Sunday 11 September 2016

கெடுப்பார் இல்லானுங் கெடும்..
தோழர்.பட்டாபி அவர்களுக்கு...
தருமபுரி மாவட்டச்சங்கம்..
முப்பெரும் விழா எடுத்து கெளரவிக்கிறது...

மகிழ்ச்சி... நமக்கு.. மிக்க மகிழ்ச்சி..

ஆனால்.. அழைப்பிதழின் அனைத்து இடங்களிலும் 
பட்டாபி.... மாநிலச்செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்..
இதை... 
எழுத்துப்பிழை... எழுத்தர் பிழை... 
என்றே... நாம் எடுத்துக்கொள்வோம்...

ஒரே ஊர்க்காரர்கள் என்பதால்..
புதிய மாநிலச்செயலர்..  தோழர்.. தஞ்சை நடராஜன் 
இதை பெரிது படுத்த வாய்ப்பில்லை...
ஆனாலும் மற்றவர்களுக்கு... இது வித்தியாசமாகப் படும்...

நமது அரங்கில்...
எதிர்க்கருத்து சொல்பவனை ஏளனம் செய்வதும்...
ஒத்து ஊதுபவர்களை உயரத்தில் வைப்பதும்... தொடர்கிறது...
இது... அழகல்ல... இயக்கத்திற்கு ஆரோக்கியமல்ல...

படிப்பறிவை சக்கையாக சாறு பிழிந்து...
அறிவு ரசம் புகட்டும்... தோழர்.பட்டாபியும் 
இது போன்ற செயல்களை நிச்சயம் விரும்ப மாட்டார்...

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் 
கெடுப்பார் இல்லானுங் கெடும்...
என்பது வள்ளுவர் வாக்கு...

2 comments:

  1. Thanks to KKD Com for pointing out the mistake putting pattabi's name as CS.. I request DPI comrades to remove that poster and rectify

    ReplyDelete
  2. தவறை சுட்டுவதும், தவறெனில் திருத்திகொள்வதும் தன் பொதுவுடைசங்கத்திற்கு அழகு சபாஷ்..........

    ReplyDelete