Monday 31 August 2015


ஒப்பந்த ஊழியர் கோரிக்கை மனு 

தோழர்.PLR  கோரிக்கைகளை விளக்கி உரையாற்றுகின்றார் 
 31/08/2015 அன்று 
ஒப்பந்த ஊழியரின் தீர்க்கப்படாத 
பிரச்சினைகள்  மீதான கோரிக்கை மனு 
AITUC,  NFTE மற்றும் TMTCLU சார்பில் 
நிர்வாகப்பிரிவு DGMகள் இருவரும் 
நேற்று அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் 
காரைக்குடி துணைப்பொதுமேலாளர் நிதி 
DGM(F) திரு.N.சந்திரசேகரன் 
அவர்களிடம் அளிக்கப்பட்டது.  

ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
AITUCயுடன் இணைக்கப்பட்டுள்ளதால் 
அதன் மாநிலக்குழு உறுப்பினர்
 தோழர்.பழ.இராமச்சந்திரன் உடனிருந்து வழிகாட்டினார்.
 பேச்சுவார்த்தையில் உதவிப்பொது மேலாளர் நிர்வாகம் திரு.சுவாமிநாதன் கலந்து கொண்டார். 

  • சம்பளத்துடன் கூடிய  வார ஓய்வு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
  • மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள கூலி கொடுக்கப்பட வேண்டும்..
  • ESI  மருத்துவ அட்டை வழங்கப்பட வேண்டும்..
  • அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்..
  • EPF கணக்கு துவக்கப்பட வேண்டும்..
  • போனஸ் வழங்கப்பட வேண்டும்..
  • மரணமுற்ற காவலர் ஆரோக்கியசாமி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்..

என்பது உள்ளிட்ட  பல கோரிக்கைகள் 
விவாதிக்கப்பட்டன. நிர்வாகத்தரப்பில் ஆவண செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய நிகழ்ச்சிகளை கண்ணுற்ற நமது தோழர்கள் 
இது தண்ணீர்.. தண்ணீர்... கதை போல் இருக்கிறதே..
என மன வேதனை சொல்லினர்.

இது அடிமட்ட ஊழியரின் கண்ணீர்... கண்ணீர் கதை...
நிர்வாகம் நிச்சயம் மனிதாபிமானத்துடன் 
கோரிக்கைகளைத் தீர்த்து வைக்கும் என்று 
தோழர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளோம்.

நம்பினோர் கெடுவதில்லை... நான்மறைத் தீர்ப்பு... 
போனஸ் குழுக்கூட்டம் 

31/08/2015 அன்று தலைநகர் டெல்லியில் 
போனஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துளிகளில் சில...
  • NFTE சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்களும், BSNLEU  சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் கலந்து கொண்டனர்.
  • பண்டிகைக்காலம் நெருங்குவதால் தற்காலிக போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • உற்பத்தியோடு  இணைக்கப்பட்ட போனஸ் PRODUCTIVITY LINKED BONUS   என்ற பதங்களையே கடிதப்போக்குவரத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  • உற்பத்தியோடு  இணைக்கப்பட்ட போனஸ் என்பது தொழிலாளருக்கு மட்டுமே பொருந்தும். அதிகாரிகளுக்குப் பொருந்தாது.
  • போனஸ் அடைவதற்கான இலக்கு TARGET  என்பது மிகவும் கடினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை CFA தரைவழித் தொலைபேசிப்பிரிவுடன் பேசி மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • இலக்கு குறியீடுகளில் FAIR என்ற குறியீடு இல்லாதது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • போனஸ் சம்பந்தமாக இன்னும் உரிய  விளக்கம் அளிக்காத DOT யின் செயல்பாடு கண்டிக்கப்பட்டது.
  • போனஸ் குழுக்கூட்டங்களை இழுத்தடிக்காமல் உரிய இடைவெளியில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sunday 30 August 2015

தங்கத்தலைவன் வாழ்க...
சங்கத்தலைவன் வாழ்க...
தோழர்.இலட்சம் 
தமிழ் மாநிலத்தலைவர் 
31/08/2015
பணி நிறைவு வாழ்த்துக்கள் 

தங்கம் நிகர் தலைவன் அவன்
தரத்தில் உயர் மனிதன் அவன் 

தோழமை போற்றிய உடன்பிறப்பு அவன் 
உடன்பிறவாத் தோழன் அவன்...

