Monday 16 December 2019


விருப்ப ஓய்வு விண்ணப்பத்தேதி...

VRS விண்ணப்பங்களை 21/12/2019க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை நிர்வாகம் திடுதிப்பென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பைப் படித்தவுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத தோழர்களுக்கு வயிற்றில் புளி அருவி கொட்ட ஆரம்பித்து விட்டது. சரமாரியாக பல தோழர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே தோழர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது நமது கடமை.

VRS விண்ணப்பங்கள் பரிசீலனை செய்ய கடைசி தேதி - 16/12/2019
VRS - VIGILANCE ஒப்புதல் கடைசி தேதி – 23/12/2019
VRS - ஒப்புதல் அளிக்க கடைசி தேதி – 30/12/2019

விருப்ப ஓய்வு ஒப்புதல் அளிப்பதற்கான தேதி 30/12/2019 என்று
CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ள நிலையில்
விண்ணப்பங்களை 21/12/2019க்குள் அளிக்க வேண்டும்
என்பது பொருத்தமற்ற அறிவிப்பாகும்.

ஓய்வூதிய விதிகளின்படி விருப்ப ஓய்வு அளிப்பவர்கள்
விருப்ப ஓய்வில் சென்ற பின்புதான் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது சிறப்பு விருப்ப ஓய்வு என்பதாலும் ஆயிரக்கணக்கானவர்கள் விருப்ப ஓய்வில் செல்வதாலும் விதிமுறைகள் தளர்ந்த நிலையில் விண்ணப்பங்கள் முன்கூட்டியே பெறப்படுகின்றன. எனவே தோழர்கள் பதட்ட நிலை அடைந்து விண்ணப்பங்களை நிரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 

மதுரை நக்கீரன் மண் 
எனவே குற்றங்களை சுமத்திக்கொண்டே இருப்பார்கள். 
ஆகவே தோழர்கள் மிகவும் எச்சரிக்கையாக விண்ணப்பங்களை முறையாக முழுமையாக நிரப்பிய பின்பு சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.
அகில இந்திய அளவில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 
இது போல் வேறு எங்கும் கடைசி தேதி குறிப்பிட்டு 
அறிவிப்பு செய்யப்படவில்லை. மதுரையில் மட்டுமே 
21/12/2019 கடைசித் தேதி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை – SORRY... கொஞ்சம் OVER...

No comments:

Post a Comment