Tuesday 27 October 2020

 VIGILANCE AWARENESS WEEK

உலகில் உள்ள 198 நாடுகளில்

லஞ்ச ஊழல்கள் மலிந்த நாடுகள் பட்டியலில்

இந்தியா 80வது இடத்தில் உள்ளது...

நமக்கும் மேலே 79 யோக்கியர்கள்...

நாம் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்றோம்...

 -----------------------------------------------------------------

இந்திய தேசம்... 

அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை

விழிப்புணர்வு வாரம் கொண்டாடுகிறது.

அரசு அலுவலங்களில் காகிதங்களில் எழுதப்பட்ட

உறுதிமொழிகள் வாசிக்கப்படுகின்றன...

பின்பு காற்றில் பறக்க விடப்படுகின்றன...

இதுதான் காலம் காலமாக நாம் கொண்டாடும்...

VIGILANCE AWARENESS WEEK ஆகும்...

  -----------------------------------------------------------------

லஞ்சம் ...  திருட்டு பற்றிய எந்த ஒரு  நிகழ்வையும்

அதற்குரிய நிறுவனத்திற்கு தெரியபடுத்துவேன் என்பது

இன்றைய உறுதிமொழிகளில் ஒன்றாகும்...

எனவே நம்மைச் சுற்றி நடக்கும் திருட்டுக்களில்

ஒன்றையாவது இன்று வெளிஉலகிற்குத் தெரியப்படுத்துதல்

நமது கடமையாகும்.

  -----------------------------------------------------------------

இராமேஸ்வரம் தீவு....

தீர்த்தத்திற்கும்... திருட்டுக்கும் பெயர் போனது...

அங்குள்ள  POWER PLANTல் வைக்கப்பட்டிருந்த

பல ஆயிரம் மதிப்புள்ள காப்பர் சட்டங்கள் காணவில்லை....

வேலியே பயிரை மேய்ந்துள்ளது....

என்பதுதான் வேதனையான செய்தி...

இது ஒரு சோற்றுப்பதம்...

ஒரு பானைச்சோறு நம் கண் முன்னே உள்ளது...

இன்று VIGILANCE AWARENESS WEEK...

கடைப்பிடித்த நமது நிர்வாகம்...

காப்பர் சட்டம் திருட்டு விவகாரத்தில்

விறைப்பாக இருக்குமா? WEAK ஆக இருக்குமா ?

என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments:

Post a Comment