Tuesday 2 June 2020


DA வழக்கு தள்ளுபடி

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 
DA முடக்கப்பட்ட உத்திரவினை எதிர்த்து டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

01/06/2020 திங்கட்கிழமையன்று அந்த வழக்கை விசாரித்த 
டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதிகள் திருவாளார்கள் விபின் சங்கி மற்றும் ரஜ்னீஷ் பட்னாகர் ஆகியோர் அடங்கிய நீதி இருக்கை DA விதிகள் 1972ன்படி 
அரசுக்கு விலைவாசிப்படியை நிறுத்தி வைக்கும்
 அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும்...
தனது ஊழியர்களுக்கு விலைவாசிப்படியை 
தொடர்ந்து கொடுக்கவோ அல்லது உயர்த்திக் கொடுக்கவோ 
வேண்டிய சட்டரீதியான கடர்ப்பாடு அரசுக்கு இல்லை...

காலச்சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் அதிகாரம் 
அரசுக்கு எப்போதும் உண்டு...

ஜனவரி மாத DA நிறுத்தப்படவில்லை...
ஜூலை 2021 வரை தள்ளிமட்டுமே போடப்பட்டுள்ளது...

விலைவாசிப்படி நிறுத்தம் என்பது
சம்பளக்குறைப்பு என்று பொருள்படாது...

குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து விலைவாசிப்படியைப் பெறுவது என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 
ஓய்வூதியர்களின் சட்டரீதியான உரிமையல்ல...
எனவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது 
என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

விலைவாசிப்படி என்பது அரசின் கருணையினால் பிறந்ததல்ல...
மத்திய அரசு ஊழியர்கள் பல காலம் போராடிப் பெற்ற உரிமை...
குறிப்பாக தபால் தந்தி ஊழியர்களுக்கு... 
NFPTE சங்கத்திற்கு பெரும் பங்குண்டு...
ஆனால் போராடிப்பெற்ற உரிமைகள் எல்லாம்
இன்று காற்றில் பறக்கும் நிலை வந்து விட்டது.

விலைவாசிப்படி தொழிலாளரின் உரிமையல்ல...
என்று சொல்லிவிட்டது நீதிமன்றம்.

நாளை ஊதியமும்.. ஓய்வூதியமும்...
உழைப்பவனின் உரிமை இல்லை... 
என்று சொல்லும் காலம் வரலாம்...
எதுவரினும் எதிர்கொள்வோம்...

No comments:

Post a Comment