Friday 14 February 2020


தற்காலிக ஓய்வூதியம்
PROVISIONAL PENSION

விருப்ப ஓய்வில் சென்ற BSNL மற்றும் MTNL ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பட்டுவாடா செய்வதில் தாமதம் நிலவும் சூழல் உள்ளதால் மே 2020 வரை தற்காலிக ஓய்வூதியம் 
PROVISIONAL PENSION வழங்கிட DOT உத்திரவிட்டுள்ளது.

  • விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் LAST PAY DRAWN கடைசி மாத அடிப்படைச்சம்பளத்தில் 50 சதம் ஓய்வூதியம் உரிய IDAவுடன் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
  • தற்காலிக ஓய்வூதியம் மே 2020 வரை வழங்கப்படும்.
  • மே 2020க்குள் நிரந்தர ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • தற்காலிக ஓய்வூதியம் ஊழியர்கள் கடைசியாக சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். எனவே ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களது கடைசி மாத சம்பளக் கணக்கை மாற்றக்கூடாது.
  • தற்காலிக ஓய்வூதியம் SBI வங்கி மூலம் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
  • தற்காலிக ஓய்வூதியம் அளிப்பதற்கான விவரங்களை அந்தந்த மாநில நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட DOT அலுவலகங்களுக்கு அனுப்பிட வேண்டும். மாநில நிர்வாகங்களிடமிருந்து உரிய தகவல் பெறப்பட்ட பின்பு DOT தற்காலிக ஓய்வூதியத்தை வழங்கும்.
  • மே 2020 வரையிலான மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 24ந்தேதிக்குள் ஓய்வூதியப் பட்டுவாடா ஆணை  PPO பிறப்பிக்கப்பட்டால் அந்தந்த மாதமே நிரந்தர ஓய்வூதியம் வழங்கப்படும். 24ந்தேதிக்குப் பின்னர் PPO உத்திரவு பிறப்பிக்கப்பட்டால் அடுத்த மாதம் நிரந்தர ஓய்வூதியம் SAMPANN மூலம் வழங்கப்படும்.

உதாரணமாக மார்ச் 24ந்தேதிக்குள் ஒரு ஊழியருக்கு PPO உத்திரவு பிறப்பிக்கப்பட்டால் மார்ச் மாதமே நிரந்தர ஓய்வூதியம்  SAMPANN மூலம் வழங்கப்படும். மார்ச் 24ந்தேதிக்குப் பின் PPO உத்திரவு பிறப்பிக்கப்பட்டால் மார்ச் மாதம் தற்காலிக ஓய்வூதியமும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிரந்தர ஓய்வூதியமும் வழங்கப்படும்.

தோழர்களே...
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளங்கள் வழங்கப்படாத நிலையில் ஊழியர்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர். 

மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் நகரில் இராமேஸ்வர் குமார் என்ற ATT சம்பளம் வராத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். 

இது போன்ற நிலையில்...
DOT உடனடியாக தற்காலிக ஓய்வூதியம் வழங்கிட உத்திரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது. தற்போதுள்ள சூழலில் தற்காலிக ஓய்வூதியம் விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment