Wednesday 30 January 2019

வாய்மையே வெல்லும்..

ஜனவரி 30 – தியாகிகள் தினம்…
மகாத்மா மறைக்கப்பட்ட நாள்…

வாய்மையன்றி வேறு  ஒரு கடவுள் உலகில் இல்லை…
ஒளி வீசும் சூரியனை விட பலகோடி மடங்கு
ஒளி படைத்தது வாய்மை…

அந்த வாய்மையைத் தரிசனம் செய்திட 
ஒரே வழி அகிம்சையாகும்…
அந்த அகிம்சையைக் கடைப்பிடிக்க 
ஒரே வழி உள்ளத்தை தூய்மையாக்குவது…

உள்ளத்தூய்மை என்பது அவ்வளவு எளிதானதன்று…
உலகை ஆயுதங்களால் வென்று விடலாம்…
உள்ளத்து குரோத உணர்ச்சிகளை எளிதாக வெல்ல இயலாது…

வாய்மையை பல சமயங்களில் 
நாசகார சக்தி வெற்றி கொள்ளும்…
ஆனால் நாசகார சக்தியின்  வெற்றி வரலாறாகாது…

வாய்மை பல சமயங்களில் தோற்றுப்போகலாம்….
ஆனாலும் வாய்மையின் தோல்வி கூட வரலாறாகும்…
வாய்மை தோற்றாலும் வெல்லும்…
வாய்மை வெல்லும்… வாய்மையே வெல்லும்…

அண்ணல் மகாத்மா காந்தி 
 ----------------------------------------------------------------------------------
அகிம்சை வழி நடப்போம்…
அண்ணல் நினைவைப் போற்றுவோம்…

Tuesday 29 January 2019


அஞ்சலி

சமதர்மவாதியும்…
சமதாக் கட்சித்தலைவரும்…
தொழிற்சங்கத்தலைவரும்…
முன்னாள் அமைச்சரும்…
எளிமை கொண்டவரும்..
நேர்மை மிக்கவருமான.. 
திரு.ஜார்ஜ் பெர்ணான்டஸ் 
அவர்களின்
மறைவிற்கு நமது அஞ்சலி… 

Monday 28 January 2019


ஆதரவு ஆர்ப்பாட்டம்
இழந்து விட்ட ஓய்வூதிய உரிமைக்காக…
இழந்து விட்ட ஊதிய நிலுவைக்காக...
இழந்து போகும் உரிமைகளுக்காக...
தொடர்ந்து தீரமுடன் போராடும்
தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்கள்
போராட்டத்திற்கு ஆதரவாக…
NFTE – BSNLEU
இணைந்த ஆதரவு
ஆர்ப்பாட்டம் 


29/01/2019 – செவ்வாய்க்கிழமை - மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.
 தோழர்களே… வருக…

Friday 25 January 2019

மக்களாட்சி மலர்கவே...
republic day 2019 IMAGES க்கான பட முடிவு

மதங்களாட்சி வீழ்கவே…
மக்களாட்சி எழுகவே…
--------------------------------------------------
குடிமக்கள் சொன்னபடி 
குடிவாழ்வு மலரட்டும்…
அனைவருக்கும் இனிய
கு டி ய ர சு   தி ன
நல்வாழ்த்துக்கள்

Tuesday 22 January 2019


வெல்க… AITUC மாநில மாநாடு 
ஜனவரி 23 – 24 – 25
வீரம் செறிந்த வேலூர் மண்ணில்…
விறுவிறுப்பாக நடைபெறும்...
AITUC சங்கத்தின்
தமிழ்மாநில மாநாடு
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

வாழ்த்துக்கள்

இன்று 23/01/2019
காரைக்குடி மாவட்டத்தில்
தங்களது சீரிய பணிக்காக
சிறந்த அதிகாரி விருது பெறும்
அன்புத்தோழர்… AGM
A.பாண்டியன்

சிறந்த ஊழியர் விருது பெறும்
அன்புத்தோழர்ஓய்வுபெற்ற STMO..
V.மணி
ஆகியோருக்கு நமது
நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

விருது வழங்கும் விழாவிற்கு வருகை தரும்
நமது அன்புக்குரிய முதன்மைப்பொதுமேலாளர்
CGM தமிழ்நாடு -  உயர்திரு
V.இராஜு
அவர்களை வருக வருகவென வரவேற்கின்றோம்

Monday 21 January 2019

இணைப்பே இன்பம்...
கூலியாட்களின் கூலியை மறுப்பவர்கள்…
அவர்களின் குருதியைக் குடிப்பவர்களாவார்கள்…

உழைப்புச்சுரண்டலைப் பற்றி
பைபிள் இப்படித்தான் கூறுகின்றது…

உலகம் முழுவதும் கூலியாட்களின்
குருதி குடிக்கப்படுகின்றது…
இதோ நம் கண் முன்னால்…
நமது துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள்
உழைப்புச்சுரண்டல் செய்யப்படுகின்றார்கள்…
நமது பகுதியில்….
இந்த சுரண்டலில் இருந்து அவர்களை விடுவிக்க..
அருமைத்தோழர் ஜெகன் அவர்கள்
இந்தியாவிலேயே முதன்முறையாக…
TMTCLU என்னும்  ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை
தமிழகத்தில் உருவாக்கினார்…

பல்வேறு உரிமைகளை நாம் வென்றெடுத்திருந்தாலும்…
ஒப்பந்த தொழிலாளர் விடியலுக்காக…
நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது…
இந்நிலையில் NFTE என்னும் பதாகையின் கீழ்
இரண்டு ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் இயங்குவது…
ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்றத்திற்கு
முட்டுக்கட்டையாக அமையும்…
எனவே பிரிந்து கிடக்கும்
ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களை
இணைப்பது என்ற முடிவை
NFTE தமிழ்மாநிலச்சங்கம் மேற்கொண்டது…

19/01/2019 அன்று சென்னையில்
NFTE தமிழ்மாநிலச்சங்க அலுவலகத்தில்…
தோழர் ஆர்.கே., அவர்கள் தலைமையில்…
ஒப்பந்த தொழிலாளர் சங்க
சிறப்பு மாநிலச்செயற்குழு வெகுசிறப்புடன் நடைபெற்றது.

TMTCLU பொதுச்செயலர் தோழர்.செல்வம் வரவேற்புரையாற்றினார்…
NFTE மாநிலச்செயலர் தோழர் நடராஜன் துவக்கவுரையாற்றினார்…
தோழர்கள் திருச்சி மில்டன்,
தஞ்சை கிள்ளிவளவன், காரைக்குடி மாரி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
அனைத்து ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்…
சம்மேளனச்செயலர் தோழர். காமராஜ்,
சம்மேளன சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் அமுதம்,
மாநில உதவிச்செயலர் தோழர் முரளி,
மூத்த தோழர் சேது ஆகியோர் சிறப்புரையாற்றினர்…
தோழர் ஆர்.கே. அவர்கள் நிறைவுரையாற்றினார்…

NFTCW என்னும் பெயரில் நாம் புதிதாய் பணியாற்றுவோம் என
தோழர் ஆர்.கே அவர்கள் அறிவித்த போது…
அரங்கம் அதிர்ந்தது…. மனம் குளிர்ந்தது….
விரைவில் தமிழகத்தில்
NFTCW அமைப்பு மாநாடு நடத்தப்படும்…
அதற்கான ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில்
ஒப்பந்த தொழிலாளர் சங்கம்…
AITUC வழிகாட்டுதலில்…
NFTE தலைமையில்….
விரைவில் உருவாக்கப்படும்…
NFTE தலைமையிலான
ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
ஒப்பந்த தொழிலாளர் உரிமைகளை 
வென்றெடுக்கும்…
அவர்களை சங்கச்சுரண்டலில் இருந்தும்…
சகல சுரண்டல்களில் இருந்தும் விடுவிக்கும்…
அது வரை அமைதி காப்போம்…
உதவாக்கரை விமர்சனங்களை
ஒதுக்கித் தள்ளுவோம்…

வாளால் மரித்தவர்களை விட…
வாயால் மரித்தவர்களே அதிகம்
என்பது பைபிள் வசனம்….

நாம் மரிப்பதற்காகப் பிறந்தவர்கள் அல்ல..
மரித்தாலும்… உயிர்த்தெழுவோம்…
அதுவே நமது மரபு… பாரம்பரியம்… சிறப்பு…

Thursday 17 January 2019


இணைவோம்… உயர்வோம்…
தோழர்களே...
மார்க்ஸ் பிறந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டன…
ரஷ்யப்புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன…
இந்திய தேசம் விடுதலை அடைந்து 71 ஆண்டுகள் ஆகிவிட்டன…
ஒப்பந்த ஊழியர் ஒழிப்புச்சட்டம் உருவாகி 49 ஆண்டுகள் ஆகிவிட்டன…
ஆனாலும்…. சுரண்டல் என்னும் கொடுமை இன்னும் அகலவில்லை..
ஒப்பந்தம் என்ற பெயரில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்…
நம் கண்முன்னே நாளும் சுரண்டப்படுகின்றார்கள்…

ஒன்றுபட்ட இயக்கங்கள்தான்…
உருக்குப் போன்ற இயக்கங்கங்கள்தான்…
சுயநலமில்லாத பொதுநல இயக்கங்கள்தான்…
அடிமட்ட ஊழியரின் அடிமைச்சங்கிலியை அறுத்தெறிய முடியும்…

ஆனால்…
தமிழகத்தில்… ஒப்பந்த ஊழியருக்கென இரண்டு வேறு அமைப்புக்கள்…
அருமைத்தலைவர் ஜெகனால் அன்றே உருவாக்கப்பட்ட TMTCLU
தோழர். மதிவாணனால் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட NFTCL
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்…
சங்கங்கள் இரண்டுபட்டால் தொழிலாளிக்குத் திண்டாட்டம்…
குத்தகைக்காரனுக்கும் பொறுப்பற்ற நிர்வாகத்திற்கும் கொண்டாட்டம்…
எனவேதான் ஒன்றுபட்ட அமைப்பை உருவாக்க வேண்டிய 
சிந்தனை இன்று நம்மிடையே வலுப்பெற்றுள்ளது...

அன்று…
NFTE என்னும் மாபெரும் இயக்கம் எழுந்து போராடியதால்…
ஆயிரக்கணக்கான அன்றாடக்கூலி RTPக்களும்…
லட்சக்கணக்கான மஸ்தூர்களும் நிரந்தரம் பெற்றனர்..

இன்று…
அடிமட்ட ஊழியருக்காகப் போராடவேண்டிய நமது சங்கங்கள் 
தங்களுக்குள்ளே போராடிக்கொண்டு இருக்கின்றன....
சங்கங்கள் தொழிலாளிக்கு சங்கடங்களாகி விட்டன....
NFTE தலைமையில் இரண்டு சங்கங்கள் என்பது பலவீனமே…
உரிமை இழந்து தவிக்கும் அடிமட்ட ஊழியருக்கு சுகவீனமே….

எனவே…
ஒன்றுபட்ட ஒப்பந்த ஊழியர் சங்கத்தை உருவாக்குவது…
நமது கடமையாகும்… காலத்தின் கட்டாயமாகும்…
ஒற்றுமைக்கு என்றென்றும் வழிகாட்டும் தமிழ்மாநிலச்சங்கம்…
ஒப்பந்த ஊழியர் உயர்விற்காக இப்போதும் வழிகாட்டுகிறது….

2019 ஜனவரி 19 அன்று சென்னையில்…
NFTE தமிழ்மாநிலச்சங்க அலுவலகத்தில்…
TMTCLU மற்றும் NFTCL சங்கங்கள் 
தமிழகத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன…

இனி ஒப்பந்த ஊழியருக்காக.... 
ஒரே சங்கமாக… ஒரே கொடியாக... 
ஒரே குரலில்.. ஒரே கொள்கைவழியில்… 
நமது ஒப்பந்த ஊழியர் சங்கம் தன் வர்க்க கடமையாற்றும்…
புதிதாக உருவாக்கப்படும் ஒப்பந்த ஊழியர் சங்கம்…
இந்திய தேசத்தின் முதல் சங்கம் AITUCயால் வழிநடத்தப்படும்…
இணையற்ற சங்கம் NFTEயால் தலைமை தாங்கப்படும்.. 

தோழர்களே…
கரம் இணைத்து… கடமை செய்வோம்…
தடை உடைத்து... உரிமை காப்போம்…
ஒன்றிணைவோம்... உயர்வு பெறுவோம்...
அணி திரள்வீர்… அன்புத்தோழர்களே..

 அனைவரையும் அன்புடன் அழைக்கும்
TMTCLU மற்றும் NFTCL தமிழ்மாநிலச்சங்கங்கள்

தோழர்.ஜீவா வீரவணக்கப் பெருநாள்
தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம்
"சமூகமே எந்திரி" மாத இதழ் குழுமம்
இணைந்து நடத்தும்…

தோழர்.ஜீவா வீரவணக்கப் பெருநாள்
18/01/2019 – வெள்ளிக்கிழமை – காலை 09.00 மணி
இராமசாமி தமிழ்க்கல்லூரி – காரைக்குடி
 ----------------------------------------------------------
தலைமை : தோழர். வெ.மாரி
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற
சிவகங்கை மாவட்டத்தலைவர்
  ----------------------------------------------------------
பங்கேற்பு
தாளாளர்  தோழர். வீரப்பன்
கவிஞர். ஜோல்னா ஜவஹர்
எழுத்தாளர் சந்திரமோகன்
முனைவர். பழனி இராகுலதாசன் 


நீட் எதிர்ப்பு போராளி 
தோழியர்.சபரிமாலா

எழுத்துச்சாரதி 
தோழர்.ஜீவபாரதி

மற்றும் தோழர்கள்… 
தோழர்களே வருக….

Monday 14 January 2019

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்…
வழி பிறந்தால் வாழ்வு செழிக்கும்..
வாழ்வு செழித்தால் வையம் சிறக்கும்…
வையம் சிறந்தால் மனிதம் மலரும்…
 அனைவருக்கும் இனிய
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Sunday 13 January 2019


இரங்கல்

நெல்லை NFTE 
முன்னாள் மாவட்டச்செயலர்
அருமைத்தோழர். 
இராமகிருஷ்ணன் 
அவர்கள் உடல்நலக்குறைவால் 
சென்னையில் இயற்கை எய்தினார்.
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
நல்லடக்கம் இன்று 14/01/2019 
சென்னையில் நடைபெறுகின்றது…
 -----------------------------------------------------------------------------
மீசைக்காரர்…
மிகுந்த நேசக்காரர்…
விருப்ப ஓய்வில் சென்றார்…
விருப்பமில்லாமலே சென்றார்…
ஓய்விலே சென்றாலும் ஓய்ந்திருந்ததில்லை…
அருமைத்தலைவர் குப்தா வருகை தந்த போதும்…
அன்புத்தலைவர் அப்துல்கலாம் இயற்கை எய்திய போதும்…
இராமேஸ்வரம் தீவைச் சுற்றி வந்தார்… சொந்தம் கொண்டார்…
நெல்லையில் மிக வலுவான சங்கமாக NFTEஐ வளர்த்தெடுத்தார்…
அவரின் மறைவிற்கு… நமது இதய அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்…

Saturday 12 January 2019


தேசிய இளைஞர் தினம்

ஜனவரி - 12
சுவாமி விவேகாநந்தர் பிறந்த தினம்
 தேசிய இளைஞர் தினம் 

இந்திய நாடு…
இளைஞர்கள் நிறைந்த நாடு…
இளமை பொங்கும் நாடு…
இருபது வயதுக்கு கீழே இருப்பவர் கோடி..
இருபது ரூபாய் வருமானத்துக்கும் கீழே
இருப்பவர்களும் பல கோடி…
இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…
இனிக்க இனிக்க செய்த தேர்தல் காலத்து அல்வா…
இன்றோ இந்திய தேசத்தில் படித்து விட்டு
இன்னும் வேலை கிடைக்காதோர் பதினொரு கோடி…
இளமையில் துயரம் கொண்ட அன்றாடக்கூலிகள் 15 கோடி….

இன்று… ஜனவரி 12
இந்திய இளைஞர் தினம்…
இளைஞர்களை வாழவிடாத...
இந்திய தேசத்து ஆட்சியாளர்களை சுவாமி மன்னிப்பாரா?

Thursday 10 January 2019

நினைவேந்தல் நிகழ்வு 

 NFTE  இயக்கத்தின் முகவைத்தளபதி
காரைக்குடி NFTE  முன்னாள் மாவட்டச்செயலர்
அருமைத்தோழர். சவுக்கத் அலி
நினைவேந்தல் நிகழ்வு

10/01/2019 – வியாழன் – மாலை 05 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

தலைமை
வெ.மாரி NFTE மாவட்டச்செயலர்

நினைவேந்தல் சிறப்புரை
தோழர்.K.சேது…

அடிமட்டத் தோழர்களின் உயர்விற்காக
வாழ்ந்து மறைந்த தலைவனின் புகழ் போற்ற
அணி திரள்வீர்…. தோழர்களே…

Monday 7 January 2019


மாபெரும் வேலை நிறுத்தம்…


மாபெரும் மறியல் போர்
மற்றும் வேலை நிறுத்தம்…
 மத்திய அரசின்…
மக்கள் விரோத..
தொழிலாளர் விரோத..
விவசாயிகள் விரோத…
பொதுத்துறை விரோத…
மதநல்லிணக்க விரோத…
கொள்கைகளை… 
கொடுமைகளைக் கண்டித்து..
 --------------------------------------------------------------------------------
ஜனவரி 8 – 9
அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்த
இந்திய தேசம் தழுவிய…
உலகின் மாபெரும் வேலைநிறுத்தம்
--------------------------------------------------------------------------------
08/01/2019 – செவ்வாய்க்கிழமை – காலை 10 மணி
ஐந்து விளக்கு – காரைக்குடி
அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்
  --------------------------------------------------------------------------------
09/01/2019 – புதன்கிழமை – காலை 10 மணி
காரைக்குடி கல்லுக்கட்டி அண்ணாசிலை
BSNL தொலைபேசி நிலையம் முன்பாக
அனைத்து சங்க மறியல் போர்
 --------------------------------------------------------------------------------
தோழர்களே… தேசம் காத்திட…
உழைப்போர்.. உரிமை காத்திட...
உணர்வுடன்.. திரண்டு வாரீர்…

Sunday 6 January 2019


 வீரவணக்கம்

இராமநாதபுரம் பகுதியின்
தன்னலமற்ற தன்னிகரற்ற
தொழிற்சங்கத்தலைவர்
ஓய்வு பெற்ற அன்புத்தோழர்
S.சவுக்கத் அலி

அவர்கள்  நேற்று 06/01/2019  
உடல் நலக்குறைவால்
இயற்கை எய்தினார்.

நமது இதயங்கசிந்த
அஞ்சலியையும்
வீரவணக்கத்தையும்
உரித்தாக்குகின்றோம்…