Tuesday 21 January 2020


ஒப்பந்த ஊழியர் வழக்கு

பத்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் உடனடியாக வழங்கிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தொடுத்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நம்மைத் தொடர்ந்து TNTCWU சங்கமும் வழக்குத் தொடுத்திருந்தது.  இரு தரப்பிலும்  வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன. பிப்ரவரி 15 தேதிக்குள் 30 சத சம்பளத்தைப் பட்டுவாடா செய்ய வேண்டுமென்று நீதிபதி உத்திரவிட்டுள்ளார். அடுத்த விசாரணை மார்ச் 06ந்தேதி நடைபெறும்.  மார்ச் 6 அன்று எவ்வளவு ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்துடன் வரவேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளார்.

ஒரு நிறுவனத்தை மூடினால் மட்டுமே அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிறுத்த முடியும். வேறு காரணங்களுக்காக நிறுத்த முனைந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர சலுகைகளை நிலுவையில்லாமல் பட்டுவாடா செய்த பின்பே நிறுத்த முடியும். எனவே நாம் தொடுத்த வழக்கின் மூலம் ஒப்பந்த ஊழியரின் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் பட்டுவாடா  ஆகியவற்றை நாம் உறுதிப்படுத்த இயலும்.

இதனிடையே புதிய ஒப்பந்த முறையில் நடைமுறைகள் மாறும்... குறைந்த பட்ச ஊதியம் என்பது கிடையாது.... பல்வேறு சலுகைகள் கிடையாது  என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதனை எதிர்த்தும் நாம் போராட வேண்டிய... வாதாட வேண்டிய கட்டாயம் உள்ளது. 

ஒப்பந்த ஊழியர் பிரச்சினை தீர்வில் நமது முயற்சி தொடரும். ஒப்பந்த ஊழியர்கள் நம்பிக்கை இழக்காமல் இருந்திட கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment