Friday 30 April 2021

ஆறாது... மனம்....

NFTE  இயக்கத்தில்

ஒருமுகமாக செயலாற்றிய

மாநில உதவித்தலைவர்

ஆற்றல்மிகு தோழர்

கரூர் ஆறுமுகம் 

அவர்கள் மறைந்து விட்டார்.

திருச்சி மாவட்டச்சங்கத்தின்

கரூர் பகுதி தளபதியாக செயல்பட்டார்.

பணியில் உள்ள தோழர்கள்...

பணிநிறைவு பெற்ற தோழர்கள்...

ஒப்பந்த ஊழியர்கள் என

எல்லாத்தரப்பு தோழர்களுக்கும்

தோள் தந்து உதவினார்.

கரம் உயர்த்தி உரிமை வென்றார்...

தனது கருத்துக்களை

அழுத்தம் திருத்தமாக...

ஆணித்தரமாக சபைகளில் எடுத்துரைப்பார்...

மாநில மாநாட்டுப்பணிகளில்

முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திகொண்டிருந்தார்...

யாருக்கும் அவர் அடிபணிந்ததில்லை...

யாரைக்கண்டும் அவர் அஞ்சியதில்லை...

ஏப்ரல் 30ல் பணிநிறைவு...

ஏப்ரல் 29ல் மறைவு...

கொரோனாவை விடக் கொடிய செய்தி இது...

 

இன்று...

இயக்கங்களில் வெற்றிடங்கள்

வேகமாகப் பரவி வருகின்றன...

தோழர் ஆறுமுகம் நம்மிடையே இல்லை...

ஆனால் அவர் விட்டுச்சென்ற பணிகளும்...

அவரது கனவுகளும்... லட்சியங்களும்....

நம் கண்முன்னே விரிந்து நிற்கின்றன...

அவர் உயர்த்திப்பிடித்த செங்கொடி

உயர... உயரப் பறக்க வேண்டும்...

உழைப்பாளர் தினமாம் மேதினத்தில்

ஒவ்வொரு ஊரிலும் செங்கொடி ஏற்றும்போது...

அருமைத்தோழர் ஆறுமுகத்தை நினைவு கூர்வோம்...

அவருக்கு நம் இதயம் கனத்த அஞ்சலி....

No comments:

Post a Comment