Tuesday 17 March 2020

கூட்டுறவு சங்கப்பிடித்தம்

விடுப்புச்சம்பளம் பட்டுவாடா செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக கூட்டுறவு சங்கங்களிடமிருந்து ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட வேண்டிய நிலுவைத்தொகை கோரப்பட்டுள்ளது. இதனிடையே விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களுக்கான கூட்டுறவு சங்கப்பிடித்தம் தற்போது 
அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 

சென்னைக்கூட்டுறவு சங்கம் தனது ஊழியர்களின் ASSET சொத்துக்கணக்கை அவர்களது கடனில் இருந்து கழித்துக்கொண்டு நிகரக்கடன் தொகையை மட்டுமே நிர்வாகத்திற்கு அனுப்பியதாகக் கூறப்படுகின்றது. ஆனால் மதுரை கூட்டுறவு சங்கம் விருப்ப ஒய்வில் சென்ற ஊழியர்களின் ASSET எனப்படும் சொத்துத் தொகையை கடனில் இருந்து கழிக்க முடியாது என்றும் மொத்தக் கடன் தொகையையும் நிர்வாகத்திடம் பிடித்தம் செய்திடக் கோருவோம்
 என்றும் கண்மூடித்தனமாக கூறிவந்தது. 

எனவே 17/03/2020 அன்று மதுரைக் கூட்டுறவு சங்க அதிகாரிகளை 
BSNLEU மற்றும் NFTE சங்கத்தோழர்கள் கூட்டாக சென்று சந்தித்தனர். உறுப்பினர்களின் கடன் தொகையில் இருந்து அவர்களது ASSET தொகை கழிக்கப்பட வேண்டும் என உறுதிபடக் கோரிக்கை எழுப்பினர். இறுதியில் மதுரைக் கூட்டுறவு சங்க நிர்வாகம் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகவும்... தங்களது மேல்மட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்ட பின்பு நடைமுறைப்படுத்துவதாகவும் சங்கப்பிரதிநிதிகளிடம் உறுதி அளித்துள்ளது.

இது சம்பந்தமாக வெள்ளிக்கிழமை மீண்டும் அவர்களை சந்திப்பதாக ஊழியர் தரப்பு கூறியுள்ளது. பலகாலம் தங்களது உழைப்பைக் கடனுக்காக செலுத்தி கூட்டுறவு சங்கத்தை வளர்த்த தோழர்கள் 
அதில் இருந்து விடைபெறும் போது அவர்களுக்கான பங்கை
 அவர்களுக்கான உரிமைத்தொகையை முறையாகக் கணக்கிட்டு 
அவர்களது  கடன் கணக்கை முடிப்பதுதான் சரியான நடைமுறையாகும்.
மதுரைக்கூட்டுறவு சங்கம் உரிய முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்.

No comments:

Post a Comment