Monday 23 March 2020


மார்ச் – 23 - பகத்சிங் நினைவு நாள்...


23-03- 1931

பகத்சிங்... சுகதேவ்... இராஜகுரு...
இந்திய தேசத்து இளைஞர்கள் மூவர்...
இந்திய தேசவிடுதலைக்காக...
இன்னுயிர் நீத்த நாள்....
தூக்குக்கயிறும்...
துக்கம் கொண்ட நாள்..

அந்த நாளும் கண்டிப்பாக வரும்...
நாம் சுதந்திரம் அடையும் போது...
இந்த மண் நம்முடையதாக இருக்கும்...
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்...
இன்குலாப் ஜிந்தாபாத்... இன்குலாப் ஜிந்தாபாத்..
இதுவே அந்த இளைஞர்கள் எழுப்பிய முழக்கம்...

20-03-2020
அக்சய் குமார்... வினய் சர்மா...
பவன் குப்தா... முகேஷ் சிங்...
நான்கு இளைஞர்கள்...
நிர்பயா என்னும் அப்பாவி பெண்ணை
பாலியல் வன்கொடுமையில்
பாழாக்கிய குற்றத்திற்காக
நாக்குத் தள்ள தூக்கு கயிற்றில்
தொங்க விடப்பட்டனர்...

இதே மார்ச் மாதம்...
அடிமை இந்தியாவில்...
அன்றைய இளைஞர்கள்...
தாய் நாட்டு விடுதலைக்காக
தூக்கு கயிற்றை முத்தமிட்டனர்...

அதே மார்ச் மாதம்...
சுதந்திர இந்தியாவில்....
இன்றைய இளைஞர்கள்
அப்பாவிப் பெண்ணை மானபங்கம் செய்து 
கொலை என்னும் கொடுமை செய்து....
மரணம் என்னும் கடுமையில் வீழ்ந்தனர்..

அன்று....
தூக்குக் கயிறு...
வீர இளைஞர்களின் உயிர் பறித்து...
துக்கம் கொண்டது...

இன்று...
வீணர்களின் உயிர் குடித்து...
வெட்கம் கொண்டது...

எங்கே செல்கிறது நாடு?
எங்கே செல்கின்றனர் நம் இளைஞர்கள்?

No comments:

Post a Comment