Friday 25 September 2020

 சங்கம் சேருதல் புது நடைமுறை

BSNL ஊழியர்கள் சங்கம் சேருவதற்கான பழைய நடைமுறையை மாற்றி அமைக்க நிர்வாகம் உத்தேசித்துள்ளது. 

தற்போதுள்ள நடைமுறைப்படி... 
  • அதற்கான படிவத்தில் ஆண்டுக்கு ஒருமுறை கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடமும் புதிதாக சேரவிருக்கும் சங்கப்பொறுப்பாளர்களிடமும் கையெழுத்து வாங்கி கணக்கு அதிகாரியிடம் சேர்க்க வேண்டும். 
  • அதற்குப் பதிலாக ஊழியர்கள் தங்களது ERP- ESS இணையம் வழியாக ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரு மாதத்தில் சங்கம் சேருவதற்கான தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம். 
  • கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் சங்கப்பொறுப்பாளர்களின் கையெழுத்து தேவையில்லை. 
  • முதன்முறையாக சங்கம்  சேருபவர்கள் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.குறிப்பிட்ட மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை. 
  • ஒவ்வொரு மாதமும் சங்கப்பொறுப்பாளர்களுக்கு EMAIL மூலமாக அவர்களது சங்க உறுப்பினர்கள் விவரமும் சந்தாப்பிடித்த விவரமும் தெரியப்படுத்தப்படும்.
இது சம்பந்தமாக அனைத்து சங்கங்களிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் 24/09/2020 அன்று வெளியாகியுள்ளது. சங்கங்களின்  கருத்துக்கள் 08/10/2020க்குள் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகள் டெல்லித் தலைமையிடத்தில் பணிச்சுமை குறைவாக இருப்பதையேக் காட்டுகிறது.

No comments:

Post a Comment