Sunday 24 February 2019


அடுத்தது என்ன?

BSNLலில் பிப்ரவரி 18 முதல் 20 வரை…
மூன்று நாட்கள் ஊழியர்கள் அதிகாரிகள்..
ஒன்றுபட்ட உரமான வேலைநிறுத்தம்…
உணர்வோடு நடந்து முடிந்துள்ளது.

ஒன்றுபட்டு உணர்வோடு போராடிய தோழர்களின்
இப்போதைய கேள்வி…  அடுத்தது என்ன?

பிப்ரவரி 28க்குள்…
நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து மனுக்கொடுப்பது..
மார்ச் 6 அன்று பிரதமர் அலுவலகம் நோக்கிப் பேரணி..
பிரதமர் மற்றும் அமைச்சருக்கு TWITTER மூலம் கோரிக்கை விடுப்பது
என AUAB தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவித்துள்ளது.

ஆனால் போராடிய ஊழியர்களைப் பொறுத்தவரை…
தங்களுக்கான பலன் என்ன? அடுத்து என்ன?
என்பதே ஒரே ஒரு கேள்வியாக உள்ளது…

முன்பு போராட்டங்கள் பலன்களைக் கைமேல் அளித்தன….
இப்போதெல்லாம் போராட்டங்கள்… என்பது
எதிர்ப்புக்களைப் பதிவு செய்யும்
நிகழ்வுகளாக மாறிப்போய்விட்டன..
இதுதான் இந்திய தேசத்தின் இன்றைய நிலைமை…
இது இந்திய தேசத்தின் எல்லாப்பகுதி
தொழிலாளர்களுக்கும்… மக்களுக்கும் பொருந்தும்…

போராட்டம் முடிந்த பின்பு கூட
போராட்ட விளைவுகளைப் பற்றி
அதிகாரப்பூர்வ செய்திகள் ஏதுமில்லை…
ஊடகங்கள் மூலமாகவே செய்திகள் தெரிய வருகின்றன…
அத்தகைய செய்திகளையே தோழர்களிடம்
பகிர்ந்து கொள்ளும் சூழல் நிலவுகிறது…

தற்போது  ஊடகங்களில் வந்த செய்திகளின்படி…

தொலைத்தொடர்பு என்பது மக்களுக்கான
அத்தியாவசிய… அவசிய… சேவைப்பகுதி என்பதால்
அரசுத்துறையின் இருப்பு தொலைத்தொடர்பில்
அவசியம் என அரசு கருதுகிறது…
எனவே தொலைத்தொடர்பில்...
அரசு நிறுவனங்களான… BSNL மற்றும் MTNL நிறுவனங்களை
மூடிவிடுதல் என்ற பேச்சுக்கு இடமில்லை…

எனவே BSNL மற்றும் MTNL நிறுவனங்களை
மறுசீரமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது…
இதற்கான திட்டங்களைத் தயார் செய்யவும்…
செலவினங்களைக் கட்டுப்படுத்தவும்…
வருமான உயர்வுக்கு வழிவகுக்கவும்…
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

செலவினங்களைப் பொறுத்தவரையில்…
ஊழியர்களின் சம்பளம் என்பது கூடுதல் செலவினமாக உள்ளது…
எனவே விருப்ப ஓய்வுத்திட்டத்தை அமுல்படுத்த அரசு விரும்புகிறது…
இதற்காக திட்டங்கள் தயார் செய்யப்பட்டு DOT அனுமதியுடன்…
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படலாம்….

அமைச்சரவைக்கு மிகக்குறுகிய காலமே இருப்பதால்…
புத்தாக்க திட்ட ஒப்புதல்…
விருப்ப ஓய்வு திட்ட ஒப்புதல்…
போன்றவற்றை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்க
கால அவகாசம் இருக்குமா என்பது தெரியவில்லை…

எத்தகைய முடிவுகள் வந்தாலும்…
சாதகமானவற்றை ஏற்றுக்கொள்வது…
பாதகங்களை எதிர்த்துப் போராடுவது…
என்பதுவே தொழிற்சங்க தாரக மந்திரம்…
அந்த திசைவழியில் தொடர்ந்து பயணிப்போம்…
ஊழியர் நலன் காப்போம்…
BSNL வளம் காப்போம்…

1 comment:

  1. இப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்? பளீரென்று பகிரவும்

    ReplyDelete