Thursday 30 June 2016

கார்த்தி நிவாரண நிதி 

தோழர்.கார்த்தி குடும்ப நிவாரண நிதியை 
08/07/2016 அன்று பரமக்குடியில் நடைபெறவுள்ள
 காரைக்குடி மாவட்ட மாநாட்டில் அவரது தாயாரிடம்  
வழங்கிட மாநிலச்சங்கம் பணித்துள்ளது. 

விருதுநகர்,மதுரை,திருச்சி,ஈரோடு போன்ற மாவட்டச்சங்கங்கள் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளன. கடலூர் மாவட்டம் சார்பாக தோழர்.ஸ்ரீதர் ரூ.10,000/= நிதியளித்துள்ளார். கடலூர் மாவட்டத்தின் சார்பாக ரூபாய் பத்தாயிரம் இலக்கு என்று நிர்ணயம் செய்து முழுமையாக நிதி  வசூலாகாத நிலையிலும் தனது சொந்தப்பணத்தில் இருந்து  தோழர்.ஸ்ரீதர் பத்தாயிரம் நிதியளித்துள்ளார். 
ஸ்ரீதருக்கு நமது நன்றிகள் பல. 

தோழர்.கார்த்தி குடும்ப நிவாரண நிதி 
ரூபாய் ஒரு லட்சம் என்பது நமது இலக்கு. 
ஏனைய மாவட்டங்களின் பங்களிப்பு போக 
ஒரு லட்சத்தை நிரப்ப வேண்டியது 
காரைக்குடித் தோழர்களின் கடமையாகும். 

காரைக்குடித்தோழர்கள் தங்களின் கடமையை நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் கடலூர் ஸ்ரீதரின் வழியைப் பின்பற்றுவோம். 
நமது கடமை முடிப்போம்.
ஜூலை IDA  உயர்வு 

01/07/2016 முதல்  IDA  
2.4 சதம்  உயர்ந்துள்ளது.
இத்துடன்  மொத்தப்புள்ளிகள்   114.8 தம்.
  (112.4 + 2.4)

Wednesday 29 June 2016

முகவை மண்ணின்...முகமே வாழ்க...
தோழர். B.ஜெயபாலன் - இயக்குநர் - இராமநாதபுரம்
துணைவியார் திருமதி.கோவிந்தம்மாள் 
ஆலும்... வேலும் பல்லுக்கு உறுதி...
இது ஆன்றோர்கள் வாக்கு...

பாலும்... வேலும் சங்கத்துக்கு உறுதி...
இது நம் அனுபவ வாக்கு...

தோழர் ஜெகனுக்கு... 
சோறு கூட போடாமல்... 
ஊறு செய்த ஊரிலே...

அன்றைய இராமநாதபுரத்தில்...
செங்கொடியின் அடையாளமாய்...
மூன்றாம் பிரிவில் தோழர்.ஜெயபாலன்..
நான்காம் பிரிவில் தோழர்.வேலுச்சாமி...
NFTE  இயக்கத்தின்.. 
ஆணிவேர்களை... ஆதிவேர்களை... 
அவசியம்  நாம் போற்றிட வேண்டும்...

தோழர்.ஜெயபாலன்...
இன்று SUPERINTENDENT... 
அன்று SUPER TREND...

இயக்குனர் பேரரசின் இளவரசன்...
தொலைபேசித்துறையின் பேச்சரசன்...

கலரிலே MGR...
காதலிலே ஜெமினி...

அப்பா பால்பாண்டியன் காவல்துறை...
அன்பான ஜெயபாலன் காதல்துறை...

கோவிந்தம்மாளைக்  காதலித்தார்... 
வாழ்க்கைத்துணையாய் கைப்பிடித்தார்...

கடமையில் செம்மை...
காட்சிக்கு எளிமை...

நண்பர்களிடம்  இனிமை...
நலம் தரும் பொறுமை...

தோற்றத்தில் கவர்ந்திடும்  இளமை...
NFTE இயக்கத்தில் என்றும் தலைமை...

இன்று 30/06/2016  பணி நிறைவு பெறும் 
இராமநாதபுரம் கிளையின் தலைவனே...
இன்று போல் நீ... என்றும் வாழ்க...


வாழ்த்துக்களுடன் 
NFTE மாவட்டச்சங்கம் - காரைக்குடி.
------------------------------------------------------------
வாழ்த்து சொல்ல  -  9443134155
பணி நிறைவு...வாழ்த்துக்கள் 

காரைக்குடி மாவட்டத்தில் 
இன்று 30/06/2016 
பணி நிறைவு பெறும்  தோழர்களுக்கு 
நமது நல்வாழ்த்துக்கள்...
          • B.ஜெயபாலன் SUPDT/RND
          • M.முத்துமீனாள் TECH/KKD
          • K.விநாயகம் SUPDT/SVA 
          • N.முருகேசன் SUPDT/PMK
          • S.தர்மன் TECH/PMK
          • A.சிவக்குமார் SUPDT/KKD
          • A.ஆல்பர்ட் TECH/KKD
          • U.குழந்தைச்சாமி TECH/KMM
          • V.கிருஷ்ணமூர்த்தி TECH/PMK
புது வாழ்வு மலரட்டும்...
புதுமை வாழ்வில் மலரட்டும்.....

Tuesday 28 June 2016

கிளை மாநாடுகள் 

NFTE
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
GM அலுவலகம் மற்றும் புறநகர்க்கிளைகள் 
காரைக்குடி.

இணைந்த  கிளை மாநாடு
தோழியர்.முத்துமீனாள் TM 
பணி நிறைவு பாராட்டு விழா 
30/06/2016 -  வியாழன்  - காலை 10 மணி 
அமராவதி மகால்  - காரைக்குடி.

  • அஞ்சலி 
  • வரவேற்பு 
  • செயல்பாட்டறிக்கை 
  • நிதி அறிக்கை 
  • அமைப்பு நிலை 
  • தீர்மானங்கள் 
  • புதிய நிர்வாகிகள் தேர்வு 
  • வாழ்த்துரை 
  • நன்றியுரை 


சிறப்புரை :  தோழர்.சேது 

தோழர்களே... வருக... வருக...
அன்புடன் அழைக்கும்...

S.இராஜேந்திரன் - GM அலுவலக  கிளைத்தலைவர்  
G.சுபேதார் அலிகான் - GM அலுவலக கிளைச்செயலர் 

V.ஆறுமுகம் - புறநகர்க் கிளைத்தலைவர்  
M. ஆரோக்கியதாஸ் - புறநகர் கிளைச்செயலர்

Monday 27 June 2016


BSNL  சங்க அங்கீகார விதிகளின்படி 
மொத்த ஊழியர்களில் 50 சதத்திற்கும் மேல் 
வாக்குகள் பெற்ற சங்கம் ஏகபோக சங்கமாக...
BSNLலில் அங்கீகாரம் பெற்ற ஒரே சங்கமாக அறிவிக்கப்படும். 

 50 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று 
ஒரே சங்கமாக கோலோச்சும் கனவில் இருந்த BSNLEU  
நடந்து முடிந்த தேர்தலில் மொத்த வாக்குகளில்  50 சதத்திற்கும் குறைவாகப் பெற்றதால் அதன் ஒரு சங்க நப்பாசை தகர்ந்தது. 

எனவே BSNLன்  சங்க அங்கீகார விதிகளை எதிர்த்து
 ஆந்திர உயர்நீதிமன்றத்தில் BSNLEU சங்கத்தைச்சேர்ந்த 
M.தாரநாத் என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார். 

ஒரே சங்க அங்கீகாரத்திற்கு 50 சதம் என்பதை
 மொத்த வாக்குகள் அடிப்படையில் கணக்கிடக்கூடாது எனவும், 
பதிவான வாக்குகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும்...
 JCM தலைவர்,செயலரைத் தேர்ந்தெடுக்க  ஊழியர்களுக்கு 
உரிமை வழங்க கோரியும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.  
மேற்படி வழக்கு 04/07/2016 அன்று விசாரணைக்கு வருகிறது.

ஆனால் BSNLEU மத்திய சங்கம் மேற்படி வழக்கில் 
தனக்கோ... ஆந்திர மாநிலச்சங்கத்திற்கோ 
எந்தவித  சம்பந்தமும் இல்லை என அறிவித்துள்ளது. 
வம்புM - வழக்குM BSNLEU சங்கத்திற்குப் புதியதல்ல. 
இது நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். 

இருப்பினும்... செங்கொடித்தோழர்கள்...
செத்தாலும்  பொய் சொல்லமாட்டார்கள்...  
என்ற உலகளாவிய நம்பிக்கையின் அடிப்படையில் 
BSNLEUவின் வாக்குமூலத்தை நாமும் நம்புவோம்.
ஓங்கட்டும்... இடது சாரி ஒற்றுமை... 

Saturday 25 June 2016

red flagred flagred flagred flagred flagred flagred flagred flagred flagred flagred flagred flagred flag
NFTE - தமிழ் மாநில மாநாடு -வேலூர் 
red flagred flagred flagred flagred flagred flagred flagred flagred flagred flagred flagred flagred flag


செங்கொடி பறக்கட்டும்...
தமிழகத்தில் நம் கொடி பறக்கட்டும்...
ஒற்றுமை சொல்லி... ஓங்கிப் பறக்கட்டும்...
உரிமைகள் காத்திட.. உயர்ந்து பறக்கட்டும்... 
நியாயங்கள் வாழ்ந்திட... நிமிர்ந்து பறக்கட்டும்...
நிறுவனம் காத்திட... நிலைத்துப் பறக்கட்டும்...
ஊறு செய்வோரை வீழ்த்தி.. வீறு கொண்டு பறக்கட்டும்...
பொதுவுடமை இயக்க வழியில் பொலிவாய்ப் பறக்கட்டும்
வேலூர் கோட்டையிலே...விண்ணுயரப் பறக்கட்டும்..
விண்ணகம் சென்ற நம் மன்னவர்கள்...

குப்தா...ஜெகன்... பேரு  சொல்லிப் பறக்கட்டும்...

Wednesday 22 June 2016

விண்ணில்  பறக்குது... நம் கொடி...
இருபது செயற்கைக்கோள்களை சுமந்து PSLV - C 34  விண்ணில் பறக்கும்  காட்சி 

விண்ணில் பறக்குது நம் கொடி 
வீறு கொண்டு எழுகுது நம் கொடி...

அறிவில் உயர்ந்தது  நம் கொடி...
அறிவியலில் உயரட்டும் நம் கொடி...

இருபது செயற்கைக் கோள்களை 
இணைந்தே  விண்ணில் அனுப்பி..

இமாலய சாதனை செய்த...
இஸ்ரோவை வாழ்த்துகிறோம்...
இந்திய தேசம் வணங்குகிறோம்...
  J.E., (TTA) - OUTSIDERS  ஆளெடுப்பு 

நாடு முழுவதும் 2700 JE  - (முன்னாள் TTA) 
இளநிலைப் பொறியாளர்களுக்கான 
ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • விண்ணப்பிக்கும் நாள் : 10/07/2016
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10/08/2016
  • தேர்வு நாள்  : 25/09/2016
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு இணையதளம் மூலம் நடைபெறும்.

தமிழகத்தில் 198 காலியிடங்கள் - 
உடல் ஊனமுற்றோருக்கு 6 காலியிடங்கள் 
OC -105      OBC - 53     SC - 38     ST - 2

Tuesday 21 June 2016

வெற்(று)றிக்கூச்சல்


CMDக்கு நன்றி...
CMDயின் வார்த்தைகளுக்கு நன்றி...
CMDயின் கூற்றுக்கு நன்றி...

BSNLEU சங்க தகவல் பலகையிலும்...
இணைய தளங்களிலும் தென்பட்ட..
மேற்படி வாசகங்களைக் கண்டு...
அப்பப்பா...
நமக்கு மேனி சிலிர்த்து விட்டது...

அப்படி என்னதான் நமது CMD சொல்லி விட்டார்?...
மைசூருவில் நடந்த
AIBSNLEA அதிகாரிகள் சங்கத்தின்
அகில இந்திய மாநாட்டில் நமது CMD..
 "We will make 3rd PRC a success." 
என்று தனது வாழ்த்துரையில் கூறியுள்ளார்.
அதாவது... அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றத்தை
நாம் வெற்றிகரமானதாக மாற்றுவோம்" என்று கூறியுள்ளார்.

இதே CMD .. இதே கர்நாடகாவில்...
சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில்...
" BSNL நட்டத்தில் இயங்குகிறது...
எனவே BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்திற்கு வழியில்லை"
என்று பத்திரிக்கையாளர்களிடம் அறிக்கை விடுத்தார்...

இன்று... இதே CMD.. 
இதே கர்நாடகாவில்...மைசூருவில்...
அதிகாரிகளின் சம்பள மாற்றத்தை 
வெற்றியாக்குவோம் என கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கு ஒன்றுமில்லை என்று பெங்களூருவில் கூறியவர்...
அதிகாரிகளுக்கு அள்ளித்தருகிறோம் என்று மைசூருவில் கூறியுள்ளார்...

CMDயின் இந்தப் பாரபட்ச பேச்சு.. 
ஊழியர்களுக்கும்... ஊழியர்  சங்கங்களுக்கும்.. 
கோபத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்...
மாறாக... அவருடைய பேச்சு 
தங்களது சாதனை என்று மார்தட்டும் 
காட்சியைத்தான் நாம் இன்று காண்கின்றோம்...

அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றத்தை 
வெற்றியாக்குவோம் என்று சொன்ன CMD...
" ஊழியர்களின் சம்பள மாற்றத்திற்கான 
இருதரப்பு ஊதியக்குழுவை அமைப்போம்...
ஊழியர்களின் ஊதிய மாற்றத்தை வெற்றியாக்குவோம்"
என்று மனம்  மலர்ந்தருளியிருந்தால்...
எல்லா தரப்பு ஊழியர்களும்  நன்றியை வெளிப்படுத்தியிருப்பார்கள்...

இந்திய தேசத்தில்...
உழைப்பாளிகளுக்கான சம்பள உயர்வு என்பது..
எல்லாக்காலங்களிலும்  எட்டாக்கனியாகவும்...
கையில் கிடைத்த பின்பு எட்டிக்காயாகவும் மட்டுமே இருந்துள்ளது.
தோழர் இந்திரஜித்குப்தா காலம் மட்டுமே விதிவிலக்கு...

ஊதிய மாற்றத்தில் நாம் பயணிக்க வேண்டியது வெகுதூரம்...
அது வரை வெற்றுக்கூச்சல்களில்..
நமது சக்தியை விரயமாக்காமல் இருப்போம்....

Monday 20 June 2016

நேர்மை வளர்த்திட... நல்வாழ்த்துக்கள்...

விருதுநகர் மாவட்ட மாநாடு 18/06/2016 அன்று 
விருதுநகரில் தோழர்.தளவாய்பாண்டியன் அவர்கள்
 தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 

தோழர்கள்.ஆர்.கே., சேது, பட்டாபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.இராமசாமி. துணைப்பொதுமேலாளர் திரு.இராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். BSNLEU தவிர அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர். 

சென்ற இராஜபாளையம் மாநாட்டில் மாநாடு துவங்குவதற்கு 
முன்பே  பதவிகளுக்குப் போட்டி என்ற நிலை உண்டாகியது.
இம்முறை ஒருமித்த கருத்துடனே மாநாடு துவங்கி
 ஒன்றுபட்ட பட்டியலைத் தேர்வு செய்தது.

மாவட்டத்தலைவர் தோழர்.இராகவன் அவர்களுக்கும் 
மாவட்டச்செயலர். தோழர்.இராம்சேகர் அவர்களுக்கும் 
மாவட்டப்பொருளர் தோழர். செல்வராஜ் அவர்களுக்கும் 
மற்றும் ஏனைய மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கும் 
நமது வாழ்த்துக்கள் உரித்தாகுக...

ஊழலும்... ஒழுக்கமின்மையும்... 
ஒருசேர நடமாடும் விருதுநகரில்.. 
நேர்மை போற்றிட.. கண்ணியம் காத்திட...
NFTEன் மரபு வளர்த்திட... 
தோழர்களை வாழ்த்துகிறோம்...

Friday 17 June 2016

வறியார்க்கு ஈவதே ஈகை...


வறியார்க்கொன்று ஈவதே ஈகை  மற்றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து...
என்ற குறளில் வறியவருக்கு  உதவுதே ஈகை என்கிறார்  வள்ளுவர்...

இது புனித ரமலான் மாதம்....
ஜக்காத் என்னும் தானங்களை 
வறியவருக்கும், தரித்திரருக்கும் வழங்குவது என்பது 
ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும் என்கிறது புனித திருக்குர் ஆன்...

தோழர்.கார்த்தியின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டுவது 
காரைக்குடி தோழர்களின் கடமை என்று நாம் சுட்டியிருந்தோம்...

17/06/2016  அன்று காரைக்குடி சங்க அலுவலகத்தில் 
நடைபெற்ற கிளைக்கூட்டத்தில் 

மாவட்ட உதவிச்செயலர் தோழர். B.லால் பகதூர்  ரூ.5000/=
GM அலுவலக முன்னணித்தோழர். S.இராஜேந்திரன் - Supdt - ரூ.3000/=
மாவட்டப் பொருளாளர் தோழர்.A .ஜெயராமன் - TM  ரூ.2000/=

என மனமுவந்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
அவர்களது ஈகை குணம் வளரட்டும்....
மற்ற தோழர்களும்... 
ஈகை என்னும் இணையற்ற செயல் புரிந்திட  
அன்புடன் வேண்டுகிறோம்...

Thursday 16 June 2016

வீர வாஞ்சி - துயரமும்... பெருமிதமும் 

1911 -  ஜூன் - 17 

ஆணவமும் அதிகாரத்திமிரும் கொண்ட 
ஆஷ் கலெக்டரை வீர வாஞ்சிநாதன்
சுட்டுக்கொன்ற பெருமிதமிக்க நாள்.

ஆங்கிலேயரின் கையில் தான் 
அகப்படலாகாது என தன்னைத்தானே 
வீர வாஞ்சி சுட்டுக்கொண்ட துயரமிக்க நாள்...


2011 - ஜூன் -17
ஆஷ் கொலையின் நூற்றாண்டு தினத்தில்...
ஜூன் 17 பெருமிதமும் துயரமும் மிக்க நாள் என்று...
வாஞ்சியின் வாரிசுகளுக்கு எழுதிய கடிதத்தில்..   
ஆஷ் கலெக்டரின் வாரிசுகள்  குறிப்பிட்டார்கள்...
---------------------------------------------------------------------------
துயரமும்.. பெருமிதமும் 
ஒருங்கே அமையப்பெற்ற  இந்த நாளில்... 
இராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் வாரிசுகளாகிய நாங்கள் 
இலட்சியத்திற்காகவும்.. விடுதலைக்காகவும் பாடுபட்ட 
வாஞ்சி அய்யரின் குடும்பத்திற்கு 
அன்பையும்... ஆறுதலையும்.. நட்பையும் 
வெளிப்படுத்தும் விதமாக  இந்தக் கடிதத்தை எழுதுகின்றோம்.

விடுதலை வேட்கை கொண்ட 
உங்கள் தாத்தா வாஞ்சியின் செயல் 
அதிகார வேட்கை கொண்ட 
எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது.

அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு 
அதி தீவிரமாகச் செயல்படுபவர்களும்...
அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளில் 
அதி தீவிரமாகச் செயல்படுபவர்களும்...
சமயங்களில் பெரும்பிழை செய்யும் சூழல் ஏற்படுகிறது.

நமது தாத்தாக்களின் முடிவே இதற்குச்சான்று...

நமது முன்னோர்கள் மறைந்து விட்டார்கள்..
ஆனால்  உயிர் வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ள நாம் 
அவர்களின் நினைவுகளோடு...
பழையவற்றை மறந்து...
அன்பையும்... அமைதியையும் போற்றி 
சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது...

அன்புடன் 
இராபர்ட் ஆஷ் குடும்பத்தினர்..
அயர்லாந்து..
-------------------------------------------------------------------------------------------------------------------

வாஞ்சியின் தியாகமும்..
ஆஷ் குடும்பத்தினரின் மடலும்.. 
நம் சிந்தனைக்குரியது...

Wednesday 15 June 2016

இருதரப்பு ஊதியக்குழு அமைத்தல் 

பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றக்குழு அறிவிக்கப்பட்டது தோழர்கள் அறிந்ததே. அதனையொட்டி 
பொதுத்துறை ஊழியர்களின் சம்பள மாற்றத்திற்கான இருதரப்பு பேச்சுவார்த்தை  ஊதியக்குழு BILATERAL WAGE  NEGOTIATING COMMITTEE அமைப்பதற்கு அந்தந்த பொதுத்துறைகளுக்கு வழிகாட்டுதல் வழங்கி உத்திரவிட DPE இலாக்கா செயலருக்கு நமது மத்திய சங்கம் 
14/06/2016 அன்று கடிதம் எழுதியுள்ளது.
=======================================================================
வீட்டு வாடகைப்படி
78.2 சத IDA  சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி 
HRA வழங்க வேண்டும் என நமது சங்கம் தொடர்ந்து BSNL  நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றது.  தற்போது BSNL  நிதி நிலை சீரடைந்து வருவதால் உடனடியாக மேற்கண்ட கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகத்திற்கு 
நமது மத்திய சங்கம்  கடிதம் அளித்துள்ளது.
=======================================================================
வங்கிக்கடன் ஒப்பந்தம்
ORIENTAL BANK OF COMMERCE  வங்கியுடன் போடப்பட்ட 
BSNL ஊழியர்களுக்கான  கடன் வழங்கும் ஒப்பந்தம்
 05/04/2017 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
=======================================================================
இளநிலைப் பொறியாளர்  பயிற்சி முறை மாற்றம் 

முன்னாள் TTAவான  இந்நாள் JUNIOR ENGINEER பதவிக்கு 
பயிற்சி மையங்களில் 10 வார காலப்பயிற்சி  அளிக்கப்பட்டு வந்தது. தற்போது பயிற்சி முறையில் மாற்றம் செய்து நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. அதன்படி பயிற்சி மையத்தில்... 
6வார கால அடிப்படைப்பயிற்சியும்
4 வார காலம்  FIELD TRAINING 
 செயல்முறைப்பயிற்சியும் அளிக்கப்படும். செயல்முறைப்பயிற்சிக்குப்பின் பயிற்சியாளர்கள் 
மீண்டும் பயிற்சி மையங்களுக்கு சென்று தங்களது
 பணி நியமன உத்திரவைப் பெற வேண்டும். 

நிர்வாகத்தின் இந்தப்போக்கைப் பார்க்கும்போது...
 TECHNICIAN என்ற TTA என்ற JEக்களை 
ஊழியர்கள் NON-EXECUTIVE என்னும் பிரிவில் இருந்து பிரித்தெடுத்து  மற்ற பொதுத்துறைகளில் உள்ளது போல் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பிரிவாக மாற்றுவதற்கான முயற்சியாகத் தெரிகிறது. 
=======================================================================
ஓய்வூதியக் கணக்கீடு 

BSNLலில் ஓய்வு பெறும் தோழர்களுக்கான ஓய்வூதியக் கணக்கீடு தற்போது MANUAL கையேட்டு முறையில் செய்யப்பட்டு வருகிறது. இனிமேல்  ஓய்வூதியக்கணக்கீட்டை கணிணியில்  ERP மூலம் கணக்கிட்டுக் கொள்ள SAPல் வசதி செய்யப்பட்டுள்ளது. 
ஜூன் 2016 முதல் இந்த வசதியை சம்பளம் தயார் செய்யும் 
அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Tuesday 14 June 2016

தோழர்.கார்த்தி குடும்ப நிவாரண நிதி...
காரைக்குடித் தோழர்களின் கவனத்திற்கு...


சென்னை ஜெகன் இல்லத்தில் பணிபுரிந்த அன்புத்தோழன் 
கார்த்தியின் அகால மரணம் நமது தோழர்கள் அறிந்ததே... 
தோழர்.கார்த்தியை நம்பி இருந்த அவரது குடும்பத்தினர் 
மிகவும் பொருளாதார சிரமத்தில் உள்ளனர். 
அந்தக்குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது நமது கடமை. 
நமது மாநிலச்சங்கம் அளித்துள்ள தகவலின்படி ஏறத்தாழ 40 ஆயிரம் ரூபாய் தற்போது நிவாரண நிதியாக வந்துள்ளது. குறைந்தபட்சம் 
ஒரு லட்சம் நிவாரண நிதி என்பது நமது இலக்கு. 

இன்னும்... திருச்சி, தஞ்சை,கடலூர், ஈரோடு, மதுரை,விருதுநகர்,பாண்டி,நெல்லை மற்றும் நாகர்கோவில்  மாவட்டங்கள் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டியுள்ளது.  

தோழர். கார்த்தி காரைக்குடி மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியராய்ப் பணிபுரிந்து.. நம்மால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதால் நமக்கு மற்ற மாவட்டங்களை விடக்கூடுதல் பொறுப்புள்ளது. 

எனவே தோழர் கார்த்தியை நன்கு அறிந்த, அவரோடு நட்புக்கொண்ட, அவரோடு பணி புரிந்த காரைக்குடி  மாவட்டத்தோழர்கள் தங்கள் பங்கை உடனடியாக.. கூடுதலாக.. அளிக்க வேண்டும். 

நமது ஒவ்வொரு துளி உதவியும்...
கார்த்தி குடும்பத்தின் கண்ணீர்த்துளி துடைக்க உதவும்...
மறவாதீர்... தோழர்களே...
இது.. நமது அன்பு வேண்டுகோள்...
விருதுநகர் மாவட்ட மாநாடு 

NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
விருதுநகர் மாவட்டம் 

மாவட்ட மாநாடு
ஸ்ரீ விஸ்வேஸ்வரா அரங்கம் - விருதுநகர் 
தலைமை : மாவட்டத்தலைவர் 
தோழர்.தளவாய்பாண்டியன் 

            • கொடியேற்றம் 
            • கருத்தரங்கம் 
            • வாழ்த்தரங்கம் 
            • பாராட்டரங்கம் 
            • இணையதள துவக்கம் 
            • செயல்பாட்டறிக்கை 
            • நிதியறிக்கை 
            • அமைப்பு நிலை 
            • புதிய நிர்வாகிகள் தேர்வு 


- : பங்கேற்பு :- 
தோழர்.சேது.. 
தோழர். ஆர்.கே.,
தோழர்.பட்டாபி..
திருமதி. இராஜம்.. ITS

மற்றும் தலைவர்களும்... தோழர்களும்...

அனைவரையும் அன்புடன் அழைக்கும் 
R.சக்கணன் 
மாவட்டச்செயலர் 

Monday 13 June 2016

முதல் போன... முதல் தேதி.. 

நமது ஓய்வூதிய விதிகளின்படி முதல் தேதியன்று 
பிறப்பவர்கள்.. அவர்கள் பிறந்த மாதத்திற்கு 
முந்தைய மாதத்திலே பணி ஓய்வு அடைய வேண்டும். 
உதாரணமாக 01/01/1956 அன்று பிறந்தவர்கள் 31/12/2015ல் ஓய்வு பெற  வேண்டும். இது வழக்கமான நடைமுறைதானே.. என நீங்கள் கூறலாம். 

ஆனால் 01/01/1956 அன்று பிறந்த பல மத்திய அரசு ஊழியர்கள்...
பெற்றோர்கள் ஏன் என்னைப் பெற்றார்கள்  முதல் தேதியில்..? என்று மனம் நொந்து உள்ளனர். காரணம்.. 01/01/1956 அன்று பிறந்தவர்கள் 31/12/2015 அன்று பணி ஓய்வு பெற்று விட்டார்கள்.  

7வது ஊதியக்குழு 01/01/2016 முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. 
இந்நிலையில் 01/01/1956 அன்று பிறந்து  31/12/2015 அன்று ஓய்வு பெற்ற தோழர்கள் ஊதியக்குழு பலனை  முழுமையாக அனுபவிக்க முடியாமல் PRE -2016 PENSIONERS என்ற பிரிவிற்குத் தள்ளப்படுவார்கள்.

அதே நேரம்... ஒரு நாள் தாமதமாக 02/01/1956ல்  பிறந்து  31/01/2016ல் ஓய்வு பெற்றவர்கள்  ஊதியக்குழுவின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள். பணிக்கொடை, விடுப்புச்சம்பளம்,ஓய்வூதியம் என அனைத்தும் புதிய சம்பளத்தில் இருக்கும். ஆனால் 01/01/1956 அன்று பிறந்தவர்களுக்கு எல்லாச்சலுகைகளும் பழைய சம்பளத்திலேயே இருக்கும்.   நமது பகுதியில் 01/01/1957 அன்று பிறந்தவர்களுக்கும் 
இதே நிலைதான்...

எனவே 01/01/1956 அன்று பிறந்து 31/12/2015 அன்று ஓய்வு பெற்ற தோழர்கள் தங்களது நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களது வாதத்தின்படி 31/12/2015வரை அவர்கள் சம்பளம் பெறுகின்றனர். ஓய்வூதியம் 01/01/2016லிருந்துதான் வழங்கப்படுகிறது. எனவே அவர்களை PRE -2016 PENSIONERS என அழைப்பது நியாயமில்லை என்று குமுறியுள்ளனர்.

முதல் தேதியில் பிறந்த அரசு ஊழியர்கள்  அந்த மாதத்தின் இறுதியில் ஓய்வு பெற அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கான விதிமுறைத்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். 

இல்லையெனில்... 
உலகமே கொண்டாடும்  ஆங்கிலப்புத்தாண்டில் 
பிறந்த ஊழியர்களுக்கு  இனிமேல் தங்களது  
பிறந்த நாளைக் கொண்டாடவே மனமிருக்காது. 
ஏன் பிறந்தாய் மகனே... முதல் தேதியில்?..
என அவர்களது பெற்றோரும்...
ஏன் பிறந்தாய் அப்பனே... முதல் தேதியில்?...
என அவர்களது பிள்ளைகளும்  கேள்வி கேட்கும் நிலை வரும். 

Friday 10 June 2016

பொதுத்துறை அதிகாரிகளுக்கான 
3வது ஊதிய மாற்றக்குழு 
3rd PAY REVISION COMMITTEE FOR CPSE


பொதுத்துறை அதிகாரிகளுக்கான 
3வது ஊதியக்குழு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில் 
3 உறுப்பினர்களைக் கொண்ட  குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஊதியக்குழு 
தலைவர் : 
நீதிபதி சதீஷ் சந்திரா - RETD JUDGE 

உறுப்பினர்கள் : 
திரு.ஜுகல் மகோபாத்ரா - RETD IAS 
பேராசிரியர்.மனோஜ் பண்டா -DIRECTOR/IEG 
திரு.சைலேந்திர பால்சிங் -  RETD DIRECTOR(HR) /NTPC


  • ஆறு மாத காலத்திற்குள் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். 
  • மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை குழு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • தற்போதுள்ள A, B, C மற்றும் D பிரிவு பொதுத்துறைகளுக்கேற்ப ஊதிய மாற்றம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
  • ஊதிய மாற்றம் 01/01/2017 முதல் அமுல்படுத்தப்படும்.


தோழர்களே...

கடந்த 01/06/2016 அன்று  
NATIONAL CONFEDERATION OF OFFICERS ASSOCIATION 
 என்னும் NCOA 3வது ஊதியக்குழுவை அமைக்கக்கோரி 
டெல்லி DPE அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.  

மேலும் 22/06/2016 அன்று தர்ணாவும்...
27/07/2016 அன்று தலைநகரில் பேரணி 
நடத்திடவும் அறைகூவல் விடுத்திருந்தது. 

பொதுத்துறை அதிகாரிகளின் தேசியக்கூட்டுக்குழுவின்  தொடர்ந்த வலியுறுத்தலால் காலத்தே ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நமது துறையிலும்  ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கான 
பணிகள் விரைவில் துவங்கும்  என நம்புவோம்.                                 

Thursday 9 June 2016

பதவிப்பெயர் மாற்றம் 

ஊழியர்களுக்கான பதவிப்பெயர் மாற்ற உத்திரவு 12/05/2016ல் வெளியிடப்பட்டது. அதனை கீழ்க்கண்டவாறு  நடைமுறைப்படுத்திட BSNL நிர்வாகம் 07/06/2016 அன்று மாநிலம் மற்றும் மாவட்ட  நிர்வாகங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

  • ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்திட வேண்டும்.
  • சேவைக்குறிப்பேட்டில் மாற்றம் செய்திட வேண்டும்.
  • ERPயில் பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.
  • SR.TOA(P ), SR.TOA(G), SR.TOA(T), SR.TOA(TG) என்ற நான்கு பதவிகளும் ஒரே கேடராகக் கருதப்படும்.
  • 12/05/2016ல் இருந்து இது அமுலுக்கு வரும்.

Wednesday 8 June 2016

ஜூலை - 11 முதல் 
மத்திய அரசு ஊழியர் 
காலவரையற்ற வேலை நிறுத்தம் 

7வது ஊதியக்குழுவின்  பாதகமான 
பரிந்துரைகளை எதிர்த்தும்...

மத்திய அரசு ஊழியர்களின்...
11 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும்...

தேசிய கூட்டு நடவடிக்கைக் குழு 
NJCAவின் சார்பாக  
11/07/2016 முதல் 
நாடு தழுவிய 
காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஜூன் 9 - கண்டன ஆர்ப்பாட்டம் 
மற்றும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்குதல்...

போராடும் மத்திய அரசு ஊழியருக்கு 
நமது  வாழ்த்துக்கள்...

Tuesday 7 June 2016

காரைக்குடி...  மாட் மாநாடு

NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம் 
காரைக்குடி 

ஐந்தாவது மாவட்ட மாநாடு 
அறிவிப்பு 

காரைக்குடி மாவட்டச் சங்கத்தின் 
5வது மாவட்ட மாநாடு 
09/07/2016 சனிக்கிழமையன்று பரமக்குடியில்
 மாவட்டத்தலைவர் தோழர். சுந்தரராஜன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்  

  • இயக்கச் செயல்பாட்டறிக்கை... 
  • சங்க நிதிநிலை அறிக்கை...  
  • அமைப்பு நிலை விவாதம்...  
  • BSNL வளர்ச்சியில் நமது பங்கு ... 
  • தொழிலாளர் பிரச்சினைகள்...  
  • பணி நிறைவு பாராட்டு...
  • தலைவர்கள் வாழ்த்தரங்கம் ... 
  • மாநாட்டுத் தீர்மானங்கள்...  
  • அனுமதிக்கப்படும் ஏனைய பிரச்சினைகள்...  
  • புதிய நிர்வாகிகள் தேர்வு... 

அன்புடன்...
க.சுந்தரராஜன்                              அ.ஜெயராமன்                            வெ.மாரி              
மாவட்டத்தலைவர்                  மாவட்டப்பொருளர்           மாவட்டச்செயலர் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
இச்சகத்து மனிதரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்...
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்... 
நச்சை வாயிலே  கொணர்ந்து நண்பர் ஊட்டும் போதிலும்..
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்... 
அச்சமில்லை... அச்சமில்லை... அச்சமென்பதில்லையே...