Wednesday 26 February 2020

செ ய் தி க ள்

சம்பளப்பட்டுவாடா
ஜனவரி மாத சம்பளம் மார்ச் முதல் வாரத்திலும்... 
பிப்ரவரி மாதச்சம்பளம் மார்ச் மாத இறுதியிலும் கிடைக்கும் என பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வருடாந்திர பில்கள் பட்டுவாடா நிகழ்வதால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனாலும் மார்ச் மாதச்சம்பளம் 
மார்ச் மாதமே கிடைக்குமா என்பது சந்தேகமே...
 பொறுமை கடலினும் பெரிது...
-----------------------------------
GFP பட்டுவாடா
விருப்ப ஒய்வில் சென்ற ஊழியர்களின் GPF விண்ணப்பங்கள் 
இன்று 27/02/2020 மாலைக்குள் சம்பந்தப்பட்ட
 DOT அலுவலகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. இதுவரை ஏறத்தாழ 68ஆயிரம் ஊழியர்களுக்கு நாடுமுழுக்க வைப்புநிதி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
 வைப்புநிதி பட்டுவாடாவில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பது வருத்தத்திற்குரியது. வைப்புநிதி போலவே ஆயுள் காப்பீட்டுத்தொகை பட்டுவாடாவிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது.
 பல்வேறு மாநிலங்களில் ஆயுள் காப்பீடு
 பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------
இலாக்காத் தேர்வுகள்
போன்மெக்கானிக், J.E.,. JTO மற்றும் JAO இலாக்காத் தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என நிர்வாகம் நமது சங்கத்திடம் உறுதி அளித்திருந்தது. ஆனால் பிப்ரவரி மாதம் முடிவடையும் நிலையில் அறிவிப்பிற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எனவே உடனடியாக இலாக்காத் தேர்வு அறிவிப்புக்களை வெளியிட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
-----------------------------------
கூட்டுறவு சங்கப்பிடித்தம்
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் அனைத்துப் பிடித்தங்களும் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் கூட்டுறவு சங்கப்பிடித்தங்கள் மட்டும் இன்னும் பட்டுவாடா செய்யப்படவில்லை. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகையை சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளன. சென்னைக்கூட்டுறவு சங்கம் உறுப்பினர்களின் – ASSET சொத்துக்களைக் கடனில் இருந்து கழித்து மிச்சமுள்ள கடன்தொகைக்கு பட்டியல் அனுப்பியுள்ளது. ஆனால் 2019 ஏப்ரல் மாதம் வரை வரவு வைக்கப்பட்ட பிடித்தம் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. 2019 மே மாதம் முதல் ஜனவரி 2020 
வரையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை
 கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மதுரை கூட்டுறவு சங்கம் சொத்துக்கணக்கை கழிக்கவில்லை. 
மதுரை கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடு கரடு முரடாக 
ஊழியர் விரோதமாக உள்ளது. எனவே ஊழியர்களின் சொத்துக்கணக்கு அவர்களின் கடன் தொகையில் இருந்து கழிக்கப்படவில்லை என்றால் மதுரை கூட்டுறவு சங்கத்தை எதிர்த்துப் போராடுவதைத் தவிர 
வேறு வழியில்லை. தோழர்கள் தயாராகவும்....

1 comment: