Monday 21 October 2019


மாவட்டச்செய்தி மடல்

நாலுகட்டப்பதவி உயர்வு

காரைக்குடி மாவட்ட ஊழியர்களுக்கு 01/10/2019 முதல் நாலுகட்டப்பதவி உயர்வு உத்திரவு வெளியிடப்பட வேண்டும். 
10 தோழர்களுக்கு இன்னும் CR வரவில்லை. 
14 தோழர்கள் இன்னும் தங்களது அசையாச்சொத்து விவரத்தை 
ERP-ESS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. 
எனவே தகுதியுள்ள மற்ற தோழர்களுக்கு நாலுகட்டப்பதவி உயர்வை முதற்கட்டமாக வெளியிடலாம் என கோரிக்கை விடுத்தோம்.
 இந்த வாரம் நாலுகட்டப்பதவி உயர்வின் முதற்கட்ட உத்திரவு வெளியாகும் என நிர்வாகம் உறுதியளித்துள்ளது. 
விடுபட்ட தோழர்களுக்கு அடுத்த கட்டமாக உத்திரவு வெளியிடப்படும். கிளைச்செயலர்கள் விடுபட்ட தோழர்களின் பிரச்சினையில் கவனம் செலுத்தவும்.
------------------------------------------------------------------------------------------
பெயரில் பிழைகள்

காரைக்குடி மாவட்டத்தில் உள்ள 24 தோழர்களின் பெயர்களில் பிழைகள் இருப்பதாக மதுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  சேவைக்குறிப்பேட்டில் உள்ள பெயரும், PO எனப்படும் BSNL நியமன ஆணையில் உள்ள பெயரும் ஒத்துப்போகவில்லை. எனவே பெயரில் பிழைகள் உள்ள தோழர்கள் தங்களது உண்மைப்பெயரை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி அதனையே ஏற்றுக்கொள்ளுமாறு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கவும்.

------------------------------------------------------------------------------------------

ஓய்வூதிய விண்ணப்பங்கள்

மதுரை சங்ககால நகரம். 
அதனால்தான் என்னவோ...  
மதுரையில் உள்ள ஓய்வூதியப்பிரிவு 
இன்னும் சங்க காலத்திலேயே இருக்கின்றது.
ஓய்வூதிய விண்ணப்பங்களைக் கையால்தான்
எழுத வேண்டும் எனக் கட்டளை இடப்படுகின்றது. 
கணிணி மூலம் தட்டச்சு செய்யப்பட்ட
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். 

இன்னும் இடதுகை விரல்களின் ரேகையைக் கேட்கின்றார்கள். 
இடதுகை ரேகை கல்வியறிவற்ற 
கைநாட்டு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். 
ஆனால் மதுரையில் மெத்தப்படித்தவர்களும் கூட 
கைநாட்டு வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. 
இது தேவையற்றது என நாம் சுட்டிக்காட்டியும் கூட 
இன்னும் மாற்றிக்கொள்ளப்படவில்லை. 

தற்போது SAMPANN என அழைக்கப்படும் மென்பொருள் மூலம் ஓய்வூதியப்பட்டுவாடா கணிணி மயமாக்கப்பட்டு விட்டது. 
தற்போது PPO எனப்படும் ஓய்வூதியப்புத்தகத்தில் புகைப்படங்கள் ஒட்டப்படுவதில்லை. புகைப்படங்கள் SCAN எனப்படும் ஊடுகதிர் செய்யப்பட்டு ஓய்வூதிய உத்திரவில் அச்சடிக்கப்படுகின்றது. 
எனவே தற்போது புகைப்படங்கள் இன்ன அளவில்தான் 
இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. 
ஆனால் மதுரையில் புகைப்படங்கள் 
அளவுகோல் கொண்டு அளக்கப்படுகின்றன. 
அரை அங்குலம் வித்தியாசம் இருந்தாலும் 
விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பபடுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக ஓய்வு பெறப்போகும் ஊழியர்கள்  
மிகுந்த அதிகாரத் தோரணையில் நடத்தப்படுகின்றார்கள்.

இது சம்பந்தமாக முதன்மைப்பொதுமேலாளர், துணைப்பொதுமேலாளர்(நிதி) மற்றும் 
முதன்மை கணக்கு அதிகாரியோடு விவாதித்துள்ளோம். 
ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள். 
DGM(Finance) மற்றும் CAO(Finance) ஆகியோரின்
இதமான அணுகுறையால் நாம் 
மிதமான நிலையிலேயே இருக்கின்றோம்.
அடுத்தகட்ட நிலைக்குச் செல்லவில்லை. 

FNTO சங்கத்தின் சார்பாகவும்... ஓய்வூதிய விண்ணப்பங்கள் அளிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மைதாப்பசை தபால் அலுவலகம், 
எச்சில் பசை தாலுகா அலுவலகம், 
பணப்பசை பத்திர அலுவலகம் 
ஆகியவற்றில் கூட பெரும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. 
எங்கும் கணிணிமயம் வந்து விட்டது. 

மதுரை வணிகப்பகுதி ஓய்வூதியப்பிரிவு மட்டும்
இன்னும் கீழடி சங்க காலத்திலேயே இருப்பது 
ஊழியர்களுக்குப் பெரும் சங்கடமாக உள்ளது.

ஓய்வு பெறப்போகும் ஊழியர்கள் 
ஓய்வூதியப்பிரிவால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் 
அமைதியாக தீர்க்கப்படும் என நம்புகின்றோம்.

No comments:

Post a Comment