Saturday 28 March 2020

செய்திகள்


EX-GRATIA பட்டுவாடா
விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு முதல் தவணை EX-GRATIA 
ருட்கொடை பட்டுவாடா செய்வதற்காக BSNL  நிறுவனத்திற்கு 
DOT  ரூ.4196/=கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்கண்ட நிதியினை 31/03/2020க்குள் பட்டுவாடா செய்ய வேண்டும் என DOT த்திரவிட்டுள்ளது. எனவே EX-GRATIA பட்டுவாடா 31/03/2020க்குள் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. EX-GRATIA தொகை ஓய்வு பெற்ற ஊழியர்கள் 
கடைசியாக சம்பளம் வாங்கிய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். 

5லட்சம் வரை வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும் எனவும் 
5 லட்சத்தில் இருந்து 10லட்சம் வரை 20சத வரியும்,
 10லட்சத்திற்கு மேல் 30சத வரியும் பிடித்தம் செய்யப்படும் என்றும் 
BSNL நிர்வாகம் தனது 26/03/2020 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
----------------------------------------------------------------

விடுப்புச்சம்பளம்

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம்
இம்மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. 
எனவே ஏப்ரல் மாதம் விடுப்புச்சம்பளப் பட்டுவாடா நடைபெறும்.
----------------------------------------------------------------

பணியில் உள்ள ஊழியர்களின் சம்பளம்...

ஒரு வழியாகப் பணியில் உள்ள ஊழியர்களின் பிப்ரவரி மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. கடந்த பிப்ரவரி 2019ல் ஆரம்பித்த தாமதச் சம்பளப்பட்டுவாடாப் பிரச்சினை தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது. 

இனி மார்ச் மாதச்சம்பளம் மட்டுமே பாக்கி. 
உலகம் முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டு இந்திய தேசம் முழுமையும் முடக்கப்பட்டுள்ள நிலையில் தொலைத்தொடர்பு சேவையில் அரசுத்துறை மற்றும் பல்வேறு தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் முழுமையாக வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே மார்ச் மாதச்சம்பளம் 
மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ பட்டுவாடா நடைபெறலாம்.
----------------------------------------------------------------

ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம்

ஓராண்டு காலமாக உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்னும் சம்பளப்பட்டுவாடா நடைபெறவில்லை. 
நீதிமன்றம் மூன்று மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்று கூறியும் கூட ஒரு மாதச்சம்பளமே பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கொரானா பாதிப்பால் தேசம் முடக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை இன்றி இருப்பதால் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வேலையைப் பறிக்க கூடாது எனவும், 
பணியற்ற 21 நாட்களும் வேலை நாட்களாகக் கருதப்பட வேண்டும் எனவும் அரசு உத்திரவிட்டுள்ளது. எனவே BSNLலில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கிட வேண்டும், 21நாள் கதவடைப்புக்காலம் பணிக்காலமாக கருதப்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழலிலும் அடிமட்ட ஊழியர்களான  
ஒப்பந்த ஊழியர்களுக்கு BSNL நிறுவனம் உதவவில்லை என்றால் 
இந்த நிறுவனம் அழிந்து ஒழிந்து போகட்டும்....
----------------------------------------------------------------

மார்ச் மாதம் ஓய்வு பெறுவோரின் ஓய்வூதியம்...

நாடு முழுவதும் கதவடைப்பு நடைபெற்று வருவதால் இம்மாதம் ஓய்வு பெறும் ஊழியர்களின் ஓய்வூதியப்பட்டுவாடா செய்வதில் தாமதம் நிலவுகிறது. 
எனவே மார்ச் மாதம் ஒய்வு பெறும் ஊழியர்களுக்கு 
தற்காலிக ஓய்வூதியம் கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

2 comments: