Tuesday 23 November 2021

DOTயுடன் சந்திப்பு

DOTயுடன் AUAB அனைத்து சங்க கூட்டம் 24/11/2021  அன்று டெல்லியில் நடைபெறுகின்றது.

12 சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றார்கள்.

கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன.

BSNLக்கு 4G  விரைவில் வழங்குவது.

4G தாமதத்தால் BSNLக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை அரசு ஈடுகட்டுவது.

BSNLக்கு DOT தரவேண்டிய ரூ.39 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்குவது.

BSNL செல்கோபுரங்கள் மற்றும் OFC வழித்தடங்களை தனியாருக்கு கொடுக்கும் அரசின் முடிவைக் கைவிடுவது.

ஓய்வூதியப்பங்களிப்பு... வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்வது.

BSNL நிலங்களை விற்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி BSNL கடன்களை அடைப்பது.

அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துதல்.

அதிகாரிகளின் E2 மற்றும் E3 சம்பள விகிதங்களை BSNL நிறுவனத்தின் பரிந்துரையின்படி மாற்றிமைத்தல்.

தோழர்களே...

DOTயுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அங்கீகாரம் என்பதைத் தாண்டி அனைத்து சங்கப்பிரதிநிதிகளும் AUAB என்ற குடையின் கீழ் அதிகாரிகள் ஊழியர்கள் என்ற பாகுபாடின்றி கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. FNTO சங்கம் அனைத்து சங்க கூட்டமைப்பில் இல்லை. ஊழியர் நலன் கருதி ஒன்றுபட்ட அமைப்பில் அவர்களும் இணைவார்கள் என்பது நமது எதிர்பார்ப்பு.

புதிய DOT செயலர் பதவியில் அமர்ந்த பிறகு ஊழியர்கள் பிரச்சினையில் சற்று அசைவு ஏற்படுகின்றது. கடந்த காலத்தில் ஊழியர் சங்கப்பிரதிநிதிகளை சந்திப்பதை DOT தவிர்த்து வந்தது.  03/12/2021 அன்று ஊதியக்குழு அடுத்த கூட்டம் நடைபெறவுள்ள சூழ்நிலையில் DOTயுடனான கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.

No comments:

Post a Comment