
கிளைச்செயலர் - திருப்பத்தூர் 

நாராயணமூர்த்தி
கிளைச்செயலர் - மானாமதுரை 

காந்தி
கிளைச்செயலர் - இராமநாதபுரம்  

தங்கவேலு 
கிளைச்செயலர் - கீழக்கரை 

இராஜா 
கிளைச்செயலர் - இராமேஸ்வரம்  

கனகராஜ் 
கிளைச்செயலர் - முதுகுளத்தூர்  

ஜெயராமன் 
மாவட்டப்பொருளர் 

-: சிறப்பு வாழ்த்துரை :-

தோழர். சேகரன் 
அரசுப்பணியாளர் சங்கம்.

தோழர். இராஜன் 
.மாவட்டச்செயலர்
இந்தியப் பொதுவுடமைக் கட்சி 

இயக்க வழிகாட்டி  
தோழர். சேது 

மற்றும் தோழர்கள்..

நன்றியுரை 
தோழர். இராமு  - பரமக்குடி

தோழர்களே... வருக... வருக ...

TTA கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை 

01/01/2007க்குப்பின் பணியில் சேர்ந்த TTA  தோழர்களுக்கு 
10/05/2010 முதல் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை வழங்கிட 
BSNL BOARD ஒப்புதல் அளித்துள்ளது. 

01/01/2007க்குப்பின் பணியில் சேர்ந்த 
TTA  தோழர்களுக்கு30 சத ஊதிய நிர்ணயம் செய்யப்படாததால் 
பெரும் ஊதிய இழப்பு தொடர்ந்தது. 

நமது NFTE  மத்திய சங்கமும் 
SNATTA சங்கமும் இணைந்து மிக நீண்ட நாட்களாக இப்பிரச்சினையை தீர்க்கக்கோரி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். 
தற்போது இந்த  பிரச்சினை முழுமையாக  தீர்க்கப்படா விட்டாலும் 
5க்கு 2 பழுதில்லை என்ற கணக்கில் தீர்வை எட்டியுள்ளது.

மேற்கண்ட முடிவு TTA தவிர 
வேறு கேடர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

01/01/2007க்குப்பின்  
பல ஆயிரம் தோழர்களுக்கு ஆண்டு உயர்வு  தேக்க நிலை தொடருகிறது..
சேவையில் மூத்தோர் இளையோர் சம்பள முரண்பாடு தொடருகிறது..
நாலு கட்டப்பதவி உயர்வால் ஏற்பட்ட குழப்பங்கள்  தொடருகிறது..
ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் செய்வதில் தாமதம் தொடருகிறது..
பதவிப்பெயர் மாற்றம் செய்வதில் அலட்சியம் தொடருகிறது..

இப்படியாக சலிப்புக்கள்  தொடர்ந்தாலும் 
ஆறுதல் பரிசாக TTA தோழர்களின் பிரச்சினை 
 தன்னால்  முடிந்தவரை  தீர்வை எட்டியுள்ளது.

Wednesday 24 June 2015

செய்திகள் 

இரயில்வே துறையைத்தனியார் மயமாக்கும்
 நோக்கில் கொடுக்கப்பட்டுள்ள 
BIBEK DEBROY COMMITTEEயின் 
மோசமான பரிந்துரைகளைக் கண்டித்து 
இரயில்வே ஊழியர்கள் 30/06/2015 அன்று 
கறுப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.
===============================================
BSNL புனரமைப்பு சம்பந்தமாக 
இலாக்கா அமைச்சர் பிரதம மந்திரியை 
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
================================================
தமிழகத்தில் ஜூலை முதல் வாரத்தில் 
WORKS COMMITTEE  பணிக்குழு கூட்டங்களை நடத்துமாறு 
மாவட்ட நிர்வாகங்களை  மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
இரவு நேர இலவச அழைப்பு, இலவச ஊர் சுற்றி வசதி  
ஆகியவை முக்கிய விவாதப்பொருளாகும்.
================================================
DELOITTEE குழுவின் முடிவுகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளன, அடுத்தது தமிழகமாக இருக்கலாம். 
சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்த போதிலும் நிர்வாகம் தனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
================================================
26/06/2015 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நமது இரண்டு நாட்கள் வேலை நிறுத்த விளைவுகள் 
பற்றி விவாதம் செய்யப்பட்டது. தேவைப்படின் அடுத்த கட்ட 
நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

Tuesday 23 June 2015

ஜூன் - 24
கண்ணதாசன்  
பிறந்த தினம் 
காவியத்தாயின் மூத்த  மகன் 
கண்ணதாசன் 

இவன்...
காரைக்குடி கண்டெடுத்த முத்தையா..
கவி உலகின் மதிப்பில்லா சொத்தையா...

இவன்... 
எட்டிலே நிறுத்தினான் கல்வியை..
ஏட்டிலே நிறுத்தினான் கவிதையை...

இவன்...
உள்ளம் சொன்னதை உதட்டில் சொன்னான் 
உதட்டில் சொன்னதை உண்மையாய் சொன்னான்...

இதோ... 
இன்றைய தலைவர்களைப் பற்றிய 
அவன் வரி படியுங்கள்.. 
அவன் மேல் பற்றுங்கள்...

மாடு தின்னாமலும் 
மனிதர் தொடாமலும் 
வைக்கோலில் படுத்த நாய் போல்.. 

வையம் பெறாமலும் 
மண்ணில் விழாமலும் 
மாகடல் கொண்ட மழை போல்..

ஏடு கொள்ளாமலும் 
இசையில் நில்லாமலும் 
எழுதாது போன கவி போல்..

இலையில் இடாமலும் 
இருந்தே உண்ணாமலும் 
இடம் மாறி விழுந்த கறி போல்..

நாடு கொள்ளாத.. 
ஜனநாயகத்தலைவர்கள்.. 
நாட்டையே மாற்றினரே...

-கண்ணதாசன்-

Monday 22 June 2015

தீராப் பிரச்சினைகள் தீருமா..?

இன்று 23/06/2015 சென்னையில் JCM  மாநிலக்குழுக்கூட்டம் நடைபெறும் 
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் பல்வேறு பிரச்சினைகள் மாநில மட்டத்தில் தேங்கிக்கிடக்கின்றன.

மருத்துவபில்கள் மனிதாபிமானமின்றி மறுக்கப்படுகின்றன.  
குறிப்பாக அவசர காலங்களில் தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட சிகிச்சைக்கான பில்கள் கண்மூடித்தனமாக மறுக்கப்படுகின்றது. விபத்து நேரங்களில்  108 போன்ற அவசர சிகிச்சை ஊர்தியைப்பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட  சிகிச்சைக்கான பில்கள் கூட மறுக்கப்படுவது மிகவும் வேதனையானது.  

ஓய்வு பெறும் தோழர்களுக்கு வழங்கப்படும் விடுப்புச்சம்பளம் 
விடுபட்ட சம்பளமாக மாறிவிட்டது. ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றவர் 
ஜூன் மாதத்தில்தான் விடுப்புச்சம்பளம் பெறும் நிலை. மரணமுற்ற  தோழர்களுக்கு அவர்களின் ஆண்டு நினைவஞ்சலியையொட்டித்தான் விடுப்புச்சம்பளம் வழங்கப்படுகிறது. 

SUPPLEMENTARY BILLS  இடைப்பட்ட காலங்களில் பில்கள் பட்டுவாடா  என்பது தற்போது செய்யப்படுவதில்லை. மாதக்கடைசியில் ஒரேயொரு பில் என்பது மட்டுமே கடைப்பிடிக்கப்படுகின்றது. 

முன்பணம் என்பது தற்போது மறுக்கப்படுகின்றது. LTCக்கும் முன்பணம் கிடையாது. LTC  பில்களை எப்படி ESS சேவையில் ஏற்றுவது என்பது கூட நமது அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பிடிபடவில்லை.

காசாளர் பணி செய்யும் தோழர்களுக்கு CONVEYANCE ALLOWANCE  அலைச்சல்படியை எப்படி வழங்குவது என்பது அதிகாரிகளுக்குப் புரியவில்லை. ESS சேவையில் இதற்கான வழிமுறைகளும் இல்லை.

எல்லாம் கணிணிமயம் என்று கூறிவிட்டு விழாக்கால முன்பணம் எப்போதும் போல காகிதத்திலேயே கொண்டாடப்படுகின்றது. 

GPF கணக்கில் எப்போதும் குளறுபடிதான்.  GPF முன்பணம் பெற்றவர்கள்  அதை முன்கூட்டியே திருப்பிச்செலுத்த தயவு செய்து முயற்சி செய்ய வேண்டாம். காசாளரிடம் நீங்கள் கட்டிய பணம் ERP  கணக்கில் உங்களின் அடுத்த  பிறவியில்தான் ஏற்றப்படும். அதுவரை உங்களது பிடித்தமும் தொடரும். சேவை முடிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு 
அவர்கள் ஓய்வு பெறும் அன்று உரிய வட்டியுடன் கூடிய GPF மொத்தத்தொகை காட்டப்படுவதில்லை.

ERP யில் தனிநபர் விவரங்கள் தாறுமாறாக ஏற்றப்பட்டுள்ளன. 
மனைவி பெயர் மாற்றம், குழந்தைகள் காணாமல் போவது, 
தந்தைக்கு முன் பிள்ளைகள் பிறந்திருப்பது, குழந்தைகளுக்கு நாம் ஒரு பெயர் வைத்தால் இவர்கள் தனியாக ஒரு பெயர் வைப்பது, நாம் இதுவரை பணி புரிந்த இடங்கள், அடைந்த பதவி உயர்வுகள், பணி புரிந்த பதவிகள் என எதுவுமே உருப்படியாய் இல்லை.  இருக்கின்ற விவரங்களும்  
2099ம் ஆண்டு  வரை என்று உள்ளது. அதற்குப்பின் உலகம் இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணிவிட்டார்கள் போலும். 

விடுப்பு விவரங்கள் இன்னும் மோசம். பலருக்கு அரைச்சம்பள விடுப்பு கணக்கு விவரங்கள் இல்லை. சிலருக்கு விடுப்பு விவரங்களே இல்லை. LTC எடுத்த காலங்களில் அனுபவித்த LEAVE ENCASHMENT விவரங்கள் ERPயில் இல்லை. அவர்கள் பணி ஓய்வு பெறும்போது இது கழிக்கப்படுமா.. இல்லையா என்ற விவரங்களும் இல்லை. 
எல்லாமே இங்கே குருட்டாம்போக்குத்தான்.

ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்ட தோழர்களின் நிலை மோசமோ மோசம். அவர்களது ஒழுங்கு நடவடிக்கை உரிய காலத்தில் தீர்க்கப்படாது. அவர்களின் ERP சேவைக்குறிப்பில்  எந்த விவரங்களும் இருக்காது. தற்காலிகப் பணி நீக்க காலம் முறைப்படுத்தப்படாது. 
அவர்களின் பதவி உயர்வுகள் அதோ கதிதான்.
 ஓய்வு பெறும்போது பெரும் துயரந்தான்.