கைகளுக்குள் கட்டுண்ட கதிரவன் அவன் 
கரை வேட்டி கம்யூனிஸ்ட் அவன் 

கையில் கதிர் அரிவாள் ஏந்தும் உழவன்  அவன்..
 நித்தமும் சூரியனை வணங்கும் பக்தன்   அவன்.. 

பூவின் இடத்தில் பொன்னானவன் அவன்.. 
நூறின் இடத்தில் லட்சமானவன் அவன்..

சப்பைக்கட்டு அறியாத சண்டமாருதம் அவன் 
சபைக்கட்டு அறிந்த சபாநாயகன் அவன்..

கம்பத்தின் கதாநாயகன் அவன் 
தமிழகத்தின் தலைநாயகன் அவன் 

இராமனிடம் நேசம் கொண்ட லட்சுமணன் அவன்.
ஈரேழு  மாநிலத்திலும்  ஈடாகா லட்சம் அவன்...

காலங்களில்   நூறு கண்டு 
கலைகளில் ஆயிரம் கண்டு 
கடமைகளில்  லட்சம் கண்டு 
இலட்சம் 
வாழ்க... வாழ்க.. வாழ்க..

அன்புடன் வாழ்த்தும் 
NFTE   BSNL 
காரைக்குடி மாவட்டச்சங்கம்.
பணி நிறைவு வாழ்த்துக்கள் 

31/08/2015
 காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும் 
அன்புத்தோழர். 
S.ஜெபமாலை 
STS -சிவகங்கை 

அருமைத்தோழியர். 
G .முத்துமாரி 
TM - காரைக்குடி 

ஆகியோரின்
 பணிநிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க 
வாழ்த்துகின்றோம்.

Friday 28 August 2015



தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் 
சிவகங்கை மாவட்டம் 

மாவட்ட மாநாடு 

29/08/2015 - சனிக்கிழமை - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 
காரைக்குடி.

தலைமை: நாவலாசிரியர்.சந்திரகாந்தன் 
வரவேற்புரை: தோழர்.வெ.மாரி - NFTE 

கவியரங்கம்  - கருத்தரங்கம் - கலையரங்கம் 
வாழ்த்தரங்கம் - பாராட்டரங்கம் - பட்டிமன்றம் 

பங்கேற்பு : தோழர்கள் 

பொன்னீலன் 
பரிணாமன் 
இரா.காமராசு 
த.ச.நடராஜன் 
குணசேகரன்-MLA 
முனைவர் பாண்டி 
பழ.  இராமச்சந்திரன் 
முனைவர் மு.சு.கண்மணி
கம்பன் கழகம் பழனியப்பன் 
தமுஎச சங்கரசுப்பிரமணியன் 
முனைவர் பழனி இராகுலதாசன் 
திருக்குறள் பேரவை ஜெயங்கொண்டான் 
மற்றும்  கலை இலக்கியச்சான்றோர்கள்....

தோழர்களே... வருக...
இரங்கல் 


காரைக்குடி FNTO சங்க 
கிளைச்செயலர்  அன்புத்தோழர்.

K.சேக் தாவூது TM

அவர்கள் இன்று 28/08/2015 மதியம்  
ஜும்மா தொழுகையில் 
இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் போதே
 இறைவனடி சேர்ந்தார்.

அனைவரிடமும் 
சகோதரத்துவமுடன் பழகிய தோழர். 
சங்க வித்தியாசம் இல்லாமல் 
நம்மிடம் மிகுந்த தோழமையுடன் 
பழகிய சகோதரர். 

அவரது திடீர் மறைவு தோழர்களிடையே 
மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றிருப்பார் இன்றில்லை... 
இன்றிருப்பார் நாளை இல்லை...
என்பது நிலையாமை பற்றிய பழமொழி...

ஆனால் தோழர்.சேக் அவர்களோ...
இன்று காலை இருந்தார்... 
இன்று மாலை மறைந்தார்...

அவரது மறைவிற்கு 
நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.

Wednesday 26 August 2015

 குத்த..கைகள்

வறட்சி மிக்க மாவட்டம் 
இராமநாதபுரம், சிவகங்கையை உள்ளடக்கிய
 காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்.  

இந்த வறட்சி மாவட்டம் 
இன்று குத்தகைக்காரர்களின் 
வறட்சி போக்கும் மாவட்டமாக
 குத்தகைக்காரர்களின் 
வளர்ச்சி போற்றும் 
மாவட்டமாக   மாறி விட்டது.  

பல்வேறு குத்தகைகள் இருந்தாலும் 
மனிதனைச் சுரண்டும்.. 
மனித உழைப்பைச் சுரண்டும்.. 
ஒப்பந்த ஊழியர் குத்தகை  
அதிகாரிகளின் நேரடி ஆதரவில் 
அமோகமாக நடைபெற்று வருகின்றது.

ஒப்பந்த ஊழியர்கள் படும் 
அல்லல்கள் துன்பங்கள் துயரங்கள்
 அனைத்துக்கும் அடிப்படை காரணம் 
முறையான சரியான நேர்மையான 
குத்தகைக்காரனை 
கடந்த காலங்களாக தேர்வு செய்யாமையே. 

காரைக்குடியில்.. 
காவல் பணி சீருடை
காவல் பணி சீருடையின்றி,
கேபிள் குழி தோண்டும் பணி, 
அலுவலகப் பராமரிப்புப்பணி..


என நால்வகைப்பணிகளுக்கு 
குத்தகை விடப்படுகிறது. 
ஆண்டுக்கு ஒரு முறை குத்தகை மாற்றப்பட வேண்டும். 
ஆனால் இங்கோ ஆண்டுக்கணக்கில் 
குத்தகை ஆளவட்டம் போடுகிறது. 
காரணம் குத்தகைக்காரர்கள் 
குறிப்பிட்ட ஆட்களை
 வட்டம் போட்டுக்கொண்டதுதான். 

மேற்கண்ட நால்வகைப் பணிக்கும் 
இன்றைய தேதியில் முறையான 
நடப்பு அனுமதி பெற்ற குத்தகைக்காரர்கள் யாரும்  கிடையாது. 

அனைவருமே EXTENSION என்னும் நீட்டிப்பில்.. 
மீண்டும் சொல்கிறோம்.. 
நீட்டிப்பில்  காலம் தள்ளுகிறார்கள். 

அதிலும் காவல் பணிக்கான குத்தகை 
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக 
ஒரே நபருக்கு நீட்டிப்பில் செல்கிறது.  

சில குத்தகைக்காரர்களுக்கு SECURITY DEPOSIT 
என்னும் காப்புத்தொகை இன்றி 
குத்தகை வழங்கப்பட்டுள்ளது. 

கவனிப்புத்தொகையில்  
காப்புத்தொகை காணாமல் போகலாம்.
நமக்கு இதைப்பற்றிக்கவலை கொள்ள 
அவசியமில்லைதான்...

ஆனாலும் உழைக்கிற தொழிலாளிகளுக்கு..

  •  முறையான தேதியில் சம்பளம் கொடுக்கப்படாத போது..
  • உரிய சம்பளம் வழங்கப்படாத போது..
  • அவர்களது சேம நலநிதித்தொகை விழுங்கப்படும் போது..
  • மருத்துவ வசதி மறுக்கப்படும்போது..
  • போனஸ் கைவிரிக்கப்படும்போது..

தொழிற்சங்கம் என்ற முறையில் 
நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதன் ஆணிவேரை அலசிப்பார்க்க வேண்டிய 
அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

குத்தகைகள் முறைப்படுத்தப்பட வேண்டும்...
குத்த கைகள் அடையாளம் காணப்பட வேண்டும்...
இது போன்ற பிரச்சினைகளை .
இந்த மாவட்டத்தில் நாம் எழுப்பும்போது..
குற்றங்களை விட்டு விட்டு..
அதைச்சுட்டிக்காட்டுபவனை..
குற்றவாளியாக்கும் முயற்சியை மேற்கொள்வதை..
காலம்.. காலமாக 
தாத்தா காலம் முதல் 
பாண்டி.. பரமசிவம் காலம் வரை  
நாம் கண்டிருக்கின்றோம்...

இம்முறை நிர்வாகம்... 
நாம் சொல்லக்கூடிய பொருளில்.. உள்ள
மெய்ப்பொருள் மட்டுமே காணுமேயாயின்..
குத்தகையில் உள்ள மெய்ப்பொருளும்...
கைப்பொருளும்  விளங்கும்...

நாம் மீண்டும் சொல்கிறோம்..
நரிகள் வலம் போகலாம்...
நரிகள் இடம் போகலாம்...
நமக்குக் கவலை இல்லை...
ஆனால்...
அந்த நரிகள் நேராக..
அதோ அந்த ஓலைக்குடிசையில்..
வெற்றுடம்பாய்.. வெந்த மனதாய்..
காய்ந்த வயிறாய்.. கசியும் கண்களாய்..
உறங்கிக் கொண்டிருக்கும் 
நம் அன்புக்குழந்தையாம்.. 
ஒப்பந்த ஊழியரின் குரல்வளையை 
நரிகள் குறி வைக்கும் என்றால்.. 
நாம் சும்மா இருக்க முடியாது...

Monday 24 August 2015

AITUC - NFTE  - TMTCLU 
இணைந்த போராட்டம் 

காரைக்குடி மாவட்டத்தில் 
உண்மையாய்  உழைக்கும் 
ஒப்பந்த ஊழியரின் 
வயிற்றில் அடிக்கும் 
வன்கொடுமை எதிர்த்து 

AITUC  -  NFTE  - TMTCLU 
இணைந்த 
கண்டன ஆர்ப்பாட்டம் 

31/08/2015 - திங்கள் - மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

- : தலைமை :-
தோழர்.பழ.இராமச்சந்திரன் 
AITUC - மாநிலக்குழு உறுப்பினர் 

-: பங்கேற்பு :-
தோழர்.கார்வண்ணன் 
AITUC - மாவட்டச்செயலர் 

தோழர்.முருகன் 
TMTCLU  - மாவட்டச்செயலர்  

தோழர்.மாரி 
NFTE - மாவட்டச்செயலர் 

மற்றும் கிளைச்செயலர்களும் 
முன்னணித்தோழர்களும்...

கோரிக்கைகள் 
மாவட்ட நிர்வாகமே... 
  • வார ஓய்வைப் பறிக்காதே... வயிற்றில் அடிக்காதே..
  • மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த கூலி வழங்கு..
  • மாதந்தோறும் குறித்த தேதியில் கூலி வழங்கு..
  • செய்யும் பணிக்கேற்ற கூலி வழங்கு...
  • பத்து ஆண்டுகளாக கட்டப்படாத EPF தொகையைக் கட்டு...
  • EPFல் அனைவருக்கும் UAN எண் வழங்கு..
  • அடையாள அட்டை வழங்கு...
  • ESI மருத்துவ அட்டை வழங்கு..
  • போனஸ் வழங்கு...
  • அனைவருக்கும் 8 மணி வேலை வழங்கு...

தோழர்களே...

தொழிலாளர்களை  வீழ்த்திட 
நிர்வாகம் ஒன்றுபட்டு நிற்கிறது...

ஒன்றுபட வேண்டிய நாம் 
ஓரமாய் நிற்கலாமா?

கொடுமைதனைக் கண்டு நாம்
அடிமை போல்  இருக்கலாமா?

உணர்வை நாம் இழக்கலாமா?
உரிமையை   நாம் தொலைக்கலாமா?

ஒன்று படுவோம்... போராடுவோம்..
வெற்றி பெறுவோம்..
வாரீர்... தோழர்களே...
TTA இலாக்காத்தேர்வு முடிவுகள் 

07/06/2015 அன்று நடைபெற்ற 
TTA இலாக்காத்தேர்வு 
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் உள்ள  439 காலியிடங்களுக்கு 
74 தோழர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். 
இரண்டு தோழர்களின் முடிவுகள் 
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காரைக்குடி மாவட்டத்தில் 
தேர்ச்சி பெற்றுள்ள கீழ்க்கண்ட 
தோழர்களை வாழ்த்துகின்றோம்.

