Friday 18 October 2019


ஒப்பந்த ஊழியர் பேச்சுவார்த்தை

இன்று 19/10/2019 காலை 11.00 மணியளவில்
சென்னை அண்ணாசாலை தொலைபேசி இணைப்பகத்தில் சென்னை மண்டல தொழிலாளர் ஆணையர் முன்பாக ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

NFTCL, TMTCLU மற்றும் TNTCWU தொழிற்சங்கப் பிரதிநிதிகளும்....
சென்னைத்தொலைபேசி மற்றும் தமிழக BSNL அதிகாரிகளும்...
சென்னை மற்றும் தமிழகமெங்கும் 
குத்தகை எடுத்துள்ள 21 ஒப்பந்ததாரர்களும்...
இன்று பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் வழங்காதது...
ஆட்குறைப்பு என்னும் பெயரில் அவர்களை நடுத்தெருவில் விடுவது...
உள்ளிட்ட பிரச்சினைகள் இன்று விவாதித்து முடிவெடுக்கப்படும்.

தொழிலாளர் ஆணையர் அலுவலகம் 
பல்வேறு சாதக உத்திரவுகளை
ஒப்பந்த ஊழியர்களுக்காக பிறப்பித்தாலும்...
நமது நிர்வாகம் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை.
இம்முறை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவை
BSNL நிர்வாகம் நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம்...
இல்லையெனில் ஒப்பந்த ஊழியர்களுக்காக அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டுப்போராட வேண்டிய அவசியம் உள்ளது.

No comments:

Post a Comment