Thursday 9 January 2020


பணி முடிப்பும்... பறிபோன பண முடிப்பும்...

பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு நிர்வாகத்தின் தரப்பில்
பண முடிப்பு ரூ.3000/=        
பொன்னாடை ரூ.750/=
பரிசுப்பொருள் ரூ.500/= என்று வழங்கப்பட்டு வந்தது. 

ஆனால் 31/01/2020 அன்று விருப்ப ஓய்வில் பணி முடிக்கும் தோழர்களுக்கு பணமுடிப்பு ரூ.3000/= வழங்கப்படாது என 
BSNL நிர்வாகம் 08/01/2020 அன்று உத்திரவிட்டுள்ளது.

நிதிநிலையைக் காரணம் காட்டி ஊழியர்களைக் கவுரப்படுத்தும் செயல்களை நிறுத்துவது சரியற்ற செயல் என்றும் மீண்டும் பணமுடிப்பை ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழக்கம் போல் 
வழங்கிட வேண்டும் எனவும் நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் இருந்தே நிர்வாகம் ஊழியர்களுக்கு 
மாதந்தோறும் சம்பளத்தை தாமதமாகவே வழங்கி வருகிறது. 
இன்னும் டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. 
இது போன்ற தாமதிக்கப்பட்ட சம்பளங்களுக்கு வட்டி கணக்கிட்டாலே 
அந்த வட்டித்தொகை ரூ.3000க்கும் அதிகமாக இருக்கும். 

அற்புதங்கள் நிகழ்ந்த நமது துறையிலே 
தற்போது அற்பத்தொகை கூட நிறுத்தப்படுகிறது.
அற்புதங்கள் அற்பங்களாகி விட்டன.

விருப்ப ஓய்வில் செல்பவர்களை மகிழ்வோடு அனுப்புவோம் 
என்று சொன்ன நமது CMD மட்டுமே தற்போது BSNLலில் 
மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment