Monday 19 October 2020

 வணிகப்பகுதி மறுசீரமைப்பு

தமிழகத்தில் 01/06/2020 முதல் பல்வேறு மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வணிகப்பகுதிகள் உருவாக்கப்பட்டன. வணிகப்பகுதி உருவாக்கத்தில் பல்வேறு எதிர்க்குரல்கள் எழுந்தன. எனவே வணிகப்பகுதிகள்  மறுசீரமைக்கப்பட்டு உத்திரவுகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வணிகப்பகுதி உருவாக்கம் 01/11/2020 முதல் அமுலாகும். அதற்கு முன்பாக புதிய வணிகப்பகுதி இணைப்பிற்கான அலுவலக நடைமுறைகள் மாற்றிமைக்கப்பட வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை வணிகப்பகுதி

காரைக்குடி மாவட்டம் மதுரை வணிகப்பகுதியோடு இணைக்கப்பட்டிருந்தது. தற்போது விருதுநகர் மாவட்டம் தூத்துக்குடி வணிகப்பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு மதுரையோடு இணைக்கப்படுகின்றது.  மதுரை, காரைக்குடி மற்றும் விருதுநகர் இணைந்து மதுரை வணிகப்பகுதியாக செயல்படும்.

திருநெல்வேலி வணிகப்பகுதி

திருநெல்வேலி மாவட்டம்  நாகர்கோவில் வணிகப்பகுதியோடு இணைக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய வணிகப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தனி வணிகப்பகுதியாக இருந்த தூத்துக்குடி தனது வணிகப்பகுதி என்னும் தகுதி இழந்து திருநெல்வேலியுடன் இணைக்கப்படுகின்றது.

நாகர்கோவில் வணிகப்பகுதி

நாகர்கோவில் வணிகப்பகுதியில் இருந்து திருநெல்வேலி பிரிக்கப்பட்டுள்ளதால் நாகர்கோவில் மாவட்டம் தனி வணிகப்பகுதியாக செயல்படும்.

வணிகப்பகுதி உருவாக்கத்தில் விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் அதிருப்தி நிலவியது. தற்போது அவர்களது கோரிக்கை நிறைவேறியுள்ளது.  NFTE மத்திய சங்கத்திற்கு நன்றிகள் பல...

No comments:

Post a Comment