Wednesday 10 November 2021

 உயிர் பெற்ற ஊதியக்குழு

  

BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்குவது தொடர்பாக நிர்வாகம் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்த பேச்சுவார்த்தைக்குழு  இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னராக 2018ல் குழு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் குழுத்தலைவர் ஓய்வு பெற்றதால் தற்போது புதிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய குழுவில் நிர்வாகத்தரப்பில் 5 அதிகாரிகளும், ஊழியர்கள் தரப்பில் BSNLEU சங்கம் சார்பாக 5 உறுப்பினர்களும், NFTE சார்பாக 3 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்குழு உறுப்பினர்கள்

நிர்வாகத்தரப்பு

திரு. R.K. கோயல் – PGM  - தலைவர்

திரு. A.K.சின்ஹா – DGM – செயலர்

திரு. P.C.பட் – Sr.GM – உறுப்பினர்

திரு. சவுரவ் தியாகி - Sr.GM – உறுப்பினர்

திருமதி. அனிதா ஜோரி - Sr.GM – உறுப்பினர்

ஊழியர் தரப்பு

BSNLEU உறுப்பினர்கள்

தோழர். அபிமன்யு

தோழர். அனிமேஷ் மித்ரா

தோழர். அசோக பாபு

தோழர். ஸ்வபன் சக்கரவர்த்தி

தோழர். சந்தோஷ் குமார்

NFTE உறுப்பினர்கள்

தோழர். சந்தேஷ்வர் சிங்

தோழர். இஸ்லாம் அகமது

தோழர். சேஷாத்திரி

தோழர்களே...

2017ல் நமது ஊதிய மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

2018ல் குழு அமைக்கப்பட்டும் எந்தப்பலனும் இல்லை.

அதன்பின் ஏற்பட்ட பல்வேறு சூழல்கள்

ஊதிய மாற்றத்தை ஒரு கனவாக மாற்றி விட்டிருந்த சூழலில்

தற்போது புதிய பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்குழு 18/11/2021 அன்று கூடி விவாதிக்கும்

என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

சுழியப்பலன் ZERO FITMENT தற்போது

நாடெங்கும் விவாதப்பொருளாகியுள்ளது.

எட்டுத்திக்கும் உள்ள தோழர்களின் எதிர்பார்ப்பு 

எட்டுத் தோழர்களின் மேல் ஏற்றிவிடப்பட்டுள்ளது.

முயற்சி முழுமையாக இருந்தால் பலன்கள் பூஜ்யமாகாது.

முயற்சி திருவினையாக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.

No comments:

Post a Comment