Friday 5 March 2021

 8 சத EX GRATIA பட்டுவாடா

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்கள் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது அவர்களது 8 சத EX GRATIA பட்டுவாடா என்னாச்சு?  என்பதுதான்.

ஓயாத அந்த வினாவிற்கு விடையளித்து BSNL நிர்வாகம் 

இன்று 05/03/2021 உத்திரவிட்டுள்ளது.

அந்த உத்திரவின்படி...

8 சத EX GRATIA பட்டுவாடாவிற்கான நிதி ஒதுக்கீடு DOTயில் இருந்து BSNLக்கு வந்துள்ளது. எனவே 10/03/2021க்குள் பட்டுவாடா செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்படும்.

EX GRATIA பட்டுவாடா PPO எனப்படும் ஓய்வூதிய உத்திரவில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி அடிப்படைச்சம்பளத்தின் LAST PAY DRAWN அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்பட்டு பட்டுவாடா செய்யப்படும். BSNLலில் பெற்ற கடைசி அடிப்படைச்சம்பளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. DOTயின் CCA அலுவலகம் அனுமதித்த LAST PAY DRAWN கடைசி அடிப்படைச்சம்பளம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்கள் சிலருக்கு 

ஆண்டு உயர்வுத்தொகை, நாலுகட்டப்பதவி உயர்வு

மற்றும் ஏதேனும் சம்பளப்பிரச்சினைகள் இருந்தால்

அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

திருத்தப்பட்ட கடைசி அடிப்படைச்சம்பளம் 06/03/2021 மதியம் 12 மணிக்குள் DOTயின் CCA அலுவலகத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். நிலுவைப் பிடித்தங்கள் மற்றும் வருமான வரி பிடித்தம் இருந்தால் கட்டாயமாக  பட்டுவாடாவில் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட பணிகள் 08/03/2021க்குள் முடிக்கப்பட வேண்டும். 

அதன் பின் BSNL  தலைமை அலுவலகத்தின் வங்கிப்பிரிவு 09/03/2021 அன்று மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்.

அதன் பின் பட்டுவாடா நடைபெறும் என்று உத்திரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தோழர்களே..

விருப்ப ஓய்வில் சென்ற பல தோழர்களுக்கு

கடைசி அடிப்படைச்சம்பளத்தில் குறைபாடுகள் உள்ளன.

குறிப்பாக RM கேடரில் இருந்து PM ஆன தோழர்களுக்கு

ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வெட்டப்பட்டது.

01/10/2000க்கு முன்பு DOT காலத்தில் பதவி உயர்வு பெற்று

01/10/2000க்கு பின் BSNL உருவான பின் ஆண்டு உயர்வுத்தொகைக்கு விருப்பம் கொடுத்தவர்களின் அடிப்படைச்சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. பல தோழர்களுக்கு நாலுகட்டப்பதவி உயர்வு விடுபட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையில் இருந்தவர்கள் பலருக்கு அடிப்படைச்சம்பளம் சரி செய்யப்படவில்லை.

TTAவாக இருந்து JTO பதவி உயர்வு பெற்ற தோழர்கள் பலரின் அடிப்படைச்சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நிர்வாகம் 24 மணி நேர கெடு விதித்து நாளைக்குள் இவையெல்லாம் சரிசெய்யப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் குறைக்கப்பட்ட அடிப்படைச்சம்பளத்தின் அடிப்படையில் EX GRATIA பட்டுவாடா செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

இது பெரும் அநீதியாகும்.

மேலும் குடியிருப்பில் வசிக்கும் அல்லது காலி செய்த தோழர்கள் NO DUES சான்றிதழ் அளிக்க வேண்டும். இல்லையெனில் 8 சத பட்டுவாடா இல்லை எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவும் பெரும் அநீதியாகும்.

எந்த வித நிலுவைப் பிடித்தங்கள் இருந்தாலும்

ஒரு ஊழியருக்கு பணிக்கொடை அளிக்கும்போது

அதில் பிடித்தம் செய்து கொள்ளலாம்...

குடியிருப்பில் வசிப்போருக்கு 10 சதம்

பணிக்கொடையில் பிடித்தம் செய்யப்படும்  என்ற நடைமுறைகள்  இருந்த போதும் நிர்வாகம் விருப்ப ஓய்வில் சென்ற ஊழியருக்கு விரும்பத்தகாத கெடுபலன்களை அளிப்பது விரும்பத்தகுந்ததல்ல. 

குறைக்கப்பட்ட அடிப்படைச்சம்பளத்தில் EX GRATIA பெறும்  தோழர்கள் அதனை எதிர்த்துப் போராட வேண்டும். 

உழைத்த சம்பளம் நமது உரிமை.

No comments:

Post a Comment