Tuesday 1 October 2019

என்றும்... மகாத்மா... 

79000 கிலோமீட்டர்...
இந்திய தேசத்தில் 
நல்லிதயம் நடந்து சென்ற தூரம்...

35000 கடிதங்கள்...
தேசத்திற்காக... தேச விடுதலைக்காக...
மனிதர்களுக்காக... மனிதநேயத்திற்காக...
மகாத்மா எழுதிய மதிப்புமிகு  கடிதங்கள்...

390 கிலோமீட்டர்...
உப்பிட்டுச் சாப்பிடும் மக்களின்..
உணர்வைத் தட்டியெழுப்ப...
உப்புச்சத்தியாக்கிரகத்தில்...
உணர்வோடு நடந்த தூரம்...

140 நாட்கள்...
சத்தியத்தை நிலைநாட்ட...
சமதர்மத்தை வழிகாட்ட...
சாப்பாடு மறுத்து... சகலமும் பொறுத்து...
சாத்வீக வழியில்... சத்திய வழியில்...  
உண்ணாவிரதம் இருந்த நாட்கள்...

5 ஆண்டுகள்...
வெள்ளை ஏகாதிபத்தியம் எதிர்த்து...
நெஞ்சில் உரமோடு... நேர்மைத் திறமோடு...
கத்தியின்றி... இரத்தமின்றி...
இந்திய தேச விடுதலைக்காக...
வீதிகளில் வெஞ்சமர் புரிந்து...
வெஞ்சிறை புகுந்த நாட்கள்...

அக்டோபர் - 2 
அதுவே எங்களின் புனித நாள்...
150 ஆண்டுகள் ஆனாலும்...
150 யுகங்கள் ஆனாலும்...
நீயே எங்கள் மகாத்மா...
நீயே என்றும் மகாத்மா...

No comments:

Post a Comment