Tuesday 4 April 2017

கோரிக்கைகள் நிறைவேற...
கோடிக்கைகள் போராடுமா?

போன மாதம் வைப்புநிதி GPF வரவில்லை…
இந்த மாதம் விலைவாசிப்படி IDA உயரவில்லை…
கடந்த ஆண்டுக்கான போனஸ் வரவில்லை…
வரும் என்று சொன்ன மருத்துவப்படி வரவில்லை…
எப்படியும் கிடைக்கும் என்று சொன்ன LTCயும் வரவில்லை…
கடைசிக்காலத்தில் சம்பளக்கமிசனாவது வருமா?
என்று ஆதங்கத்துடன் கேட்டார்….
இந்தாண்டு பணிநிறைவு பெறப்போகும்
நமது தோழர் ஒருவர்…

அவரது கோரிக்கையில் நியாயம் உண்டு…
அவரது கோரிக்கை நிறைவேறுமா?
நம்முடைய கேள்வியும் அதுவேதான்….

ஊதியக்குழுவை வலியுறுத்தி...
கோரிக்கைகள் தினம் NFTE தலைமையில்...
தனியாக நடத்தப்பட்டு விட்டது…
இன்று 05/04/2017 BSNLEU தலைமையில்…
தனியாக ஒரு கோரிக்கை தினம் நடத்தப்படுகிறது…

கோரிக்கைகள் நிறைவேற
கோடிக்கைகள் போராடும் என்பது
ஆண்டாண்டு காலமாக நாம்
அலுக்காமல் கூவும் முழக்கம்…
ஆனால் ஊழியரது கோரிக்கைகளை…
ஒவ்வொருவரும் தனித்தனியாக முழங்குவது…
நமது கோரிக்கைகளுக்கு வலுவூட்டுமா?

கோரிக்கைகள் நிறைவேற
கோடிக்கைகள் போராடும் என்பது
வெறும் வேடிக்கையாகப் போய்விடுமா?

ஊழியர் கோரிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும்…
சங்கங்களே... தலைவர்களே...
ஒன்றுபட்டுப் போராடுங்கள் என்பதுதான்…
இன்று ஊழியரின் கோரிக்கையாக உள்ளது..
ஒன்றுபடு... உயர்படு...
என்னும் கோரிக்கை நிறைவேறுமா?

No comments:

Post a Comment