Tuesday 10 March 2020


மனங்கவர் மகளிர் தினவிழா
மதுரை பொதுமேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில்
மகளிர்தின விழா வெகுசிறப்புடன் 10/03/2020 அன்று நடைபெற்றது.
DGM திருமதி.ரோசலின்  ராஜகுமாரி அவர்கள் தலைமையில்...
முதன்மைப்பொதுமேலாளர் மற்றும் 
அனைத்து துணைப்பொதுமேலாளர்கள் முன்னிலையில் 
மகளிர்தின விழா சிறப்புற நடைபெற்றது.
காரைக்குடி மற்றும் மதுரைப் பகுதி தோழியர்கள் 
திரளாகக் கலந்து கொண்டனர். 

தோழியர். மகேஸ்வரி அவர்கள் நிகழ்ச்சியை 
தொகுத்து வழங்கினார்.
திருமதி.உமா AGM அவர்கள் தலைமையில் 
தோழியர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக்கினர்.
தோழியர். பத்மாவதி அவர்கள் தோழர்கள் தோழியர்களுக்கான 
விளையாட்டுக்களைச் சுவைபட நடத்தினார்.

மதுரை மாநகரில் சிறந்த சமூக சேவை
 புரிந்ததற்கான விருது வழங்கப்பட்ட
முதன்மைப்பொதுமேலாளர் திருமதி.எஸ்தர் ராஜம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தோழியர்கள் மகிழ்ந்தனர்.

ஓரங்க நாடகம், உணர்ச்சிமிகு பாடல்கள், 
இனிய கானங்கள், மகிழ்ச்சிமிகு உரைகள் என
 மதுரையில் மகளிர்தின விழா 
மிகவும் மகிழ்வுடன் நடைபெற்றது. 
பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment