Wednesday 31 July 2013

வருமான வரித்தாக்கல் 

வருமான வரிதாக்கலுக்கான கடைசி தேதி 
05/08/2013 என 
நிதி அமைச்சகம் இன்று 31/07/2013 அறிவித்துள்ளது.

ON LINE முறையில் இதுவரை 92 லட்சம் பேர் 
வரித்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Tuesday 30 July 2013

காரைக்குடி மாவட்ட JCM 
தலமட்டக்குழு உறுப்பினர் நியமனம் 

காரைக்குடி மாவட்ட NFTE  JCM  உறுப்பினர் நியமனத்தை மத்திய சங்கம் அங்கீகரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு நியமனக் கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய சங்கத்திற்கும், மாநிலச் சங்கதிற்கும் நமது நன்றிகள் .

விரைந்து JCM கூட்டத்தை நடத்த 
மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம்.

JCM  உறுப்பினர் விவரம் 

1.  V. மாரி, AO  - NFTE    மாவட்டச்செயலர்
2. P. செல்லப்பா, TTA , SNATTA  மாவட்டச்செயலர்
3. S . முருகன், STS, NFTE மாவட்ட உதவிச்செயலர்
4. A. கணேசன், TM, NFTE மாவட்ட உதவிச்செயலர்
5. V. சுப்பிரமணியன், TM, NFTE மாவட்ட உதவிச்செயலர்.

Monday 29 July 2013

NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
தேவகோட்டை 

கிளை மாநாடு 
09/08/2013 - வெள்ளிக்கிழமை - மாலை  5 மணி 
தொலைபேசி நிலையம் - தேவகோட்டை 
------------------------------------------------------------------------------------------
தலைமை: தோழர். நாகசுந்தரம் 
வரவேற்புரை : தோழர். பன்னீர்செல்வம் 
------------------------------------------------------------------------

-:நிகழ்ச்சி நிரல்:- 
செயல்பாட்டறிக்கை 
நிதியறிக்கை 
அமைப்புநிலை 
புதிய நிர்வாகிகள் தேர்வு 
தீர்மானங்கள் 
இன்ன பிற..
-----------------------------------------------------------------------------------------------------------

சிறப்பு அழைப்பாளர் 
தோழர் K. சேதுராமலிங்கம் 

வாழ்த்துரை : தோழர்கள் 
நா. நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர் 
வெ. மாரி - மாவட்டசெயலர் 
சி. முருகன் - மாவட்ட உதவிசெயலர் 
க. சுபேதார் அலிகான் - இளைஞர் அமைப்பு 
மற்றும் தோழர்கள் 

அனைவரும் வருக... 
அன்புடன் அழைக்கும் 

M. நாகசுந்தரம்                          N. பாலமுருகன் 
கிளைத்தலைவர்                        கிளைச்செயலர்

Sunday 28 July 2013

மரபு மாறா 
மதுரை மாவட்ட  மாநாடு 

மதுரை மாவட்ட மாநாடு 28/07/2013 அன்று மதுரையில் 
தோழர். விஜயரங்கன் தலைமையில் 
அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களின் வாழ்த்துரையுடன்,
அக்கம்பக்கம் மாவட்டச்செயலர்களின் பங்கேற்புடன், 
பொதுமேலாளர் திருமதி.இராஜம் அவர்களின் சீரிய சிறப்புரையுடன், 
 மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்களின் தொலைதொடர்பின் இன்றைய நிலை பற்றிய ஆழமான கருத்துரையுடன் 
சீராக சிறப்பாக நடைபெற்றது.

