Thursday 28 February 2019


பணிமுடிப்பு வாழ்த்துக்கள்…

காரைக்குடியில் கணக்கதிகாரியாய்ப் பணிபுரியும்
தோழியர் V.மீனாள் 
AO அவர்கள்
01/03/2019 இன்றோடு BSNL நிறுவனத்தில்
தனது பணியை முடித்துக்கொண்டு 
விருப்ப ஓய்வில் செல்கின்றார்.
அவருக்கு நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

இன்னும் ஓராண்டுக்கும் அதிகமாக சேவைக்காலம் இருந்தும்
சரியான தருணத்தில் அவர் விருப்ப ஓய்வில் செல்கின்றார்.
அவரைப்போலவே பல தோழர்கள் காத்திருக்கின்றார்கள்.
இத்தகைய மனநிலையை ஊழியர்கள்
மனதில் உருவாக்குவதுதான் மத்திய அரசின்… DOTயின் திட்டம்.

பிப்ரவரி மாதம் சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்ற
இக்கட்டான சூழலில் அவர் விருப்ப ஓய்வில் செல்கின்றார்.
விருப்ப ஓய்வில் செல்லும் போது சம்பளம் கூட
அவர் வாங்காமல் செல்வது வருத்தத்துக்குரியது.
விருப்ப ஓய்வில் செல்லும் அவரோடு
வாழ்த்துக்களை மட்டுமல்ல
வருத்தங்களையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

எத்தகைய சோதனைகளையும் சந்தித்து
அவற்றை சாதனைகளாக மாற்றியமைப்பதுதான் தொழிற்சங்கம்...
நிச்சயம் இந்த அவலநிலையை மாற்றியமைப்போம்…

வாழ்த்து சொல்ல 9486101901...

No comments:

Post a Comment