ஊழியர்கள் சேவை மோசம் என்றால் இலாக்கா சேவை இன்னும் மோசம். பல இடங்களில் நமது செல்சேவை மிக மிக மோசம். 
குறிப்பாக நமது பொதுமேலாளர் அலுவலகங்களில் நமது செல் தொடர்ந்து வேலை செய்வதில்லை நம்மைப்போலவே... 
மக்கள் திரளாக கூடும் இடங்கள்.. அரசு அலுவலகங்கள், 
கல்லூரி வளாகங்கள்,சுற்றுலாத்தலங்கள் 
ஆகிய இடங்களில் நாம் நமது  தரம் குறைந்த சேவையால்   
கடுமையாக விமர்சிக்கப்படுகின்றோம்.

இலவச இரவு நேர அழைப்புக்களை பற்றி பொதுமக்களிடம் கொண்டு செல்ல நமது கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. பொதுமக்களும் புதிய இணைப்பு பெற தயாராக உள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கும் இடங்களில் நம்மால் புதிய இணைப்பு கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இன்னும் காசு வாங்கிக்கொண்டு CONNECTION கொடுக்கும் கயமை பல இடங்களில் காணப்படுகின்றது. 

இவையெல்லாம் ஒரு சில துளிகள்தான்..
மாவட்டந்தோறும் எத்தனையோ  பிரச்சினைகள் 
மானாவாரியாக தலைவிரித்து  ஆடுகின்றன..

இவையெல்லாம் தீராத.. பிரச்சினைகள்... 
தீருமா? தேறுமா?  என்பதுதான் நமது எதிர்பார்ப்பு....

JCM குழுக்கூட்டங்களில்..
NFTE, BSNLEU இரண்டு சங்கங்களும் 
இணைந்து பங்கு பெறுவதால் 
பிரச்சினைகள் தீர்வு பெருமளவு இருக்கும்.. 
இருக்க வேண்டும்... 
என்பதுவே ஊழியர் எதிர்பார்ப்பு. 

Sunday 21 June 2015

இராமேஸ்வரம் 
தொலைந்து வரும்... தொலைத்தொடர்பு 
நமது சீரழிந்த சேவையை நினைவூட்டும்...
தனுஷ்கோடியின் சிதிலமடைந்த தேவாலயம்..


இராமேஸ்வரம்.. 
இந்திய தேசத்தின் 
ஆன்மீக அடையாளங்களின் 
ஆன்ம அடையாளங்களின் நகரம்..
நமது முன்னாள் குடியரசுத்தலைவர் 
அப்துல் கலாம் பிறந்த பெருமையுடைத்த ஊர்..

இந்தியாவின் 
ஒட்டுமொத்த இனங்களையும் 
ஓரிடத்திலே நாம் காண இயலும்...
ஒட்டு மொத்த மொழிகளையும்..
ஓரிடத்திலே கேட்க இயலும்...

இங்கு..
வருகை தராத... வந்தால் குளிக்காத... 
பேரதிகாரிகளே கிடையாது...

இத்தகைய சிறப்பு மிக்க நகரிலே 
நமது BSNL சேவை 
நாளும் சீரழிந்து வருகிறது...

போதிய செல் கோபுரங்கள் இல்லாததால் 
தடையற்ற சேவை தர இயலவில்லை...

OFC துண்டிப்பு..
வாரம் ஒரு முறை வந்து போகும். 
ஒரு முறை துண்டிக்கப்பட்டால்...
ஒரு வாரத்திற்கு மேலாகும் துண்டிப்பை சரி செய்ய...
கழுதையாக கத்தினாலும் காரியம் ஆகாது..

தரைவழி சேவை..  
தரமற்ற  சேவையாக மாறிவிட்டது..
அகன்ற அலைவரிசை சேவை..
குறுகிய சேவையாக மாறிவிட்டது 
வங்கி இணைப்புக்கள்.. அடிக்கடி துண்டிக்கப்படும்... 
ATMகள் இதனால் பூட்டிப்போடப்படும்..

இங்கே பொதுமக்களும்.. 
புனித சுற்றுலாவாசிகளும்...
வணிகப்பெருமக்களும்.. வாடிக்கையாளர்களும்...
அடையும் இன்னலுக்கு அளவே இல்லை...
கேட்க நாதியற்று கிடக்கிறது நமது சேவை...

