Sunday 12 January 2020


பணிமுடிப்பு விழாக்கள் 

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிமுடிப்பு விழா நிர்வாகத்தின் சார்பில் பகுதிவாரியாக நடத்தப்படுகிறது. மதுரை வணிகப்பகுதியில் 13 இடங்களில் பணிமுடிப்பு விழா நடத்தப்படுகின்றது. காரைக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட தேதிகளில் பணிமுடிப்பு விழா நடைபெறும்.

காரைக்குடி – 18/01/2020
சிவகங்கை – 20/01/2020
பரமக்குடி – 21/01/2020
இராமநாதபுரம் – 23/01/2020

ஒவ்வொரு ஊரிலும் காலை வேளையில் எஞ்சியுள்ள ஊழியர் கூட்டமும் மாலை வேளையில் விருப்ப ஓய்வில் செல்வோரின் வழியனுப்பு விழாவும் நடத்தப்படுகின்றது. விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு பொன்னாடை மற்றும் பரிசுப்பொருள் வழங்கிட CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. ஆனால்
 CORPORATE அலுவலக உத்திரவு மதுரை வணிகப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒருவேளை துண்டும் பரிசும் 
FUND வந்தால்தான் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

09/01/2020 அன்று வத்தலக்குண்டு பகுதியில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. எஞ்சியுள்ள ஊழியர் கூட்டமும் நடைபெற்றுள்ளது. மறுநாள் எஞ்சியுள்ள ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான வேலைப்பகிர்வு உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு போன்மெக்கானிக் ஊழியருக்கும் மூன்று நான்கு தொலைபேசி நிலையங்கள் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சூழலில் கூடுதல் பணிச்சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது உண்மையே. ஆனாலும் நிர்வாகம் ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. பராமரிப்பு பணிகள் குத்தகைக்கு விடப்படவுள்ள சூழலில் மேற்கண்ட நடவடிக்கை தற்காலிகமானதா? அல்லது நிரந்தரமானதா என்பதும் தெரியவில்லை. 
இரண்டு மூன்று தொலைபேசி நிலையங்களுக்கு சென்றுவர போக்குவரத்துப்படி உண்டா? என்பது தெரியவில்லை.  
இது வத்தலக்குண்டு பகுதிக்கு மட்டும்தானா? அல்லது ஒட்டுமொத்த வணிகப்பகுதிக்கும் பொருந்துமா? என்பதும் தெரியவில்லை. 06/01/2020 அன்று நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில் 
இதுபற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. 

எனவே மதுரை மாவட்ட நிர்வாகம் அனைத்து தொழிற்சங்கங்களையும் கலந்து ஆலோசித்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மற்ற பகுதிகளில் எஞ்சியுள்ள தோழர்கள் தங்களுக்குள் கலந்து பேசி நிர்வாகத்திடம் விவாதிக்கவும்.  விருப்ப ஓய்வுக்குப்பின் பணிச்சுமை கூடும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்...

ஆனாலும்...
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சாலமிகுத்துப் பெயின்...
என்ற வள்ளுவர் குறள் நினைவுக்கு வருவதை 
நம்மால் தவிர்க்க இயலவில்லை.
மயிலிறகே ஆனாலும்...
அளவுக்கு அதிகமானால்...
அச்சு முறிந்து போகும்.

No comments:

Post a Comment