Tuesday 10 May 2016

தேர்தல் திருவிழா 

10/05/2016 அன்று நாடு முழுக்க 
தொழிற்சங்க அங்கீகார ஜனநாயகத் தேர்தல் திருவிழா 
அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

காகித  ஆயுதங்கள்...
இணையதள ஏவுகணைகள்...
மற்போரையும் மிஞ்சிய சொற்போர்கள்...
கத்தியினும் கூர்மையாய்  கத்திய  பேச்சுக்கள்...
ஊரெங்கும் சொல்லால் மல்லுக்கட்டிய  தோழர்கள்..
உற்சவ மூர்த்திகளாய் ஊர் வலம் வந்த தலைவர்கள்..

உணர்வு ஒன்றுபட்டது..
BSNL ரெண்டுபட்டது...
திருவிழா இனிதே முடிந்தது...
தேர் நிலைக்கு வந்தது...

எத்தனை.. எத்தனை.. திருவிழாக் காட்சிகள்...

தந்தைக்கு கொள்ளி வைப்பதை தள்ளி வைத்து...
நாக்கு தழுதழுத்த  நிலையிலும் வாக்களித்த கனகராஜ்...

அண்ணன் இறந்த அதிர்ச்சியையும் தாங்கி..
அமைதியாய் வாக்களித்துச்சென்ற நாகராஜ்...

பக்கவாதம் பாடாய்ப் படுத்திய நிலையிலும்.. 
காலூன்ற முடியாமல் கோலூன்றி வாக்களித்த பாண்டிக்குமார்...

தோழர்களின் அற்புத செயல்கள்..
நம் நெஞ்சை நிறைக்கிறது...
கூடவே சில அற்பர்களின் செயல்களும் 
நம் நெஞ்சை வதைக்கிறது...

பூட்டிய பெட்டிகள் நாளை திறக்கும்..
வருங்கால நாட்களைத்  திறக்கும்...
காத்திருப்போம்... தோழர்களே...

6 comments: