Friday 25 May 2018


செய்திகள்

சட்டரீதியான போராட்டம் 
செல்கோபுரங்களைத் தனிநிறுவனமாகப் பிரிக்கும்
 அரசின் முடிவினை எதிர்த்து  அனைத்து சங்கங்களின் முடிவின்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் AIBSNLEA, SNEA மற்றும் AIGETOA அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 25/05/2018 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  புதிய செல்கோபுரம் துணைநிறுவனம் ஆரம்பிப்பது என்பது நீதிமன்ற முடிவிற்கு உட்பட்டது 
என டெல்லி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. 
 அடுத்த கட்ட விசாரணை 25/09/2018 அன்று நடைபெறும்.
------------------------------------------------------------------------------------------
தலைநகரில் ஆர்ப்பாட்டம் 
செல்கோபுரம் தனி நிறுவனம் ஆரம்பிக்கும்
 முடிவினை எதிர்த்து டெல்லியில் 24/05/2018 அன்று 
அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
------------------------------------------------------------------------------------------
JCM கூட்டம்
 JCM தேசிய கூட்டாலோசனைக்குழுக் கூட்டம் 12/06/2018 
அன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் JCM கூட்டங்கள் அகில இந்திய அளவிலும்… மாநில அளவிலும்…  மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், 
மாவட்ட மட்டங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் நடத்தப்பட வேண்டும் என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
 அகில இந்தியக் கருத்தரங்கம்
 மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து அனைத்து மத்தியப் பொதுத்துறை சங்கங்களின் கருத்தரங்கம்
 30/05/2018 அன்று டெல்லியில் நடைபெறுகின்றது.
------------------------------------------------------------------------------------------
மருத்துவப்படி 
01/10/2017 முதல் 31/03/2018 வரையிலான ஆறு மாத காலத்திற்கான மருத்துவப்படியை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கிட 
தமிழ் மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment