Tuesday 4 May 2021

ஒப்பற்ற ஒப்பந்த ஊழியர் தீர்ப்பு

ஜனவரி 2019 முதல் அக்டோபர் 2019 வரை சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் TMTCLU சங்கம் சார்பாகவும்...TNTCWU சங்கம் சார்பாகவும் வழக்குத் தொடுக்கப்பட்டது. 19 மாதங்களுக்குப் பிறகு 28/04/2021 அன்று வழக்கு ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகவும் சாதகமாக இறுதி முடிவு பெற்றுள்ளது.

வழக்கில் மிகவும் போற்றப்பட வேண்டியவர் மாண்பமை நீதிபதி திரு.சுரேஷ்குமார் அவர்கள். அவரது மனிதாபிமானமிக்க முடிவுகளால் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட்டுள்ளது.

கொடிய கொரோனா காலத்திலும் கூட இந்த வழக்கில் 10 விசாரணைகள் செய்யப்பட்டு இடைக்காலத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

21/01/2020.... 06/03/2020... 22/09/2020... 16/10/2020... 05/11/2020...

07/01/2021.... 22/03/2021... 09/04/2021... 21/04/2021... 28/04/2021

ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

நீதிமன்ற உத்திரவின்படி...

BSNL நிர்வாகம் ரூ.35 கோடியே 40 லட்சம் ரூபாயை தொழிலாளர் ஆணையரின் சிறப்புக் கணக்கில் செலுத்தியது.

நீதிமன்றத்தால் பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்ட தொழிலாளர் ஆணையர் மூலம்...

13/11/2020 அன்று தீபாவளிக்கு முன்பாக..

1857 ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.6,10,15,236/= வழங்கப்பட்டது.

03/04/2021 அன்று... 2875 ஒப்பந்த ஊழியர்களுக்கு 

ரூ. 8,35,72,158/= வழங்கப்பட்டது.

20/04/2021 அன்று... 4670 ஒப்பந்த ஊழியர்களுக்கு 

ரூ. 20,48,63,574/= வழங்கப்பட்டது.

இதுவரை ரூபாய். 32,07,51,841/= சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

543 ஊழியர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் சரியில்லை என்று சொல்லி ரூ. 2,86,99,127/= SBI வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இவை போக இன்னும் ரூ.45,48,776/= தொழிலாளர் ஆணையரின் வங்கிக்கணக்கில் மிச்சம் உள்ளது.

இந்நிலையில்...

28/04/2021 அன்று இந்த வழக்கின்

இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு வழக்கு முடிவுற்றுள்ளது.

இறுதித்தீர்ப்பின்படி...

விடுபட்ட 543 ஊழியர்களின் வங்கிக்கணக்குகள் சரிசெய்யப்பட்டு பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

மிச்சமுள்ள 45 லட்சம் ரூபாயை உடனடியாக BSNL நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்த அவசியமில்லை. இன்னும் விடுபட்டவர்கள் இருந்தால் அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும். ஆறு மாத காலத்திற்குப்பின் ஏதேனும் பணம் மிச்சமிருந்தால் BSNL நிறுவனத்திற்கு திருப்பி அளிக்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ஊழியர்களது EPF மற்றும் ESI போன்றவை அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

EPF மற்றும் ESI  கணக்கில் பணம் செலுத்திய பின்பு ஒப்பந்தகாரர்களுக்கு பில் பட்டுவாடா நிலுவை இருந்தால் மேலும்  ஒரு மாத கால அவகாசத்திற்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

BSNL நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி பட்டுவாடா செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் 6 சத வட்டியுடன் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

வழக்கறிஞர் திரு N.K.சீனிவாசன் எழுப்பிய போனஸ் சம்பந்தமாக...ஒப்பந்த ஊழியர் சங்கங்கள் BSNL நிறுவனத்துடன் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா கொடிய காலத்தைக் கணக்கில் கொண்டு ஊழியர்களுக்குத் தொடர்ந்து பணி கொடுக்க வழிவகை உள்ளதா என BSNL நிறுவனம் முயற்சிக்க வேண்டும். 

ஒப்பந்த ஊழியர்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒப்பற்ற தீர்ப்பாகும். தீர்ப்பு நல்கிய மாண்பமை நீதிபதி அவர்களுக்கும்.... அயராது வாதாடிய வழக்கறிஞர்களுக்கும்.... ஒப்பந்த ஊழியர் சங்கங்களுக்கும்...BSNL நிறுவன அதிகாரிகளுக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்....

No comments:

Post a Comment