Friday 31 December 2021

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய

2022

ஆங்கிலப் புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்

Tuesday 28 December 2021

 கிளைக்கூட்டங்கள் 

 கிளைக்கூட்டங்கள்

 -------------------------------------

இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளை

30/12/2021 – வியாழன் – மாலை 04.00 மணி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

தலைமை : தோழர். A. தமிழரசன் – கிளைத்தலைவர்

 -------------------------------------

பங்கேற்பு :  தோழர்கள்

S. சதீஷ் பாலாஜி – கிளைச்செயலர்

R.  முருகேசன் – கிளைப்பொருளர்

A.ஜேம்ஸ்வாலண்ட்ராயன் – மாவட்ட உதவித்தலைவர்

V. சுப்பிரமணியன் – மாவட்டத்தலைவர்

  -------------------------------------

சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளை

30/12/2021 – வியாழன் – மாலை 04.00 மணி

சங்க அலுவலகம் – காரைக்குடி

தலைமை : தோழர். R. இரஞ்சித் குமார் – கிளைத்தலைவர்

 -------------------------------------

பங்கேற்பு :  தோழர்கள்

M. ஆரோக்கியதாஸ் – கிளைச்செயலர்

N. ஜெகன் – இணைச்செயலர்

L. பாண்டியம்மாள் – கிளைப்பொருளர்

J. பங்கஜ்குமார் – மாவட்டப்பொருளர்

B. முருகன் – மாவட்டச்செயலர்

  -------------------------------------

ஆய்படு பொருள்

மாநில மாநாடு

தலமட்டப்பிரச்சினைகள்

இன்ன பிற... 

தோழர்களே...  வருக...

Wednesday 22 December 2021

 அய்யர் என்னும் 

அணையா விளக்கு

டிசம்பர் - 23

தோழர். ச.வெங்கடேசன்

நினைவு தினம் 

   ============================


வழிகளைத் திறந்தாய்...

வலிகளைத் தீர்த்தாய்... 

பழிகளைத் துடைத்தாய்...

விழிகளில் நிறைந்தாய்... 

இதயத்தில் றைந்தாய்..

இருள்தனை போக்கினாய்.. 

ஒளிதனை பாய்ச்சினாய்...

தெளிவுதனை வளர்த்தாய்... 

நீயே ...

என்றும்... எந்தாய்....

வணங்குகிறோம்....

வழி செல்கிறோம்...

 ============================

புகழஞ்சலிக் கூட்டம்

 23/12/2021 – வியாழன் – மாலை 05 மணி

NFTE    சங்க அலுவலகம்  - காரைக்குடி

  ============================

தலைமை : தோழர். லால்பகதூர்

செயல்தலைவர் – AIBSNLPWA

  ============================

பங்கேற்பு : தோழர்கள் 

பழ. இராமச்சந்திரன் – AITUC

ந. நாகேஸ்வரன் – AIBSNLPWA

இரா. பூபதி – AIBSNLPWA

க. சுந்தரராஜன் - AIBSNLPWA

ப. முருகன் – NFTE

ம. ஆரோக்கியதாஸ் – NFTE

நா. ஜெகன் - NFTE

வழக்கறிஞர் வி.ச.மணிபாரதி

காந்திமதி வெங்கடேசன்

   ============================

தோழர்களே... வருக....

தொழிற்சங்க ஆசான்

தோழர் அய்யர் புகழ் போற்றுக....

 ஒப்பந்த ஊழியர் விடுபட்ட சம்பளம்

 

தோழர்களே....

நமது TMTCLU ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் முயற்சியால் வழக்குமன்ற முடிவின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள நிலுவை வழங்கப்பட்டது நாம் அறிந்ததே.

இன்னும் தமிழகம் முழுவதும் 380 தோழர்களுக்கு ரூ. 33,72,477/= சம்பளப் பாக்கி உள்ளது.

அந்த விடுபட்ட ஊழியர்கள் தங்களது தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை அணுகி தங்களது சம்பளப்பாக்கியைப் பெறுவதற்கு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்.

காரைக்குடியில் இன்னும் 23 தோழர்களுக்கு சம்பளப்பாக்கி உள்ளது. அவர்கள் இன்று 23/12/2021 மதுரை சொக்கிகுளத்தில் அமைந்துள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவகத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட ஆதாரங்களோடு நேரில் வரவேண்டும்.

👉ஆதார் அட்டை

👉வங்கி சேமிப்பு புத்தகம். 

இந்த வாய்ப்பே இறுதியானது. 

தோழர்கள் தவறாமல் மதுரை தொழிலாளர்

ஆணையர் அலுவகத்திற்கு நேரில் வரவும். 

நமது முன்னணித் தோழர்கள் 

கவனம் செலுத்தவும். 

 

Tuesday 14 December 2021

 AIBSNLPWA கிளை மாநாடு

டிசம்பர் 17...

ஓய்வூதியர் தினத்தன்று நடைபெறும்...

ஓய்வூதியர் நலம் காக்கும்

AIBSNLPWA ஓய்வூதியர் நலச்சங்கத்தின்

காரைக்குடி கிளை மாநாடு

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

 கொடுமையின் உச்சம் 

2015 முதல் 2020 வரையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற

குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக,

வண்டலூரை சேர்ந்த சி.பிரபாகர் என்பவர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

அவருக்குக் கடந்த 28/07/2021 அன்று சமூக நலத்துறையிடம்

இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  தருமபுரியில் 902 திருமணங்கள்...

திண்டுக்கல் - 683, கரூர் - 402, நாமக்கல் - 449, பெரம்பலூர் - 674,

சேலம் - 720, தேனி - 734, திருவண்ணாமலை - 712, அரியலூர் - 82

எனக்குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது. 

இதில் குழந்தைத் திருமணச் சட்டத்தின்படி

586 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்

இதே காலகட்டத்தில் 11,553 குழந்தைத் திருமணங்கள்

தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குழந்தைத் திருமண தடைச்சட்டங்கள்

நடைமுறையில் இருந்தாலும்...

ஆங்காங்கே அவை தங்கு தடையின்றி

நடந்து வருவது மிகப்பெரும் அவமானமாகும். 

இதன் தொடர்ச்சியாக.... தற்போது....

ஜெயங்கொண்டம் அருகே உள்ள

பெரிய கருக்கை கிராமத்தைச் சேர்ந்த

அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரியும் ஒருவர்

ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருந்தும்

மீண்டும் ஒரு சிறுமியோடு

நான்காவது திருமணம் செய்துள்ளார்.

இவருக்கு வாரிசு இல்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி எட்டாம் வகுப்பு

படித்து வந்த தனது மகளை அவரது தாயே

அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்தத் திருமணமானது, சிறுமியின் தாய்  

முன்னிலையில் கோயிலில் நடைபெற்றுள்ளது.

வறுமையே காரணம் என்று கூறப்படுகின்றது.

 

இந்தத் திருமணம் தொடர்பாக  அரியலூர் மாவட்ட

குழந்தைகள் நல அலுவலகத்துக்குத் தகவல் கிடைக்கவே,

தற்போது  பேருந்து நடத்துனரும், சிறுமியின் தாயாரும்

போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சிறுமி நான்கு மாத கர்ப்பமாக உள்ளதால்

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பெண்விடுதலைக்கு வித்திட்ட பாரதி பிறந்த மண்ணில்....

பெண்விடுதலைக்கு உரமிட்ட பெரியார் மண்ணில்....

குழந்தைத் திருமணங்கள் அரங்கேறுவதும்...

13 வயது பெண் குழந்தை

தன் வயிற்றில் குழந்தையைச் சுமப்பதுவும்...

மாபெரும் தேசிய அவமானம்...

Friday 3 December 2021

 ஊதியக்குழு பேச்சுவார்த்தை

இன்று 03/12/2021 டெல்லியில் 3வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குழு கூடி விவாதித்தது.