  1. M.விவேகானந்தன் - TM - பாம்பன் 
  2. M.முத்துக்குமாரவேலு - SR.TOA - பரமக்குடி 
  3. K.இராஜா - TM - சிவகங்கை 
  4. L.வாசு பாஸ்கரன் - DRIVER - STR காரைக்குடி.
அஞ்சலி 

அஞ்சல் தொழிற்சங்க இயக்கத்தின் 
முதுபெரும் தலைவரும் 
தமிழக அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின்
 முன்னாள் மாநிலச்செயலருமான

தோழர். 
NT.இராஜன் 

அவர்கள் இன்று 24/08/2015 
சென்னையில் உடல்நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.

இலாக்கா விசாரணைகளில் 
ஊழியருக்கு ஆதரவாக வாதாடி 
தனி முத்திரை பதித்தவர் 
தோழர்.இராஜன் அவர்கள்..

மூத்த தோழர்.பிரமநாதனுடன் 
இணைந்து பணியாற்றி சங்கம் வளர்த்தவர்
தோழர்.இராஜன் அவர்கள்.

அவர்களது மறைவிற்கு 
நமது செங்கொடி தாழ்த்திய 
அஞ்சலி உரித்தாகுக..

Sunday 23 August 2015

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
==============================  
மாவட்டச்செயற்குழு
==============================  

31/08/2015 - திங்கள் - காலை 10 மணி 
NFTE சங்க அலுவலகம் - காரைக்குடி.

-: தலைமை :- 
தோழர். P. காந்தி - மாவட்டத்தலைவர் 

-: விவாதப்பொருள் :- 

  • செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம் 
  • நிரந்தர ஊழியர் பிரச்சினைகள் 
  • ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் 
  • கவனிப்பாரற்ற காரைக்குடி மாவட்டம் 

-: சிறப்புரை :​- 
தோழர்கார்வண்ணன் 
AITUC - சிவகங்கை மாவட்டச்செயலர் 

தோழர்பழ.இராமச்சந்திரன் 
AITUC - மாநிலக்குழு உறுப்பினர் 


கிளைச்செயலர்கள்
மாவட்டச்சங்க நிர்வாகிகள்
தலமட்டக்குழு உறுப்பினர்கள் 
பணிக்குழு உறுப்பினர்கள் 
மற்றும் முன்னணித்தோழர்கள்
 அவசியம் பங்கேற்கவும்...

Friday 21 August 2015

செய்திகள் 

புதிய போனஸ் வரையறையை உருவாக்குவதற்கான 
போனஸ் குழுக்கூட்டம்  31/08/2015 அன்று
 டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
NFTE சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்களும், 
BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் கலந்து கொள்வார்கள்.
===============================================
மாநில நிர்வாகங்கள் தங்கள் பகுதிகளில் 
SIM பற்றாக்குறை இருப்பின் 
உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என 
டெல்லி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
===============================================
DELOITTEE குழு பரிந்துரையின்படி 
SSA எனப்படும் மாவட்ட அமைப்புக்கள் BUSINESS AREA எனப்படும் அமைப்புக்களாக உடனடியாக மாற்றப்பட வேண்டும் என 
டெல்லி நிர்வாகம் UP/MP உள்ளிட்ட 
10 மாநில நிர்வாகங்களை துரிதப்படுத்தியுள்ளது. 
தமிழகம் அடுத்த கட்ட நடவடிக்கையில் இருக்கலாம்.
===============================================
01/01/2007க்குப்பின் பணியில் அமர்த்தப்பட்ட 
TTA அல்லாத  ஊழியர்களின் சம்பள இழப்பை ஈடு கட்ட 
நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றது.
===============================================
பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரையை BSNL நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என வதந்திகள் பரவின. 
நமது மத்திய சங்கம் இதை மறுத்ததுடன்,  குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்படும் என உறுதியாக கூறியுள்ளது.
===============================================
வழக்கம்போல் இந்த ஆண்டும் VRS வதந்தி பரவியது. 
ஆனால் தற்போதைய நிதி சூழலில்.. அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்காத வரையில் விருப்ப ஓய்வு  என்பது சாத்தியமில்லை 
என BSNL அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.
===============================================
7வது ஊதியக்குழு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் 
இதனால் அரசுக்கு 16 சத கூடுதல் ஊதிய சுமை ஏற்படும் எனவும் 
அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அஞ்சலி 

நமது NFTE சம்மேளனத்தின் 
முன்னாள் அகில இந்தியத்தலைவரும்
 மேற்குவங்க  தந்திப்பிரிவு இயக்கத்தலைவருமான 
அருமைத்தோழர்.
GC.பாவல் 
அவர்கள் உடல்நலக்குறைவால் 
21/08/2015 அன்று இயற்கை எய்தினார். 

இயக்கப்பணிகளில் அவரது பங்கு மறக்கவியலாதது.
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

Thursday 20 August 2015

ஆகஸ்ட் 21
தோழர். ஜீவா 
பிறந்த தினம் 

பாரதிக்கு முகவரி தந்தான்..
பாட்டாளிக்கு பொதுவுடைமை  சொன்னான்...
எளிமைக்கு இலக்கணம் எழுதினான்...
நேர்மைக்குச்  சின்னமாய்  நின்றான்..
தமிழைத் தலை நிமிர வைத்தான்...
கலை இலக்கியத்தின்.. 
கலங்கரை விளக்கமாய் நின்றான்..

ஜீவனுள்ள தலைவன்...
தோழர்.ஜீவா... 
புகழ் பாடுவோம்...
அருங்கொடை... அழகப்பன் 
வாழ்க... வாழ்க...
தோழர்.அழகப்பன்  TM - காரைக்குடி 

காரைக்குடி NFTE சங்க அலுவலகத்தில் 
கணிப்பொறி வசதி இருந்தாலும்.. 
அச்சு எடுக்கும் இயந்திரம்... 
PRINTER.. வசதி இல்லை..

இலாக்காவிடமோ.. நிதி இல்லை...
கேட்கவோ.. நமக்கு மனமில்லை...
நம் கையே நமக்கு உதவி என 
நமது தோழர்களிடம்  கையேந்தினோம்...

ஏந்திய கைகளில்.. ஏந்தல் போல் 
ஏழாயிரம் தந்து...
அச்சு இயந்திரத்தை.. 
அன்போடு பரிசளித்தார்..
அன்புத்தோழர்.அழகப்பன் அவர்கள்...

மனிதனிடம் பணம் வேண்டும்...
அதைவிட..  கொடுக்கும் மனம் வேண்டும்... 
காரைக்குடி என்றாலே..
நினைவில் நிற்பவர் வள்ளல்  அழகப்பர்தான்..
வள்ளல் பெயர் தாங்கிய அழகப்பன்..
வள்ளல் பெயர் காத்த அழகப்பன்..
வாழ்க.. வாழ்க.. வாழ்க...

Tuesday 18 August 2015

செப்டம்பர் 2 
அகில இந்திய வேலை நிறுத்தம் 
AITUC 
CITU - INTUC 
BMS - HMS -  SEWA -LPF 
AIUTUC  -TUCC - AICCTU - UTUC 
===============================
11 மத்திய சங்கங்களின் 
12 அம்சக் கோரிக்கைகள் 
=================================
மத்திய அரசே...
  1. குறைந்தபட்சக்கூலி மாதம் ரூ.15000/= வழங்கு..
  2. குறைந்தபட்ச  ஓய்வூதியம் மாதம் ரூ.3000/= வழங்கு..
  3. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து...
  4. வேலையில்லாக் கொடுமையை மட்டுப்படுத்து...
  5. பொதுத்துறை பங்கு விற்பனையைக் கைவிடு..
  6. நிரந்தரப்பணிகளில் குத்தகை  ஊழியர்  முறையை ரத்து செய்.. 
  7. போனஸ், பணிக்கொடை மற்றும் வைப்பு நிதி உச்சவரம்பை உயர்த்து...
  8. அனைத்து தொழிலாளருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்..
  9. நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை  உறுதியாக அமுல்படுத்து... எவருக்கும் சட்ட விலக்கு அளிக்காதே..
  10. தொழிற்சங்கப் பதிவு உரிமைகளை நடைமுறைப்படுத்து..
  11.  தொழிலாளர் நலச்சட்டங்களில் தொழிலாளருக்கு எதிரான மாற்றங்களைச் செய்யாதே..
  12. இரயில்வே... ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவத்துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே..

=============================================
NFTE 
BSNLEU - BTEU - FNTO 
BSNLMS - SEWA BSNL -TEPU 
NFTBE - BTUBSNL - SNATTA -BSNLOA 
=================================
BSNL  நிறுவன 
11 ஊழியர் சங்கங்களின்
10 அம்சக்கோரிக்கைகள்...
=================================

 மத்திய அரசே... BSNL நிர்வாகமே...
  1. BSNLலில்  தனியார் நுழைவு மற்றும் பங்கு விற்பனையைக் கைவிடு...
  2. செல் கோபுரங்களைத் தனியாகப் பிரிக்கும் முடிவைக் கைவிடு...
  3. BSNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்க உரிய நிதி உதவி செய்..
  4. BSNL உடன் BBNL நிறுவனத்தை இணைத்திடு...   MTNLநிறுவனத்தை இணைக்காதே..
  5. ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தாதே...
  6. BSNLலில் விருப்ப ஓய்வை அமுல்படுத்தாதே...
  7. அலைக்கற்றைக்கட்டணம்  ரூ.4700/= கோடியை உடனடியாகத் திருப்பி வழங்கு..
  8. அனைத்து சொத்துக்களையும் BSNL பெயரில் மாற்றல் செய்..
  9. இலாபம் இல்லாவிடினும் குறைந்தபட்ச போனஸ் வழங்கு...
  10. BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப்பலன்கள் வழங்கு...

மத்திய அரசிற்கு 11 மத்திய சங்கங்களும் 
இணைந்து போராட்ட அறிவிப்புக் கொடுத்துள்ளன..
நமது நிறுவனத்தில் 10 சங்கங்கள் இணைந்தும் 
FNTO சங்கம் 14/08/2015 அன்று தனியாகவும் 
போராட்ட அறிவிப்பு செய்துள்ளன...

தோழர்களே...
ஆண்டுகள் 68 உருண்டோடியும்...
அல்லல் வாழ்வு அகன்றபாடில்லை...

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே..
விதிகளை  உருவாக்கலாம்... 

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே...
விதிகளைக் காக்கலாம்...

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே..
விதிகளை  மாற்றலாம்... 

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே...
நாட்டைக்காக்கலாம்...
நம்மையும் காக்கலாம்...

புதிய விதி சமைக்க...
புதிய தேசம் படைக்க..
புதிய களம் காண்போம் தோழர்களே...

Sunday 16 August 2015

வேலை நிறுத்த முனைப்புக்கூட்டம் 

செப்டம்பர் 2 
அகில இந்திய 
வேலை நிறுத்த 
முனைப்புக்கூட்டம் 

சிவகங்கை மாவட்ட 
அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்பு 

17/08/2015 
திங்கள் - மாலை 5 மணி 
SV மகால்  - பேருந்து நிலையம் அருகில் 
 சிவகங்கை. 

-: தலைமை :- 
தோழர்.குணசேகரன் 
சிவகங்கை சட்டமன்ற  உறுப்பினர் 

கிளைச்செயலர்களும் 
முன்னணித்தோழர்களும் 
கலந்து கொள்ளவும்.

Saturday 15 August 2015

மாநிலச்செயலர்கள்  கூட்ட முடிவுகள்

நமது NFTE  சங்கத்தின் மாநிலச்செயலர்கள் கூட்டம்
 டெல்லியில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
============================================
தேசம் முழுவதுமுள்ள BSNL  செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து
புதிய துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும்  அரசின் மோசமான முடிவை எதிர்த்து அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து  போராட்டக்களம் காண மத்திய சங்கம் முழு முயற்சி செய்ய வேண்டும்.
============================================
BSNL நிறுவனத்தை சீர்குலைக்கும் மற்றொரு முயற்சியாக 
நமது அகன்ற அலைவரிசை இணைப்புகளில் உருவாகும் பழுதுகளை நீக்கும் பணியை சில குறிப்பிட்ட மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் தனியாருக்கு விடுவதற்கு எத்தனிக்கும் நிர்வாகம் தனது ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து மேற்கண்ட மோசமான முடிவைக் கைவிட வேண்டும்.
============================================
DELOITTEE  குழு பரிந்துரையின் பாதகங்களை மாநிலச்செயலர்கள்  கூட்டம் விரிவாக விவாதித்தது.  DELOITTEE  குழு பரிந்துரை அமுலாக்கத்தில்  எந்தவொரு இறுதி முடிவு எடுப்பதற்கும்   
முன்பு சங்கங்களைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து 
ஏற்பட்ட பின்னரே முடிவுகளை அமுலாக்க வேண்டும்.
============================================
உற்பத்தியோடு இணைந்த போனஸ் வழங்கும் விவகாரத்தில் தற்போதைய போனஸ் குழுவின் செயல்பாடுகளை மாநிலச்செயலர்கள் கூட்டம் பாராட்டுகிறது. வரும் தீபாவளிக்குள் சாதகமான முடிவு எட்டப்பட வேண்டும். அவ்வாறு எட்டப்படாத பட்சத்தில் 
மத்திய சங்கம் போராட்ட அறிவிப்பு செய்திட வேண்டும்.
============================================
ஊழியர்கள் பெயர் மாற்றக்குழுவின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. அதே நேரம் அதிருப்திக்கு ஆளான SR.TOA தோழர்களின் பெயர் மாற்றம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். NE-10ல் உள்ள தோழர்கள் துணைக்கண்காணிப்பாளர்கள் என்றும், NE-9ல் உள்ள தோழர்கள் உதவிக்கண்காணிப்பாளர்கள் என்றும் அழைக்கப்பட வேண்டும்.
============================================
இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் மோசமான தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து செப்டம்பர் 2ல் நாடு முழுக்க நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் NFTE முழுமையான பங்கு பெற வேண்டும்.
சுதந்திர தினக் கொடியேற்றம் 
தோழர்.சங்கரன் சுதந்திர தின உரையாற்றுகின்றார்.

காரைக்குடியில்..
சுதந்திர தினத் திருநாளன்று 
நமது சங்கக்கம்பத்தில்..
பாட்டாளிகளின் செங்கொடிக்குப் பதிலாக 
பாரத தேசத்தின் மணித்திருக்கொடி 
பட்டொளி வீசிப் பறப்பது 
தொன்று தொட்ட வழக்கம்...

இந்த ஆண்டும்.. 
சுதந்திர தினக் கொடியேற்றம் 
சிறப்பாக நடைபெற்றது..
அலுவலக கண்காணிப்பாளர் - OFFICE SUPERINTENDENT
மூத்த தோழர்.சுந்தர்ராஜன் அவர்கள் 
தேசத்திருக்கொடியை ஏற்றி வைத்தார்..
விடுதலையின் விலை பற்றியும் 
தேசத்தின் நிலை பற்றியும் 
தோழர்.நாகேஸ்வரன் முழக்கமிட்டார்..

தோழர்.முருகன்,சுபேதார்,மாரிமுத்து,சங்கரன்,துரைப்பாண்டி 
ஆகிய தோழர்கள் சுதந்திரதின கருத்துரையாற்றினர்..
இளநிலைப் பொறியாளர் - JUNIOR ENGINEER 
தோழர்.நெப்போலியன் நன்றி கூற
கொடியேற்று விழா
இனிப்புகள் வழங்கி.. இனிதே முடிந்தது...
விடுப்பு என்னும் சோம்பல் விடுத்து..
கலந்து கொண்ட தோழர்களுக்கு 
வாழ்த்துக்களும்.. வணக்கங்களும்..