இது பற்றி ஏற்கனவே.. 
நமது மாநில JCM கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது..
ஆனாலும் வழக்கம் போல எந்த முன்னேற்றமும் இல்லை...

BSNL தலை நிமிர வேண்டும் என்பதே 
இன்றைய எல்லோரது குறிக்கோளாகும்...
ஆனால் இராமேஸ்வரத்தில் நமது சேவை 
தலை குனிந்து நிற்கின்றது..
மாவட்ட.. மாநில நிர்வாகங்கள் உடனடியாக 
தலையிட்டு சேவை மேம்பட  வழி செய்ய வேண்டும்..

இல்லையேல்...
வாடிக்கையாளர்கள்..வணிகர்கள்..பொதுமக்கள்  இணைந்து 
BSNLக்கு எதிராக போராட்டம் தொடுக்கும் நாள் 
வெகு தொலைவில் இல்லை...

இலங்கைப்பிரச்சினை போல் அல்லாது 
இராமேஸ்வரம் பிரச்சினை... 
நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும்.. 
BSNL நிமிர்ந்து நிற்க வேண்டும்..
இதுவே நமது விழைவு..

Friday 19 June 2015

பழைய இரும்புக்கடையும் 
பாரதி நகர் தொலைபேசி நிலையமும்  
ஜாலியாக ஓய்வெடுக்கும்
சாக்கு மூட்டை 
குளிர்சாதன அறையில்
கூலாக  ஓய்வெடுக்கும்
சாக்குமூட்டை  மற்றும் டயர்கள்
 

பாரதி நகர் தொலைபேசி நிலையம் 
இராமநாதபுரம் 

இங்கு பழைய இரும்பு சாமான்கள் 
சாக்கு மூட்டை சமாச்சாரங்கள் 
ஓடாத டயர்கள் 
ஓட்டாத கார்கள் 
அனைத்தும் இலவசமாக பாதுகாக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

துணைக்கோட்டப்பொறியாளர் (உள்ளிருப்பு) 
SDE (INDOOR ) BSNL,
தொலைபேசி நிலையம்,
இராமநாதபுரம்.
தொலைபேசி எண்: 9486101960
-----------------------------------------------------------------------------------------------------------
-:பின்குறிப்பு:-
தொலைபேசியை பகல் நேரங்களில் 
தொடர்பு கொள்ள இயலாது. 
இரவு நேரங்களில் மட்டும் தொடர்புக்கு.
----------------------------------------------------------------------------------------------------------

Wednesday 17 June 2015

கடன் பட்டார் நெஞ்சம் 

22/06/2015 முதல் சென்னைக்கூட்டுறவு சங்கத்தின் 
கடன் அளவு 5 லட்சத்திலிருந்து 6 லட்சமாக  உயருகிறது.

சிக்கன நிதிப்பிடித்தம் 500ல் இருந்து 800  ஆக உயருகிறது.

குடும்ப நலநிதி 800ல் இருந்து 1200 ஆக உயருகிறது.

காப்பீட்டுத்தொகை 5 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயருகிறது.

வட்டித்தொகை 14.5ல் இருந்து 16 சதமாக உயருகிறது.

உறுப்பினர்களின்  ரத்த அழுத்தம் 140ல் இருந்து 200 ஆக உயருகிறது.

Sunday 14 June 2015

ஜூன் - 12
தோழர்.விச்சாரே 
நினைவு தினம் 
வெற்றித்தலைவன் 
விச்சாரே 
சங்கத்தில் சகலருக்கும் பிடித்த தலைவன்.. 
சங்கத்திற்கு சந்தா பிடிக்க வைத்த தலைவன்..
இனிமை நிறைந்த தலைவன்.. 
எளிமை மிகுந்த தலைவன்...
சொல்லில் துணிந்த தலைவன்..
செயலில் உயர்ந்த தலைவன்.. 
வெற்றித்தலைவன் விச்சாரே 
நினைவைப்போற்றுவோம்...

Friday 12 June 2015

பாரதி அன்பர் விழா 
பாரதி அன்பர் சா.பூவநாதன் 
நினைவு கலை இலக்கிய விழா 

15/06/2015 - திங்கள் - மாலை  5 மணி 
சன்மார்க்க சங்கம் - தேவகோட்டை.

-:பங்கேற்பு:- 
தோழர். சி. முருகன் 
மாவட்டத்தலைவர்  NFTE 

முனைவர். பழனி இராகுலதாசன் 

பேராசிரியர். சந்திரமோகன் 
முதல்வர் - சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி - தேவகோட்டை 

பேராசிரியர். பழநியப்பன் 
தமிழ்த்துறைத் தலைவர் - அரசு கலைக்கல்லூரி - திருவாடானை 

மற்றும் தமிழறிஞர்கள் 
தோழர்களே... வருக...

Thursday 11 June 2015

நீண்ட நாள் கோரிக்கை 
நிறைவேறியது...
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்புச்செயலர்
தோழர்.மாரிமுத்து தனது மனைவி திருமதி.மஞ்சுளாவுடன்
ESI அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் காட்சி. 

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
MALLI SECURITY  என்னும் நிறுவனத்தின் குத்தகையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ESIC  மருத்துவ அட்டை வழங்குவதற்கான புகைப்படம் எடுக்கும்  பணி நேற்று நடந்து முடிந்தது. 
ESI அலுவலகத்திலிருந்து நேரடியாக ஊழியர்கள் வந்திருந்தனர். 
ON LINE முறையில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யப்பட்டு உடனடியாக ESI இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
குத்தகை நிறுவனம் ஏற்கனவே தனது ஊழியர்களின் விவரங்களை  
ESI இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது.

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலத்திற்கு அடுத்த தெருவிலேயே 
ESI  மருந்தகம் இருந்தும் அடையாள அட்டை வழங்கப்படாததால் அந்த வசதியை ஊழியர்கள் பயன்படுத்த இயலவில்லை.  ESI மருத்துவ அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மிக நீண்ட நாட்களாக எழுப்பி வந்தோம். தற்போதுதான் அது நடந்தேறியுள்ளது. 

விடுபட்டவர்கள் நேரடியாக மதுரை ESI  அலுவலகத்திற்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் ஒப்பந்தகாரரிடம் தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் பெற்று அதில் புகைப்படம் ஒட்டி விவரங்களை நிரப்பி 
நிரந்தர அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

MALLI SECURITY  தவிர 
ALERT SECURITY மற்றும் CLEAN CARE SERVICES 
ஆகிய நிறுவனங்களும் காரைக்குடியில் குத்தகை எடுத்துள்ளன. அவர்களின் கீழ் பணிபுரியும் தோழர்களுக்கும் அடையாள அட்டை  வழங்குவதற்கான நமது முயற்சி தொடரும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு விரைவில் அடையாள அட்டையும், 
EPF கணக்கிற்கான UAN  என்னும் UNIVERSAL ACCOUNT NUMBERம் வழங்கப்பட வேண்டும் என குத்தகைக்காரரிடம் வலியுறுத்தியுள்ளோம். 
இம்மாதமே மேற்கண்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க  
குத்தகைக்காரர் உறுதி அளித்துள்ளார்.

Wednesday 10 June 2015

செய்திகள்
================================= 

ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதற்கான  குறிப்பு  நமது இலாக்கா அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் இந்த குறிப்பு பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து இறுதியில் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். 

