Tuesday 6 October 2020

 BSNL  வாடகைக்கு


விருப்ப ஓய்வில் பல ஆயிரம்  ஊழியர்களும் அதிகாரிகளும் விடைபெற்றுச்சென்ற பின்பு நமது பல அலுவலகங்கள் வெறிச்சோடி விட்டன. இந்த அலுவலகங்களை வாடகைக்கு விட்டு வருமானம்
 தேட BSNL நிர்வாகம் ஏற்கனவே முடிவெடுத்து
 நடவடிக்கையில் இறங்கி விட்டது. 

அதன் ஒரு பகுதியாக மத்திய புள்ளியியல் துறை NATIONAL STATISTICAL OFFICE இந்தியா முழுவதும் தனது அலுவலகங்களை BSNL அலுவலகங்களில் வாடகைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாடகைக்கு அணுகியுள்ளது.

 தற்போது 9 இடங்களில் வாடகை முடிவாகி விட்டது. தமிழகத்தில் திருச்சி, சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் புள்ளியியல் துறைக்கு நமது அலுவலகங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன.  மதுரை பீபிகுளம் பகுதியில் அமைந்துள்ள பொதுமேலாளர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் இரண்டாவது தளம் ரூ.1,59,500/=மாத வாடகைக்கு  புள்ளியியல் துறைக்கு வாடகைக்கு விடப்படுகின்றது. ஒரு தொலைபேசி நிலைய வருமானத்தை விட வாடகையில் கூடுதல் வருமானம் கிடைக்கின்றது. 

BSNL நிறுவனத்தை வாடகைக்கு விடுவதோடு நிறுத்திக்கொண்டால் நலம். TO LET என்பதை FOR SALES என்று மாற்றாமல் இருந்தால் சரி.

No comments:

Post a Comment