Monday 10 May 2021

 விழிகளில் வெள்ளம்...

தோழர். சந்திரகாந்தன்

கொரோனா என்னும் மூடக்கிருமி...

அறிவார்ந்த பல ஆளுமைகளை காவு கொண்டு விட்டது... 

அந்த வரிசையில்....

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற மாநில உதவித்தலைவரும்...

இராமநாதபுரம்.... சிவகங்கை பகுதிகளில்

கலைஇலக்கியப் பெருமன்றத்தை வளர்த்தவரும்

சிறந்த சிந்தனையாளரும்... எழுத்தாளரும்....

தொழிற்சங்கவாதியும்.... பொதுவுடைமைவாதியுமான

தோழர் சந்திரகாந்தன் 

அவர்களை கொரோனா என்னும் கொள்ளை நோய்

அவரது சிந்தனையை... செயல்பாட்டை நிறுத்தி விட்டது. 

09/05/2021 அன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில்

தோழர் சந்திரகாந்தன்

தனது மெல்லிய சிரிப்பை..

மானுடம் சார்ந்த சிந்தனையை நிறுத்திக்கொண்டார். 

மிகவும் பிற்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து...

மதுரையில் படித்து...

படிக்கும்போது பொதுவுடைமைச்சிந்தனையில் தோய்ந்து...

வங்கிப்பணியில் சேர்ந்து...

தொழிற்சங்கத்தில் பணிசெய்து....

கலை இலக்கியத்தில் தன் காலம் முழுவதும் செலவிட்டவர்

தோழர் சந்திரகாந்தன்... 

தோழர் ஜெயகாந்தனை தன் காலம் முழுவதும் போற்றி வந்தார்...

தொடரும் என்னும் சிற்றிதழை நடத்தி வந்தார்...

வயதில் இளையவர்களோடும்.... மூத்தவர்களோடும்...

அடிகளாரோடும் ... அறிவு சான்ற ஆன்றோர்களோடும்....

BSNL மற்றும் அஞ்சல் தோழர்களோடும்...

மிகவும் நெருக்கமான தோழமை பூண்டிருந்தார்... 

சிறந்த படைப்பாளியாக... படிப்பாளியாக...

நடமாடும் நூலகமாக... பல்கலைக்கழகமாக அவர் திகழ்ந்தார்....

அவரது மறைவு கலை இலக்கியத்திற்கு ஆகப்பெரும் இழப்பு... 

வைகையில் வெள்ளம்...

என்பது அவர் எழுதிய நாவல்....

இன்றோ....

அவரை நினைக்கையிலே....

நம் விழிகளில் வெள்ளம்...

No comments:

Post a Comment