Wednesday 7 October 2020

 அண்ணல் காந்தி அவதாரதின விழா 

மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலைய வளாகத்தில் 02/10/2020 அன்று அண்ணல் காந்தி பிறந்த தின விழா நமது சங்கத்தால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  காந்தி அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தி நினைவிடத்தில் தோழர்.சுபேதார் அலிகான் மற்றும் தோழர்.மாரி ஆகியோர் மதுரையின்   மூத்த தியாகிகளோடு இணைந்து அஞ்சலி செலுத்தினர். 

தல்லாகுளம் தொலைபேசி  நிலைய வளாகத்தில் அமைந்துள்ள 1950ம் ஆண்டு அமைக்கப்பட்ட அண்ணல் காந்தி சிலைக்கு தூய்மைப்பணியாளர் தோழர் சுப்பிரமணி மாலையணிவித்தார். சிறந்த நாடக நடிகரும் பாடகருமான தோழர்.சாகுல் மிகவும் பரவசமான இசையஞ்சலி செலுத்தினார். எழுத்தாளர் சந்திரகாந்தன் மகாத்மா காந்தியின் ஆயுதங்களற்ற உலைகப் பற்றியும், அவரது கொள்கைகளின் இன்றைய அவசியம் பற்றியும் சிறப்புடன் எடுத்துரைத்தார். 

மூத்த தோழர் சேது மற்றும்  மதுரை, விருதுநகர், காரைக்குடி தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் புகழ் பாடும் பணியில் என்றும் NFTE தன் பங்கினைச் செலுத்தும்.

No comments:

Post a Comment