Thursday 8 October 2020

 ஒடுக்கப்பட்டோரின் உந்து சக்தி...

ஒடுக்கப்பட்ட மக்களின் உந்து சக்தியாய் விளங்கிய...

திரு. இராம்விலாஸ் பாஸ்வான் 

அவர்களின் மறைவிற்கு நமது அஞ்சலி....

-------------------------------------

திரு.பாஸ்வான்

அடிமட்ட மக்களின் தலைவனாகத் திகழ்ந்தார்....

DSP துணைக்கண்காணிப்பாளர் என்ற அரசுப்பதவியை

அடிமட்ட மக்களின் வாழ்வுக்காகத் துறந்தார்.....

சோசலிஸ்ட் அணியில் அரசியல் வாழ்வைத் தொடங்கினார்...

காங்கிரஸ் கால மிசா கொடுமையில் சிறைவாசம் சென்றார்...

அதே காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றார்...

அடிமட்ட மக்களின் பிரதிநிதிகள்

அதிகார பீடங்களில் அமர்ந்திட வேண்டும் என்ற

நோக்கோடு வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்...

அதனால்தான்

வி.பி.சிங்... தேவகவுடா... மன்மோகன்சிங்... வாஜ்பாய்.,. மோடி...

என அனைத்து அரசியல் அதிகார மையங்களிலும் இடம் பிடித்தார்...

இரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்று

அடிமட்ட மஸ்தூர்களின்

வாழ்வை மலரச்செய்வேன் என்று

உறுதி தந்தார்... ஆனாலும் தோல்வி கண்டார்...

BSNL என்னும் பொதுத்துறை உருவாக்கத்தின் போது

அமைச்சராக இருந்து பொதுத்துறையில் ஓய்வூதியம் என்னும்

வரலாற்று சிறப்புடைய ஒப்பந்தத்தை

தொழிற்சங்கங்களுடன் உருவாக்கினார்.

BSNL ஊழியர்கள் அனைவருக்கும்

இலவச தொலைபேசி என்பதை நடைமுறைப்படுத்தினார்...

அவரது மறைவு ஒடுக்கப்பட்டோருக்கு பெரும் இழப்பு...

No comments:

Post a Comment