Friday 12 March 2021

வங்கி... LIC ... ஆயுள்காப்பீடு 

வேலைநிறுத்தம்

இம்முறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பொதுத்துறைகளை நாசம் செய்யும் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக வங்கிகள் தனியார் மயம்... LIC பங்கு விற்பனை, ஆயுள் காப்பீட்டுக்கழகங்கள் தனியார் மயம் என மிக மிக மோசமான விற்பனை அறிவிப்புக்கள் மட்டுமே இடம் பெற்றன. இந்திய தேசம் விடுதலை பெற்ற பின் இத்தகைய மோசமான ஆட்சியை.... அணுகுமுறையை மக்கள் கண்டதில்லை. எனவே வங்கி ஊழியர்களும்.... ஆயுள் காப்பீட்டு ஊழியர்களும்.... LIC ஊழியர்களும் போராட்டக்களம் காண்கிறார்கள்.

இந்த தேசத்தில் இப்போது உரிமைக்காக போராடுபவர்களுக்கு மதிப்பில்லை. எந்த போராட்டமாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதே தற்போதைய ஆட்சியாளர்களின் நடைமுறையாக உள்ளது. ஆயினும் போராடாமல் வாழ்வில்லை.... போராடாமல் உயர்வில்லை... போராடாமல் உய்வில்லை....

எனவே போராடும் வங்கி ஊழியர்கள்... LIC ஊழியர்கள் மற்றும் INSURANCE ஊழியர்களுக்கு  வாழ்த்துக்களை உரித்தாக்குவோம். தற்போதைய நிலையில் BSNL ஊழியர்களால் அது மட்டுமே சாத்தியமாகும்

No comments:

Post a Comment