78.2 FILE பாரதம் முடிவுக்கு வந்து 
2015ம் ஆண்டு ஓய்வு பெற்ற தோழர்களுக்கு
 நல்வருடமாக அமைய  நமது வாழ்த்துக்கள்.
==================================================================

மத்திய அரசின் 7வது ஊதியக்குழு தனது ஊதியக்குழு அறிக்கையை 
2015 ஆகஸ்ட் இறுதிக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
01/01/2016 முதல் ஊதியக்குழு அமுலாக்கம் இருக்கும். 
இம்முறை குறித்த காலத்திற்கு முன்னதாகவே ஊதியக்குழு
 தனது பணியை முடிப்பது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு
 நல்வருடமாக அமைய நமது வாழ்த்துக்கள்.
==================================================================

இந்திய தேசத்தில் தொலைபேசி எண்ணிக்கை 
100 கோடியைத்தொட்டு நிற்கின்றது. விரைவில் மக்கள் தொகையை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்லக் குழந்தைகள் இனி கையில் செல்போன் பற்றியே பிறக்கும். இத்தகைய அசுர வளர்ச்சியில் நமது BSNL பங்கு பத்து சதத்திற்கும் கீழே 
9.4 சதமாகப் போனதுதான் வருத்தமான வருத்தமாகும்.
==================================================================

தாஜ்மகால் பகுதியில் இலவச  WIFI இணைய சேவையை நமது BSNL நிறுவனம் அளிக்க உள்ளது. தமிழக அரசை அடுத்து இலவசங்கள் அளிப்பதில் BSNL  முன்னணியில் உள்ளது.  

டெல்லிப்பகுதி முழுவதும் இலவச WIFI வசதி அளிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் கால வாக்குறுதியாக அளித்திருந்தார். நமது MTNLன் பங்கு 
அதில் என்ன என்பது தெரியவில்லை.
==================================================================

ஊழியர்களின் பெயர் மாற்றக்குழு DESIGNATION COMMITTEE விரைவில் தனது பரிந்துரையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
புதிய பெயரோடு பழைய தெம்போடு உலாவர ஊழியர்கள் தயாராகவும்.
==================================================================

நமது நிறுவனத்தின் இரவு நேர இலவச அழைப்பு வசதி பற்றியும், 
இலவச தேசம் சுற்றும்  ஊர்சுற்றி ROAMING வசதி பற்றியும் 
மக்களுக்கு எடுத்துச்சொல்ல அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
==================================================================
ESI  அடையாள அட்டை 

தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் 
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ESIC மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மூலம் மருத்துவ சேவை அளித்து வருகின்றது.
 இதற்காக தொழிலாளியின் மாத ஊதியத்தில் 1.75 சதமும், நிர்வாகத்தின் சார்பில் 4.75 சதமும் சந்தாத்தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. 

ESIC நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட  ஒப்பந்தக்காரர்கள் 
தங்களின் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் குடும்ப புகைப்படம் மற்றும் தேவைப்பட்ட விவரங்களை ESIC இணையதளத்தில் உட்புகுத்தி TEMPORARY IDENTITY CARD எனப்படும் TIC அடையாள அட்டையை ஊழியர்களுக்கு உடனே வழங்க வேண்டும். 
இந்த அட்டை 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். 
ஊழியர்கள் இந்த 3 மாத காலத்திற்குள் தங்களது குடும்ப உறுப்பினர்களில் நீக்கல் சேர்த்தல் மற்றும் தங்களது சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்களை திருத்தம் செய்து ESIC நிர்வாகம் மூலம் PERMANENT IDENTITY CARD எனப்படும் PIC அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  ஆனால் இந்த நடைமுறை BSNL நிறுவனத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆனால் தொடர்ந்து தொழிலாளியிடம் சந்தா பிடித்தம் மட்டும் செய்யப்படுகிறது.

இன்று 11/06/2015 காரைக்குடியில்
 ஒப்பந்த ஊழியர்களுக்கு ESI அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்பட முகாம் நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களின் ஏற்பாட்டின் பேரில் ESI நிர்வாகத்தினர் இந்த முகாமை நடத்துகின்றனர். தோழர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வர இயலாதவர்கள், இருக்கின்றவர்களை வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அடையாள அட்டை 
பெற்றுக்கொண்ட பின் சேர்த்தல் நீக்கல் செய்ய இயலும்.
ஒப்பந்த ஊழியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Tuesday 9 June 2015

காப்பீட்டுத்திட்டங்கள் 

ஒப்பந்த ஊழியர்களின் வாழ்க்கை உத்திரவாதமற்ற வாழ்க்கை. நாள்தோறும் அவர்களிடம் வேலை வாங்கும் நிர்வாகம் அவர்களுக்கு விபத்து, மரணம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படும்  நேரங்களில் அவர்களுக்கு சட்டரீதியான உதவிகள்  ஏதும் செய்வதில்லை. அதற்கான திட்டங்களும் இல்லை. ஒப்பந்த ஊழியர்கள் EPF திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே மரணத்தின்போது 60000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகின்றது. நமது துறையில் EPF பிடித்தம் செய்யப்பட்டாலும் முறையாக செலுத்தப்படுவதில்லை. இதற்காகவே நாம் போராட வேண்டியுள்ளது. 

இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்கள் இந்திய அரசின்
 மக்கள் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய
 வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இருவகையான திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத்திட்டம். 

  • வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்.
  • வயது 17 முதல் 70 வரை.
  • ஆண்டு காப்பீட்டு உரிமத்தொகை PREMIUM  ரூ.12 மட்டும் 
  • காப்பீட்டுக்காலம் 365 நாட்கள் 
  • விபத்து நேர்ந்தால் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை இழப்பீடு 
  • விபத்தால் மரணம் நேர்ந்தால் 2 லட்சம் இழப்பீடு.

பிரதமரின் வாழ்க்கை ஒளி காப்பீட்டுத்திட்டம். 

  • வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்.
  • வயது 18 முதல் 50 வரை.
  • ஆண்டு காப்பீட்டு உரிமத்தொகை PREMIUM ரூ.330/= 
  • காப்பீட்டுக்காலம் 365 நாட்கள் 
  • விபத்து மற்றும் மரண இழப்பீட்டுத்தொகை  2 லட்சம்.
  • இயற்கை மரணத்திற்கும் இழப்பீடு உண்டு.

வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் மேற்கண்ட இரண்டு காப்பீட்டுத்திட்டங்களிலும் உறுப்பினராக சேர இயலும். ஆனால் ஒரேயொரு வங்கியில் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். 

காரைக்குடியில் UNION BANK OF INDIA 
வங்கியின் மேலாளர் 
உரிய படிவங்களை நம்மிடம் அளித்துள்ளார்.
 தோழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். 
PREMIUM உரியவர்களின் வங்கிக்கணக்கில் 
இருந்தே பிடித்தம் செய்யப்படும்.

Monday 8 June 2015

ஒப்பந்த ஊழியர் போராட்டம் 
ஒத்திவைப்பு 
====================================================

10/06/2015 அன்று சென்னையில் நடைபெறவிருந்த
 ஒப்பந்த ஊழியர் பிரச்சினை தீர்விற்கான போராட்டம் 
ஒரு மாத காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

08/06/2015 அன்று நிர்வாகத்துடன் 
நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில்
 மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை 
12/06/2015 அன்று நடைபெறும்.
================================================


நேற்று.. இன்று.. நாளை.. 
========================
காரைக்குடி மாவட்டத்தில் 
நேற்று  08/06/2015 வரை மே மாத சம்பளம்
 பட்டுவாடா செய்யப்படவில்லை. 

இன்று 09/06/2015 சம்பள பட்டுவாடா 
நடைபெறவில்லை என்றால்

நாளை 10/06/2015  
 போராட்டம் நிச்சயம் நடைபெறும்.