கூடல் நகரில் நிர்வாகிகள் தேர்வில் ஊடல் வந்திடுமோ 
என்ற அர்த்தமற்ற ஐயப்பாடுகளை களைந்தெறிந்து 
தலைவராக தோழர்.முருகேசன், 
செயலராகத்தோழர். சிவகுருநாதன் 
பொருளராக தோழர். ராஜேந்திரன் 
ஆகியோர்  ஒருமனதாக ஒரே மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

"தலைமைப்பொறுப்பில் யார்  இருந்தாலும் இல்லாவிட்டாலும் 
தானே இயங்கக்கூடிய சாசுவத இயக்கங்களை நாம் உருவாக்க வேண்டும்" 
என்ற விவேகானந்தரின் பொன்மொழிக்கு ஏற்ப
  
சாசுவத இயக்கமாம் NFTEன் மரபு காத்திடும் கூட்டமாக மதுரை மாவட்டம் விளங்க நமது மனப்பூர்வ வாழ்த்துகளை உரித்தாக்குகின்றோம்.

Saturday 27 July 2013

செய்திகள் 

ஜூலை 30 டெல்லியில் அனைத்து தொழிற்சங்க கூட்டம்.

மத்தியப்பிரதேசத்தில்   NFTE   அகில இந்திய மாநாடு பணிகள் துவக்கம்.

JAO பதவிகள் அதிகம்  காலி இருப்பதால்  JAO தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில்  வாய்ப்பை நழுவ விட்ட  தோழர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட   
மத்திய சங்கம் கோரிக்கை.

மாதாந்திர வேதனையாகிவிட்ட GPF பட்டுவாடாவை 
முறைப்படுத்திட மத்தியசங்கம் கோரிக்கை.

31/03/2013 காலாண்டில்  BSNL வாடிக்கையாளர்களுக்கு  
தரம் மிக்க சேவை தர தவறியதற்காகவும் 
சேவைத்தர அளவீடுகளைக் கடைப்பிடிக்க தவறியதாலும் 95 லட்சம் நிதிக்குறைப்பு செய்வதற்காக TRAI - தொலைதொடர்பு  ஒழுங்கு முறை ஆணையம் BSNLக்கு SHOW CAUSE NOTICE கொடுத்துள்ளது.

Friday 26 July 2013

வாழ்த்துக்கள் 

28/07/2013 -  ஞாயிறு 
மதுரையில் நடைபெறும் 
NFTE 
மாவட்ட மாநாடு 
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

Thursday 25 July 2013

அனைத்து தொழிற்சங்க 
கூட்டமைப்பின் சார்பாக 
BSNL 
சீரமைப்புக்கருத்தரங்கம் 



ஆகஸ்ட் 3 சனிக்கிழமை 
மாவ்லங்கர் அரங்கம் 
புதுடெல்லி 

பங்கேற்பு :   தோழர்கள் 

குருதாஸ்  தாஸ் குப்தா - AITUC

சுதேஷ் தேவ் ராய் - CITU

BN. ராய் - BMS

TKS. இளங்கோவன், LPF  

மற்றும் 
அனைத்து  BSNL 
தொழிற்சங்க பொதுச்செயலர்கள்

கருத்தால் ஒன்றுபடுவோம்.. 
கரத்தால் ஒன்றுபடுவோம்.. 
BSNL காப்போம்...

Tuesday 23 July 2013

செய்திகள் 

5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் 
இந்த ஆண்டு வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும் என 
வருமான வரி இலாக்கா கூறியுள்ளது.
5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 
ON LINE முறையில் வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும்.

 தொலைத்தொடர்பு மற்றும் இராணுவத்துறையில் 100 சத 
அந்நிய முதலீட்டை எதிர்த்து  ஜூலை 25 - அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை அட்டை அணிதல் மற்றும்  வழக்கமான ஆர்ப்பாட்டம்.

இலாக்கா பதவிகளுக்கான TTA மற்றும் JTO ஆளெடுப்பு விதிகளில் 
உரிய மாற்றம் செய்ய  BSNL நிர்வாகத்தை  
நமது மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இரண்டு முறை விலை போகாத SPECTRUM அலைக்கற்றை ஏலத்தை மூன்றாம் முறையாக  நடத்துவதற்கு 
TRAI நடவடிக்கை எடுத்து வருகின்றது.

Monday 22 July 2013

ஜூலை - 23
வீரமுரசு 
உண்மைத்தியாகி 
சுப்பிரமணியசிவா 
நினைவு தினம் 


பாப்பாரப்பட்டியில்  பாரதபுரம் படைத்தவன்..
வ .உ. சி , பாரதி, சிவா என்ற திரிசூலத்தின் நடுசூலம் அவன் 
வறுமையில் பிறந்தான்.. இளமையை தொலைத்தான்.. 
இறுதி மூச்சு வரை இந்திய விடுதலைக்கு உழைத்தான்..
இவனது இறப்பிற்கு பின்புதான் 
தியாகம் என்னும் சொல் பிறந்தது..
புகழ் நோய் கொண்ட புல்லர்களை பார்க்கின்றோம்..
இவனோ தொழுநோய் கொண்ட பின்பும் 
தாய் நாட்டை தொழுது வாழ்ந்தவன்..
உண்மை தியாகத்தின் ஒளிவிளக்கே..
உன் தொழுநோய் 
நாங்கள் தொழும் நோய்..
ஊழியர் சேம நலநிதிக்குழு 
மற்றும் 
விளையாட்டுக்குழு 

STAFF WELFARE BOARD மற்றும் 
BSNL SPORTS & CULTURAL BOARD 
ஆகிய அமைப்புகளுக்கு 
NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு 
தலா ஒரு உறுப்பினர் என 
பிரதிநிதித்துவம் அளித்து BSNL நிர்வாகம் 
இன்று 22/07/2013  உத்திரவிட்டுள்ளது. 

AIBSNLEA, SNEA, மற்றும் SEWA சங்கங்களுக்கு
 தலா ஒரு சிறப்பு அழைப்பாளர் எனவும் உத்திரவிடப்பட்டுள்ளது.

Sunday 21 July 2013

EPF & MISC. PROVISIONS ACT - 1952
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் பல்வகைச்சட்டம் 

சில துளிகள்..
மேற்கண்ட சட்டத்தின் கீழ் 3 திட்டங்கள் உள்ளன.
1. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம் - EPF - 1952
2. தொழிலாளர் ஓய்வூதியத்திட்டம் - EPS - 1995
3. தொழிலாளர் ஈட்டுறுதிக்காப்பீட்டுதிட்டம் - EDLI 1976

1. வருங்கால வைப்புநிதி திட்டம் - EPF - 1952
ஒவ்வொரு தொழிலாளியும் தனது அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதம் மாத சந்தாவாக செலுத்த வேண்டும். நிர்வாகம் அதே அளவு தனது பங்காக செலுத்தும்.
உடல் ஊனமுற்ற ஊழியருக்கான நிர்வாகப்பங்கை 
முதல் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசே செலுத்தி விடும்.
வீட்டு மனை,வீடு  வாங்க, பிள்ளைகளின் திருமணம் மற்றும் படிப்புச்செலவு மற்றும் மருத்துவசெலவுகளுக்காக 
முன்பணம் பெற்றுக்கொள்ளலாம்.
ஊழியர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு பணம் வழங்கப்படும்.
ஓவ்வொரு ஆண்டின் கணக்கை அடுத்த ஆண்டின் செப்டம்பருக்குள் ஊழியர்கள் தங்களது நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

2. ஓய்வூதியத்திட்டம் - EPS - 1995
இதற்கென ஊழியர்கள் தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை. நிறுவனங்கள் செலுத்தும் பங்கில் 8.33 சதம் இந்த நிதிக்கு அளிக்கப்படும்.
நிறுவனங்கள் ஓய்வூதிய பங்களிப்பை செலுத்தாத போதிலும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
10 வருட பணிக்காலத்திற்குப் பின் ஓய்வூதியம் பெறும் தகுதி உண்டு.
58 வயதுக்குப்பின் ஓய்வூதியம் வழங்கப்படும்.
பணியில் இருந்து முன்கூட்டியே விலகினால் 
50 வயதுக்குப்பின் வழங்கப்படும்.
தொழிலாளி ஊனமடைந்து விலகினால் ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஊழியர்கள் பணியில் இருக்கும் போதோ அல்லது ஓய்வு பெற்ற பின்னரோ இறக்க நேரிட்டால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். 
கணவன் மற்றும் மனைவி இருவரும் இறந்து விட்டால் 25 வயது வரை குழந்தைகளுக்கு வழங்கப்படும். 
உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு இறுதி வரை வழங்கப்படும்.
கணவனோ மனைவியோ மறுமணம் செய்து கொண்டால் குழந்தைகளுக்கு அநாதை ஓய்வூதியம் வழங்கப்படும்.
தொழிலாளி மணம் முடிக்காதவராக இருந்தால்
அவரது தந்தை அல்லது தாய்க்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஓய்வு பெறும்போது மூன்றில் ஒரு பங்கு தொகையை 
முன்கூட்டியே பெறலாம். (COMMUTATION)
ஓய்வூதியம் கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகின்றது.

கடைசி 12 மாதங்களில் பெற்ற சம்பளம்  X  உறுப்பினர் பணிக்காலம் 
-----------------------------------------------------------------------------------------------
70

3. ஈட்டுறுதிக்காப்பீட்டுதிட்டம் - EDLI 1976
இத்திட்டத்திற்கு ஊழியர்கள் தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை. நிறுவனங்கள் தொழிலாளியின் மொத்த ஊதியத்தில் 
0.5 சதத்தை தங்களது பங்காக செலுத்தும்.
தொழிலாளர் பணியில் இருக்கும் போது மரணமடைந்தால் அவரது வாரிசுகளுக்கு ரூ. 60,000 வரை ஈட்டுத்தொகை வழங்கப்படும்.

தோழர்களே..
மேற்கண்ட திட்டங்கள் 
BSNLலில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் 
இங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்.
நிரந்த ஊழியர்களுக்கு BSNL தன் பங்கை செலுத்துகின்றது.  
ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு குத்தகைக்காரர்கள் EPF பணத்தை செலுத்துவதில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்கின்றார்கள். 
மேற்கண்ட சலுகைகள் எல்லாம் 
தொழிலாளி வர்க்கம் போராடிப் போராடி பெற்றவை. 
அது உரியவருக்கு கிடைக்க 
நமது முன்னணித் தோழர்கள் பாடுபட வேண்டும்.

Friday 19 July 2013

ஊழியர் வருங்கால வைப்பு நிதி 
EMPLOYEES PROVIDENT FUND - EPF 

BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களது அடிப்படைச்சம்பளம் மற்றும்  அகவிலைப்படியில் 12 சதம் EPF 
சந்தா தொகையாக பிடித்தம் செய்யப்படுகின்றது. 
அதே அளவு 12 சதம் நிர்வாகத்தாலும் 
அவர்களது வைப்பு நிதிக்கு நிர்வாகப்பங்களிப்பாக 
வழங்கப்படுகின்றது.

நிர்வாகம் வழங்கும் 12 சத பங்களிப்புத்தொகையில்
 8.33 சதம் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும்(EPS)  
3.67 சதம் EPFக்கும் பிரித்தளிக்கப்படுகின்றது. 
EPF விதிகளின்படி ரூ.6500/= சம்பளம் வரை 8.33 சத அடிப்படையில் ஓய்வூதியத்திற்கு பங்களிப்பு வழங்கலாம் .

இதில் இரண்டு வித திட்டங்கள் உள்ளன.
8.33 சதம் என்பது அதிகபட்சமாக ரூ. 6500/= சம்பளம் வரை கணக்கிடப்பட்டு ஓய்வூதியத்திற்கு வழங்கப்படும். 
8.33 சதம் என்பது ஊழியர் வாங்கும் மொத்த சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஓய்வூதியத்திற்கு வழங்கப்படும். 

