Thursday 12 March 2020


செ ய் தி க ள்

வைப்புநிதி பட்டுவாடா

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களின் வைப்புநிதி பட்டுவாடா பெரும்பகுதி முடிந்து விட்டது. இதில் DOTயின் பங்கு பாராட்டுக்குரியது. இன்னும் சில தோழர்களுக்குப் பட்டுவாடா நடைபெறவில்லை. மாவட்ட அலுவலகங்களில் நடந்த ஒருசில குளறுபடிகளால் இன்னும் சிலருக்குத் தேக்கநிலை நிலவுகிறது. உதாரணமாக வங்கி IFSC குறியீட்டு எண்ணைக் குறிப்பிடுவதில் குழப்பம். ஆங்கில எழுத்தான O என்பதை 0 ZERO என்றும் ZERO என்பதை O என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் சிலருக்கு பட்டுவாடாவில்  தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் வைப்புநிதி விண்ணப்பத்துடன் வேறு ஒரு ஊழியரின் வங்கிக் காசோலை மற்றும்  MANDATE இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறு சிறு தவறுகளால் பட்டுவாடாவில் ஒரு சிலருக்கு மட்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் பட்டுவாடா செய்து முடிக்கப்படும் என்று DOT  அலுவலக செய்திகள் கூறுகின்றன.
------------------------------------
CMD அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் சந்திப்பு

விருப்ப ஓய்விற்குப் பிந்தைய நிலைமை பற்றியும், BSNL மறுசீரமைப்பு பற்றியும் விவாதிக்க அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான NFTE, BSNLEU, AIBSNLEA மற்றும் SNEA சங்கங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. 18/03/2020 புதன்கிழமை மாலை கூட்டம் நடைபெறும்.
------------------------------------
விடுப்புச்சம்பளம்

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களின் விடுப்புச்சம்பளம் பட்டுவாடா
செய்வதற்கானப் பணிகள் வெகுவிரைவாக நடைபெற்று வருகின்றன.
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியரின் கடைசி மாத அடிப்படைச்சம்பளத்தைக் கணக்கிட்டுத்தான் விடுப்புச்சம்பளம் வழங்கப்படுகின்றது. எனவே ஊழியர்களின் அடிப்படைச்சம்பள விவரத்தை DOTயிடம் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
இந்தப்பணி 16/03/2020க்குள் முடிக்கப்பட வேண்டும் 
என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மதுரை போன்ற இடங்களில் ஜனவரி இறுதியில் வெளியிடப்பட்ட நான்கு கட்டப்பதவி உயர்வு  இன்னும் கணக்கில் கொள்ளப்படவில்லை. பழைய சம்பளமே தொடருகின்றது.

மேலும் DOT காலத்தில் சேர்க்கப்பட்ட விடுப்பு,
BSNL காலத்தில் சேர்க்கப்பட்ட விடுப்பு 
ஆகியவை முறையாக கணக்கில் கொள்ளப்படவில்லை. 
DOT  காலத்தில் சேர்க்கப்பட்ட விடுப்பிற்கு வருமான வரி இல்லை. BSNL காலத்தில் சேர்க்கப்பட விடுப்பிற்கு வரிப்பிடித்தம் உண்டு. 

மதுரையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வில் சென்ற தோழர்.N.N.பாஸ்கரன் AO அவர்களுக்கு DOT காலத்தில் சேர்க்கப்பட்ட விடுப்பு BSNL கால விடுப்பாகத் தவறுதலாக கணக்கில் கொள்ளப்பட்டதால் ஏராள வரிப்பிடித்தம் வருகின்றது. இது போன்ற குளறுபடிகள் விடுப்புச்சம்பளப் பட்டுவாடாவிற்கு முன்பு சரிசெய்யப்பட வேண்டும். தோழர்கள் விழிப்புடன் தங்களது கணக்குகளைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
------------------------------------
கூட்டுறவு சங்கப்பிடித்தம்

கடைசியாக... ஒருவழியாக....  விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் கூட்டுறவு சங்கப்பிடித்தம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் விரைந்து செயல்பட்டு கணக்குகளை முடித்து பிடித்தம் செய்ய வேண்டிய தொகையை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல் உறுப்பினர்களின் சொத்து ASSET  கடன் தொகையில் கழித்துக்கொள்ளப்பட வேண்டும். இதனை எந்தவொரு கூட்டுறவு சங்கமும் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் போராட்டக்களம் இறங்குவோம் என்பதை
 உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment