Tuesday 2 March 2021

 அலைக்கற்றை ஏலம்

கடந்த 2016ம் ஆண்டிற்குப் பின் தற்போது 01/03/2021 அன்று அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. அலைக்கற்றை ஏலத்தின் மூலம் ஏறத்தாழ 4லட்சம் கோடி வருமானம் என்பது அரசின் இலக்காகும். ஏலத்தில் JIO, AIR TEL மற்றும் VODOFONE IDEA  ஆகிய மூன்று நிறுவனங்கள் கலந்து கொண்டன.

RELIANCE JIO ஏலத்தில் பங்கேற்க ரூ.10 ஆயிரம் கோடி விருப்பத்தொகை செலுத்தி உள்ளது. 

AIRTEL ரூ.3 ஆயிரம் கோடி விருப்பத்தொகை செலுத்தி உள்ளது. 

VODOFONE IDEA  ரூ.475 கோடி விருப்பத்தொகை செலுத்தி உள்ளது.

ஏலம் எடுக்கும் நிறுவனம் ஏலத்தொகையை ஒரே தவணையில் செலுத்தலாம். அல்லது  25 சதவீத தொகையையோ 50 சதவீத தொகையையோ முதலில் செலுத்திவிட்டு மீதியை அதிகபட்சம்16 தவணைகளில் செலுத்தலாம்.

முதல் நாள் ஏலம் 77146 கோடி ரூபாய்க்கு விடப்பட்டது. அரசு தரப்பில் 45000 கோடி ரூபாய் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 77ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

 4G அலைக்கற்றைக்கான போட்டி கடுமையாக இருந்தது. இன்னும் சில காலங்களில் அனைத்து வாடிக்கையாளர்களும் 4G சேவைக்கு மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாலும்..

விரைவில் இந்தியாவில் மலிவு விலையில் 4G மொபைல் போன் விற்பனைக்கு வர இருப்பதாலும் 4G அலைக்கற்றைக்கு கூடுதல் போட்டி காணப்பட்டது.

5G அலைக்கற்றைக்கான ஏலம் தற்போது இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விடப்பட்டுள்ள அலைக்கற்றை 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 2ஆண்டுகளுக்கு அலைக்கற்றையை மறுவிற்பனை செய்ய முடியாது.

இருபது ஆண்டுகளில்  4 புதிய அரசுகள் வரலாம். ஆனாலும் மற்றவர்களுக்கு வேலை வைக்காமல் இந்த அரசே அலைக்கற்றையை விற்பனை செய்து முடித்து விடும்.

அலைக்கற்றை பெறுவதற்கு நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்வதால் பெட்ரோல் டீசல் விலையைப் போல் தொலைத்தொடர்பு கட்டணங்களும் கூடுதலாக வாய்ப்புள்ளது.

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும் என்று கடந்த அக்டோபர் 2019ல் அரசு வெளியிட்ட அறிவிப்பு AIIMS மருத்துவமனை அறிவிப்புக்கள் போலவே அப்படியே உள்ளது. தனியாருக்கு அலைக்கற்றை முதல் அனைத்தையும் ஒதுக்கும் அரசு BSNL நிறுவனத்தை ஒதுக்கியே வைத்துள்ளது ஏற்புடையதல்ல.

No comments:

Post a Comment