Friday 20 December 2019


OUTSOURCING - பராமரிப்பு பணிகள் குத்தகை

BSNL நிறுவனத்தின் நகர்ப்புற பகுதிகளில் 
LAND LINE & BROAD BAND தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்புக்கள் கொடுப்பது மற்றும் அவற்றைப் பராமரிப்பது போன்ற பணிகளைக் குத்தகைக்கு  விடுவதற்கு CMD ஒப்புதல் அளித்துள்ளார். 
இதற்கான கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

குத்தகைக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். 
மேலும் ஓராண்டுக்காலம் நீட்டிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற பகுதிகளில் விருப்ப ஓய்வால் ஏற்படும்
TT கேடர்களின் காலியிடங்களின் தேவைக்கேற்ப
இத்தகைய குத்தகைக்காரர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.

நகர்ப்புறங்களில் 3000 இணைப்புக்களுக்கு மேல்
CLUSTERS எனப்படும் கொத்துக்கள் உருவாக்கப்படும். 
பெருநகரங்களில் 10000 முதல் 20000
இணைப்புக்கள் வரை CLUSTERS உருவாக்கப்படும்.
இந்த CLUSTERS எனப்படும் கொத்துக்கள் ஒவ்வொரு 
தொலைபேசி நிலையத்திற்கும் தனித்தனியாக இயங்கும். 
ஒரு தொலைபேசி நிலையம் இரண்டு CLUSTERSல் இருக்காது. 
இவ்வாறாக குத்தகை கொத்துக்கொத்தாக கொடுக்கப்படும்.

புதிய தரைவழி இணைப்பு...
அகன்ற அலைவரிசை இணைப்பு...
தரைவழியுடன் கூடிய அகன்ற அலைவரிசை இணைப்பு..
ஏற்கனவே உள்ள தரைவழி இணைப்பில்  BB இணைப்பு...
புதிய ISDN/CIRCUIT இணைப்பு...
அனைத்து இணைப்புக்களிலும் கேபிள் பழுது உள்ளிட்ட 
பராமரிப்புப் பணிகள் மற்றும் SHIFTING உள்ளிட்ட
அனைத்துப் பணிகளும்... குத்தகைக்கு விடப்படும்.

50 PAIR மற்றும் அதற்கு மேல் உள்ள கேபிள் மற்றும் 
தேவையான பொருட்கள் BSNL நிறுவனத்தால் வழங்கப்படும். 
50 PAIRக்கு கீழ் தேவையான பொருட்கள் குத்தகைக்காரர்களால் ஏற்பாடு செய்து கொள்ளப்பட வேண்டும்.

பழுது நீக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
ஒவ்வொரு இணைப்பையும் பராமரிப்பதற்கு மாதாந்திர 
ஊக்கத்தொகை வழங்கப்படும் போன்ற விரிவான குறிப்புக்கள் 
அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.

நகர்ப்புறங்களில் மட்டும் குத்தகை விடப்படும்  என்றால்...
கிராமப்புற தொலைபேசி நிலையங்களின் நிலை என்ன?
என்பது பற்றிக் குறிப்பிடப்பட்டவில்லை.

எஞ்சியுள்ள போன்மெக்கானிக் தோழர்கள்
கிராமப்புறங்களைப் பராமரிக்க வேண்டுமா? 
என்ற சந்தேகம் எழுகிறது...
நகர்ப்புறமோ... கிராமப்புறமோ.... 
குத்தகைக்காரன் வடநாடோ... தென்னாடோ....
குத்தகைப்பணிகளைச் செய்யப்போவதென்னவோ...
விருப்ப ஓய்வில் செல்லும் நமது போன்மெக்கானிக் தோழர்களும்...
தற்போது ஒப்பந்த ஊழியர்களாகப் பணிசெய்யும் தோழர்களுமே...
50,000 சம்பளத்தில் சுதந்திரமாய்ப் பணியாற்றிய தோழர்கள்...
5000 ரூபாய்க்கு குத்தகை அடிமைகளாக வேலை செய்யப் போகும் 
காட்சியை விரைவில் காணப்போகின்றோம்.

தொழிற்சங்கங்கள் குத்தகைப் பணிகளில்...
வரக்கூடிய காலங்களில் ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில்... 
தங்கள் நிலைபாட்டை நிர்வாகத்திடம் எடுத்துரைக்க இயலும். 

தற்போது அரங்கேறும் எல்லாக்காட்சிகளிலும்
தொழிற்சங்கங்கள் காட்சிகளைக் கண்ணுறும் VIEWERS நோக்கர்களாகவே இருக்க வேண்டிய
அவலமும் கட்டாயமும் உருவாவதைத் தவிர்க்க இயலாது.

No comments:

Post a Comment