நிர்வாகத் தரப்பில் பல்வேறு விவரங்கள்

POWER POINT முறையில் ஊழியர் தரப்பிற்கு எடுத்துரைக்கப்பட்டது.

கீழ்க்கண்ட விவரங்கள் நிர்வாகத்தால் அளிக்கப்பட்டன.

-------------------------------------------

தற்போதைய பணியில் உள்ள ஊழியர்

எண்ணிக்கை மொத்தம் 33,048.

இதில் DOT  ஊழியர்கள் 18,553.

BSNL ஊழியர்கள் 14495.

கீழ்க்கண்ட எண்ணிக்கையில்

ஊழியர்கள் தேக்கநிலையில் உள்ளனர்.

தேக்கநிலை 1 – 2134 ஊழியர்கள்

தேக்கநிலை 2 – 2351 ஊழியர்கள்

தேக்கநிலை 3 – 1938 ஊழியர்கள்

சம்பளத்தின் அதிகபட்ச நிலையில்

At MAXIMUM Stage 2784 ஊழியர்கள்

மொத்தம் தேக்கநிலையால்

பாதிப்பு அடைந்த ஊழியர்கள் 9207.

தேக்கநிலையால் பாதிப்பு அடைந்து

ஆண்டு உயர்வுத்தொகையை இழந்த ஊழியர்கள்

தற்போது மீண்டும் அடைவார்கள்.  

பூஜ்ய  நிர்ணய நிலையிலும் கூட

இது போன்ற ஊழியர்கள் பணப்பலனை அடைவார்கள்.

BSNL நேரடி ஊழியர்கள் 12 சத EPF பங்களிப்பைப் பெறுவார்கள்.

புதிய சம்பள விகித  மாற்றத்தால்

ஓய்வூதியப் பங்களிப்பு 2.6 மடங்கு உயரும் சூழல் உள்ளது.

எனவே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு

ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பள விகிதங்களை

மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

ஊழியர் தரப்பு நிர்வாகத்தின் இந்த திட்டத்திற்கு

ஊழியர் தரப்புக் கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே பேசியபடி

5 சத ஊதிய நிர்ணயப்பலனோடு

சம்பள மாற்றங்களை அமுல்படுத்த வேண்டும்

என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அடுத்த கூட்டத்தில் மேலும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

Wednesday 1 December 2021

இரங்கல் 

NFTE தமிழ் மாநிலச்செயலர் 

தோழர்.நடராஜன் அவர்களின்

இளைய சகோதரர் 

திரு.சுந்தரம் அவர்கள்

இன்று 01/12/2021 உடல்நலக்குறைவால்  

திருவாரூரில் அகால மரணமடைந்தார்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

சகோதரனைப் பிரிந்த 

தோழர் நடராஜன் அவர்களின்

துயரத்தில் பங்கு கொள்கின்றோம்.

-------------------------------------------

நல்லடக்கம் (02/12/2021 ) திருவாரூரில் நடைபெறும்.

Saturday 27 November 2021

 NO QUOTATION 

தோழர் குப்தா அவர்களை

LOW QUOTATION என்று 

நமது புரட்சிகரத் தோழர்கள் அடிக்கடி

விமர்சனம் செய்வது வழக்கம். 

இன்று மூன்றாவது ஊதிய மாற்றம்

சாத்தியமில்லை என்ற நிலையில்

LOW QUOTATION கூட இல்லை

NO QUOTATION என்ற நிலைக்குப் பாவம்

தலைவர்கள் தள்ளப்பட்டு விட்டனர்.

ZERO FITMENT என்னும் பரிதாப நிலையைப்

பரிந்து பேசும் காலம் வந்து விட்டது.

 

இந்த சுழிய ஊதிய நிர்ணயம்

என்ன பலன் தரும்?

கணிதத்தில் ZERO என்பது ZEROவை மட்டுமே தரும்.

ஆனால் BSNL ஊதிய மாற்றத்தில்

ZERO என்பது MINUS என்னும் நட்டத்தைத் தரும்.

 

ஒரு எடுத்துக்காட்டு பார்க்கலாம்.

காரைக்குடி NFTE மாவட்டத்தலைவர்

தோழர் சுப்பிரமணியன் TT அவர்கள்

01/01/2017 அன்று

ரூ.19870/= அடிப்படைச்சம்பளம் பெற்றுள்ளார்.

 

ZERO FITMENT கணக்கீட்டின்படி

01/01/2017  தேதிய IDA 119.5 சதம்.

மொத்தச்சம்பளம் =

ரூ.19870 + IDA 23745 = Rs.43615/= ஆகும்.

 

எனவே ஊதியப் பலன்கள் இன்றி ZEROவில்

அவரது புதிய அடிப்படைச்சம்பளம்

ரூ.43,620/= ஆகும்.

அவரது ஆண்டு உயர்வுத்தேதி அக்டோபர் மாதம்.

எனவே அக்டோபர் 2017 அன்று

புதிய அடிப்படைச்சம்பளம் ரூ.44,930/=ஆகும்.

அக்டோபர் 2021ல்

அவரது அடிப்படைச்சம்பளம் ரூ.50,570/= ஆகும்.

 

இம்மாதம் பழைய அடிப்படைச்சம்பளத்தில்

அவர் பெறும் மொத்தச்சம்பளம் =

ரூ.23770 + IDA 42620 = Rs.66,390/= 

ஆனால்...

ZERO கணக்கீட்டில் அவருக்கு கிடைப்பது

ரூ.50570 + IDA 13755 = Rs.64,325/= 

2017 கணக்கீட்டில் 

அக்டோபர் 2021 மாத  IDA 27.2 சதம் ஆகும்.

தோழர் சுப்பிரமணிக்கு நட்டம்  

ரூ.66390 – 64325 = ரூ.2065/=

இந்த நட்டத்தைச் சந்திக்கவா ஒரு ஊதிய நிர்ணயம்?

 

ரூ.2065 மொத்தச்சம்பளம் குறைந்த பின்பு

அவரது ஓய்வு நாளில் விடுப்புச்சம்பளம் எப்படி கூடும்?

அவரது பணிக்கொடை எப்படி கூடும்?

அவரது ஓய்வூதியம் எப்படி கூடும்?

திருப்பி பிடிக்கப்பட வேண்டிய

COMMUTATION என்னும்

கடன்தொகை மட்டுமே கூடும். 

இன்றைய கையறு நிலையில்

தேக்கநிலை போன்ற இழப்புக்களை

ZERO சரிக்கட்டும் என்ற நம்பிக்கை மட்டுமே

தலைவர்களிடம் உள்ளது.

 

BSNL ஆரம்பிக்கப்பட்டவுடன்

LOW QUOTATION குப்தா

ரூ.1000 முன்பணமும்

குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.1500/= என்றும்

ஊழியர்களுக்குப் பெற்றுத் தந்தார். 

ஆனால் இன்றோ அவர் வாங்கித் தந்த

ஊதியமே பறிபோகும் அவலம். 


SOMETHING  IS  BETTER  THAN  NOTHING...

NOTHING  IS  BETTER  THAN  NON-SENSE...

என்பது பழமொழி.....

Thursday 25 November 2021

 அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்

நவம்பர் – 26

நாடு தழுவிய 

கண்டன ஆர்ப்பாட்டம்

--------------------------------------

26/11/2021 – வெள்ளி – காலை 10 மணி

தலைமை தபால் நிலையம் – மதுரை

--------------------------------------

கோரிக்கைகள்

மத்திய அரசே....

பொதுத்துறைகளைத் தனியார்மயம் ஆக்காதே...

பொதுத்துறை சொத்துக்களை விற்காதே...

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கைவிடு...

பெகாசஸ் உளவு சம்பந்தமாக நீதி விசாரணை நடத்திடு...

100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திடு...

தொழிலாளர் சட்டத்திருத்தங்களைத் திரும்ப பெறு...

கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு வாரியங்களை சீர்குலைக்காதே...

அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு

குறைந்தபட்ச கூலி வழங்கு...

--------------------------------------

தோழர்களே... வாரீர்....