Thursday 26 December 2019


செ ய் தி க ள்

ஒப்பந்த ஊழியர் சம்பளம்
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிட நிதி ஒதுக்கீடு ஒப்புதல் வந்துள்ளது. இன்று நிதி வழங்கப்படலாம். இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் ஒப்பந்தகாரர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பணத்தின் அளவை வைத்தே 
பட்டுவாடா செய்வோம் என்று கூறுகின்றார்கள்.  மேலும் EPF கட்டாததினால் அபராதங்களைத்  தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறுகின்றனர். நாளை ஒப்பந்த 
ஊழியருக்கு சம்பளம் பட்டுவாடா நடக்க வாய்ப்புள்ளது.
-------------------------------------
நிரந்தர ஊழியர் சம்பளம்
நிரந்தர ஊழியர்களின் நவம்பர் மாதச்சம்பளம் 31/12/2019 அன்று பட்டுவாடா செய்யப்படும் என்று கூறப்படுகின்றது. ஜனவரி 15தேதிக்குள் அனைத்து அதிகாரிகள் மற்றும்  ஊழியர்களின் மொத்த சம்பளப்பாக்கி மற்றும் சம்பள நிலுவைகளை பட்டுவாடா செய்வோம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ITS அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் BSNL நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
-------------------------------------
விருப்ப ஓய்வு விருப்பங்கள் மறுபரிசீலனை
விருப்ப ஓய்வு விருப்பங்கள் எதனையும் மறுபரிசீலனை செய்ய முடியாது என்று BSNL நிர்வாகம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதன்படி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் VRSல் சென்றே ஆகவேண்டும். அவர்கள் HARD COPY கடிதம் கொடுக்கவில்லை என்றாலும் 31/01/2020ல் பணியில் இருந்து விருப்ப ஓய்வில் விடுவிக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
-------------------------------------
மத்திய சங்க கடிதம்
விருப்ப ஓய்வில் செல்பவர்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றியும், விருப்ப ஓய்விற்குப்பின் எழக்கூடிய பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க நேரம் ஒதுக்கக்கோரி  NFTE மத்திய சங்கம்
BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

NFTE எழுப்பியுள்ள பிரச்சினைகள்
  • வழக்கு நிலுவையில் உள்ள VRS ஊழியர்களுக்கு VIGILANCE ஒப்புதல் வழங்குதல்...
  • வங்கி மற்றும் கூட்டுறவு சொசைட்டிகளில் NO DUES சான்றிதழ் பெறுவதில் எழக்கூடிய பிரச்சினைகள்
  • COMMUTATION பணம் பெறுவதில் எழக்கூடிய சிக்கல்கள்.
  • விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியம் அளித்தல்...
  • விருப்ப மாற்றல்களை அமுல்படுத்துதல்...
  • காலியாகும் பணியிடங்களில் சேவையைத் தொடர்ந்து அளித்திட விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களைத் தற்காலிகமாகப் பயன்படுத்துதல்.
  •  JTO/JAO/JE/TT கேடர்களுக்கு இலாக்காத்தேர்வை நடத்துதல்.
  • வெளியிடப்பட்ட JTO தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்தல்.
  • வங்கி மற்றும் சொசைட்டி பிடித்தங்களை உடனடியாக செலுத்துதல். எஞ்சியிருக்கும் பிடித்தங்களை விடுப்புச்சம்பளம் மற்றும் அருட்கொடையில் பிடித்தம் செய்தல்

No comments:

Post a Comment