Saturday 19 October 2019


சேமநலநிதிக்குழுக் கூட்ட முடிவுகள்

காரைக்குடி சிறப்பு சேமநலநிதிக்குழுக் கூட்டம் 19/10/2019 அன்று மதுரைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் பொதுமேலாளர் தலைமையில் நடைபெற்றது. NFTE சார்பாக சேமநலநிதிக்குழு உறுப்பினர் தோழர்.சங்கரன்,  BSNLEU சார்பாக தோழர்.பூமிநாதன், AIBSNLEA சார்பாக தோழர்.சொக்கலிங்கம் ஆகியோர் 
ஊழியர் தரப்பு பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.


: கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன :

தீபாவளி விழாக்கடன் ரூ.4000/= வழங்கப்படும்.

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.5000/= பரிசாக வழங்கப்படும். 
இதில் ரூ.3000/= ரொக்கமாகவும், 
ரூ.2000/= RECHARGE COUPON எனவும் வழங்கப்படும்.


மரணமுறும் ஊழியர்களுக்கான உடனடி உதவித்தொகை
ரூ. 5000/=ல் இருந்து ரூ.10,000/= ஆக உயர்த்தப்படுகிறது.

மரணமுறும் ஊழியர்களுக்கான மத்திய சேமநலக்குழுவின் 
CWF உடனடி உதவித்தொகை ரூ.15,000/=ல் இருந்து 
ரூ.20,000/= ஆக 19/11/2018ல் இருந்து உயர்த்தப்பட்டது. 
இது காரைக்குடியில் அமுல்படுத்தப்படாமல் இருந்தது. 
தற்போது இது அமுல்படுத்தப்படுகின்றது.

காரைக்குடி மாவட்டம் மதுரை வணிகப்பகுதியோடு இணைக்கப்பட்டாலும் சிறப்பு சேமநலநிதி அமைப்பு 
தொடர்ந்து தனியாகவே செயல்படும். 

தோழர்.கணேசன் SDE செயலராகவும், 
தோழர்.சுரேஷ் AO பொருளராகவும்,
தோழர்.முத்துக்குமரன், AO தணிக்கையாளராகவும் செயல்படுவார்கள்.

காரைக்குடி தோழர்கள் சேமநலநிதி சம்பந்தப்பட்ட  அனைத்து விண்ணப்பங்களையும் தோழர்.கணேசன் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

செயலர் அலைபேசி : 9486101919
பொருளர் அலைபேசி : 9486101969

விழாக்கடன் பெற விரும்பும் தோழர்கள் உடனடியாக விண்ணப்பத்தை நிரப்பி தங்களது மேலதிகாரியின் கையொப்பம் பெற்று 
தோழர். கணேசன் அவர்களுக்கு 23/10/2019க்குள் அனுப்பி வைத்திட வேண்டும். முதல் 150 விண்ணப்பங்களுக்கு மட்டுமே விழாக்கடன் வழங்கப்படும். விண்ணப்ப படிவ மாதிரி NFTE  மற்றும் 
AUAB காரைக்குடி WATSAPPல் கிடைக்கும். 
கிளைச்செயலர்கள் கவனம் செலுத்திட வேண்டும்.

No comments:

Post a Comment