Monday 20 January 2020


இரங்கல்

சாயல்குடி பகுதி நரிப்பையூர் 
தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர்.K. தர்மராஜ் TT  
அவர்கள்  உடல்நலக்குறைவால் 
நேற்று 20/01/2020 இயற்கை எய்தினார்.

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில்
இதயக்கோளாறால் பாதிக்கப்பட்டு மரணமுற்றார்.
மிகவும் பின்தங்கிய பகுதியான சாயல்குடிப் பகுதியில் 
தொலைபேசி சேவைக்காக பணியாற்றி வந்தார்
வாடகை கொடுக்காத காரணத்தினால் நரிப்பையூர் தொலைபேசி நிலையம் அதன் உரிமையாளரால் பூட்டப்பட்ட நிலையில் மிகவும் மனமுடைந்து BSNL நிலை பற்றி நம்மிடம் வருந்திக்கொண்டிருந்தார்.  எதையும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சலான தோழர். அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

சமீப காலமாக மனஅழுத்தம் அதிகமாகி விருப்ப ஓய்வுக்கு முன் தோழர்கள் மரணமடைவது நடந்தேறி வருகின்றது. இதுவரை தமிழகத்தில் 10 தோழர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தபின் மரணமடைந்துள்ளார்கள். விருப்ப ஒய்வுக்கு முன்பு பல தோழர்கள் நிரந்தர ஓய்வு அடைவது வருத்தத்திற்குரியது.

No comments:

Post a Comment