Thursday 16 January 2020

தோழர். இராம்சேகர் மறைவு  

விருதுநகர் NFTE மாவட்டச்செயலர் 
தோழர். இராம்சேகர் 
அவர்கள் 16/01/2020 வியாழன் அன்று 
உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

NFTE இயக்கத்தின் முன்னணித்தலைவராக விளங்கியவர்.
அன்பு செலுத்துவதிலும்... அரவணைப்பதிலும் நிகரற்றவர்...
அதிகார வர்க்கத்தின் ஊழல் முகமூடிகளைக் கிழித்தவர்...
பெருங்குரல்கள் ஒலித்த விருதுநகர் மாவட்டத்தில்
அடிமட்ட ஊழியர்களின் குரலாக ஒலித்தவர்.....

உடல் நலம் குன்றிய நிலையிலும்...
 இயக்கப்பணிகளை இடைவிடாமல் தொடர்ந்தவர்...
அவரது மறைவு இயக்கத்திற்கு பெரும் இழப்பு...
அவரது இடைவிடாத  இயக்கப்பணியும்... 
இதயம் நிறைத்த அன்பும்...
 என்றும் நம் நினைவில் நிற்கும்...

அவரது மறைவிற்கு இதயங்கசிந்த 
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
---------------------------------------------------------------------
நல்லடக்கம் 17/01/2020 வெள்ளி 
மாலை விருதுநகரில் நடைபெறும்.

No comments:

Post a Comment