Sunday 15 December 2019


விரையட்டும்... விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள்

விருப்ப ஓய்வு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்திட சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு CORPORATE அலுவலகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மாவட்டம் மற்றும் மாநில மட்டங்களில்...
விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள் பரிசீலனை கடைசி நாள் : 16/12/2019
VIGILANCE ஒப்புதல் அளிக்க கடைசி நாள் : 23/12/2019

விருப்ப ஓய்வு ஒப்புதல் அளிக்க கடைசி நாள்
மாவட்ட அளவிலான கேடர்களுக்கு.... 30/12/2019
மாநில அளவிலான கேடர்களுக்கு... 07/01/2020
அகில இந்திய அளவிலான கேடர்களுக்கு... 14/01/2020

தோழர்களே....
விருப்ப ஓய்வில் செல்ல இன்னும் நாற்பது நாட்களே உள்ளன.
இதனிடையில் ஓய்வூதியம் சம்பந்தமான பணிகள் நிறைய உள்ளன.
விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த தோழர்கள் உடனடியாக தங்களது ஓய்வூதிய விண்ணப்பங்களைத் தயார் செய்து நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். மதுரை வணிகப்பகுதியில் 760 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் ஏறத்தாழ 250 விண்ணப்பங்கள் மட்டுமே மாவட்ட அலுவலகம் வந்தடைந்துள்ளது. இன்னும் 500 தோழர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. விண்ணப்பங்கள் தாமதமானால் ஓய்வூதியப்பட்டுவாடாவும் தாமதமாகும். எனவே தோழர்கள் உடனடியாக விண்ணப்பங்களை நிரப்பி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கவும். அந்தந்த பகுதிகளில் நமது தோழர்கள் விண்ணப்பங்களை நிரப்பிட உதவி புரிந்து வருகின்றனர். அவ்வாறு உதவி கிடைக்கப்பெறாத தோழர்கள் எந்நேரமும் 
மதுரை மற்றும் காரைக்குடி  NFTE மாவட்டச்சங்க 
அலுவலகங்களை அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment