Friday 16 October 2020

 ஒப்பந்த ஊழியர் வழக்கு

ஒப்பந்த ஊழியர்களுக்கு  தொடர்ந்து வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட  சம்பளத்தை வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்கம் வழக்கறிஞர் தோழர். N.K.சீனுவாசன் அவர்கள் மூலமாகத் தொடுத்திருந்த வழக்கில் பல்வேறு இடைக்காலத் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்த போதும் BSNL நிர்வாகம் முறையாக தீர்ப்புக்களை மதித்து நடக்கவில்லை. 

ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து துயரத்தை அனுபவித்து வந்த நிலையில் 16/10/2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் சம்பளம் வழங்குவது பற்றி உத்திரவிட்டுள்ளது. 

அந்த உத்திரவின்படி...

ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் உடனடியாகக் கணக்கிடப்பட்டு மொத்த தொகையில்....

  • முதல் 25 சதம் 31/10/2020க்குள் வழங்கப்பட வேண்டும்.
  • அடுத்த 25 சதம் 20/11/2020க்குள் வழங்கப்பட வேண்டும்.
  • மிச்சமுள்ள 50 சதம் 20/12/2020க்குள் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தொகையை  BSNL நிறுவனம் தொழிலாளர் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்பந்தகாரர்களுக்கு பட்டுவாடா செய்யக்கூடாது.

மேற்கண்ட தொகை 

“CONTRACT WORKERS WAGE DUE W.P.Nos.34513 & 34570 of 2019”

என்ற கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

நவம்பர் 14 தீபாவளி பண்டிகை வருவதால் 31/10/2020க்குள் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏதேனும் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் BSNL நிறுவனம் முதல் 25 சத தொகையை செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பளப்பட்டுவாடா தொழிலாளர் ஆணையர் மூலமாக நடைபெறும். பட்டுவாடாவை எவ்வாறு ஊழியர்களுக்கு வழங்குவது என்பது பற்றி BSNL நிறுவனம் தொழிலாளர் ஆணையருடன் பேசி முடிவு செய்யும்.

வழக்கு 05/11/2020 அன்று 

மீண்டும் விசாரணைக்கு வரும்.

தோழர்களே...

இருள் சூழ்ந்து கிடந்த ஒப்பந்த ஊழியர்கள் சம்பளப் பிரச்சினையில் இப்போதுதான் வெளிச்சம் பரவத்தொடங்கியுள்ளது. தீபாவளிக்கு முன்பாக நிச்சயம் ஒப்பந்த ஊழியர்கள் கைகளில் அவர்கள் உழைத்த பணத்தின் ஒரு பகுதி கிடைக்கும் என்று நம்புவோம். இந்த ஆண்டிற்குள் ஒட்டுமொத்த ஊதியமும் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

ஒடுக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு

நீதிமன்றத்தின் மூலம்

நீதி கிடைத்திட... நியாயம் கிடைத்திட...

பாடுபட்ட TMTCLU சங்கத்திற்கும்...

அதன் பொதுச்செயலர் தோழர்.செல்வம் அவர்களுக்கும்...

வழக்கறிஞர் தோழர்.N.K.சீனுவாசன் அவர்களுக்கும்

நமது வாழ்த்துக்களும்... நன்றிகளும்... 

No comments:

Post a Comment