Monday 27 January 2020


வாடிக்கையாளர் சேவை மையங்கள்
(மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்)

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில் 
12 வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் பிரிவு -1 வாடிக்கையாளர் சேவை மையமும் ஏனைய பகுதிகளில் மற்ற வகை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முதுகுளத்தூர், திருவாடானை, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய மையங்கள் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டும் ஏனைய மையங்கள் நிரந்தர ஊழியர்களைக் கொண்டும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது விருப்ப ஓய்வு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மையங்களில் 
ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

BSNL நிர்வாகம் வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு செய்துள்ளது. 
BSNL ஊழியர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ள சேவை மையங்கள் மற்றும் தனியாருக்கு விடக்கூடிய சேவை மையங்களின் விவரங்கள் மாவட்ட நிர்வாகங்களிடம் கேட்கப்பட்டிருந்தன. ஆனால் மதுரை வணிகப்பகுதி நிர்வாகம் ஒட்டுமொத்த சேவை மையங்களையும் தனியாரிடம் விடும் மனநிலையில் உள்ளது. இது ஏற்புடையதல்ல. வாடிக்கையாளர் சேவை மையங்கள் நமது சேவையின் அடையாளங்கள். எனவே போதுமான ஊழியர்கள் உள்ள இடங்களில் நமது வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும். ஊழியர்கள் இல்லாத இடங்களைத் தனியாருக்குத் 
தாரைவார்ப்பது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். 

 இராமநாதபுரத்தில் 26/01/2020 அன்று நடைபெற்ற 
NFTE மாவட்டச்செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம்

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்களில் தொடர்ந்து பணிபுரிய இளம் தோழர்கள் பணியில் உள்ளனர். மேற்கண்ட மையங்களில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இன்னும் 20 வருட சேவைக்காலம் உள்ளது. எனவே மதுரை வணிகப்பகுதி நிர்வாகம் மேற்கண்ட மூன்று இடங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களையும் BSNL ஊழியர்களைக் கொண்டு இயக்க வேண்டும். இதுபற்றி CHAMBER OF COMMERCE போன்ற அமைப்புகளிடமும்  தெரிவித்துள்ளோம். 
அவர்களும் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதாக உறுதி கூறியுள்ளனர். தேவைப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுநல அமைப்புக்களின் ஆதரவையும் நாம் பெறமுடியும்.

  எல்லாம் தனியார் மயம் என்பது ஏற்புடையதல்ல. 
FRANCHISEE என்பவர்கள் தேவதூதர்கள் அல்ல.
 வெறும் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள்.  அவர்களை விட பலமடங்கு தரமான சேவையை நம்மால் தர முடியும். எனவே எல்லாம் தனியார் என்ற
 மனநிலையை நிர்வாகங்கள் கைவிட வேண்டும். 

மாநிலச்சங்கமும், மத்திய சங்கமும் இப்பிரச்சினையில் கவனம் செலுத்திடக் கேட்டுக்கொள்கின்றோம். மதுரை நிர்வாகம் 
நமது கோரிக்கையை ஏற்காவிட்டால் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றுபடுத்தி இது தொடர்பான இயக்கங்களுக்கு 
நாம் திட்டமிடல் வேண்டும்.

No comments:

Post a Comment