உதாரணமாக அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.10,000/= பெறும் ஊழியர்களுக்கு ரூ.1200/= நிர்வாகப்பங்களிப்பாக வழங்கப்படும்.
இதில் 6500க்கு 8.33 சதம் என்ற அடிப்படையில் ஓய்வூதியத்திற்கு ரூ.780/=ம் மீதமுள்ள 
ரூ.420/=EPFக்கும் பிரித்தளிக்கப்படும். அடுத்து 
10000க்கு 8.33 சதம் என்ற அடிப்படையில் ரூ. 833/= ஓய்வூதியத்திற்கும்  மீதமுள்ள ரூ.367/= EPF க்கும் பிரித்தளிக்கப்படும்.
இதற்கு ஊழியர்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

இதில் பல மாநிலங்களில் பலவிதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் 6500க்கு மட்டுமே ஓய்வூதிய கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.  கூடுதலாக ஓய்வூதிய பலனை அடைய விரும்பிய ஊழியர்கள் மொத்த சம்பளத்தில் ஓய்வூதியக்கணக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் BSNL நிர்வாகம் EPF நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டது. EPF நிர்வாகம் ஏற்கனவே உள்ள திட்டங்களில் மாற்றம் செய்ய இயலாது என கூறியுள்ளது. புதிதாக பணியில் சேரும் ஊழியர்கள் மட்டுமே இதற்கான விருப்பத்தை தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே பணியில் உள்ள தோழர்கள் தங்களுக்கு எந்த முறையில் ஓய்வூதிய பங்களிப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
(மேலும் விளக்கம் வேண்டுமெனில் 9486102027)

Thursday 18 July 2013

அனைத்து சங்க கூட்ட முடிவுகள் 

17/07/2013 அன்று டெல்லியில் அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. தொலைதொடர்பில் 100 சத அந்நிய மூலதனத்தைக்கண்டித்து
    25/07/2013 அன்று கோரிக்கை அட்டை அணிதல் மற்றும் ஆர்ப்பாட்டம்.
2. 03/08/2013 அன்று டெல்லியில் அகில இந்தியக்கருத்தரங்கம் நடத்துவது.
3. பழமை வாய்ந்த தந்தி சேவை நிறுத்தப்பட்டதை 
    கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது .
4. 78.2சத IDA இணைப்பை ஓய்வு பெற்றவர்களுக்கும்
    01/01/2007முதல் நிர்ணயம் செய்து அமுல்படுத்த வேண்டும்.
    HRA உள்ளிட்ட அனைத்துப்படிகளையும்
    78.2 சத நிர்ணய அளவிலேயே வழங்க வேண்டும்.
    STAGNATION - தேக்க நிலை அடைந்தோருக்கு  
   உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்.
    78.2 நிலுவை வழங்குவதற்கான 
    சாத்தியக்கூறுகளை நிர்வாகத்திடம் விவாதிப்பது.
வாலி... 
நின் புகழ்... வாழி... 

அன்னைத்தமிழை 
அழகு வார்த்தைகளால்.. ஒப்பனை செய்து
கன்னித்தமிழாக வாழ வைத்தவன்..

வில்லால் வாலியை மறைந்து   கொன்றான் 
அன்றைய இராமச்சந்திரன்..
நான் ஆணையிட்டால்.. அது நடந்து விட்டால்.. என 
சொல்லால்  இராமச்சந்திரனை வெல்ல வைத்தான் 
இன்றைய வாலி..

"தரை மேல் பிறக்க வைத்தான்" என..
பாட்டால் மக்கள் பாட்டை உணர வைத்தான்..
பாட்டால் பலரை பாராள உயர வைத்தான்..

எதுகை மோனை உள்ளளவும்..
எளியோர் துயர் தீரும் மட்டும்.. 
இவன் புகழ் நிலைத்திருக்கும்..

Wednesday 17 July 2013

மீண்டும்  JAO 
தற்காலிகப்பதவி உயர்வு 

JAO பதவிகளுக்கு OFFICIATING பதவி உயர்வு வழங்கக்கூடாது 
என BSNL நிர்வாகம் உத்திரவிட்டிருந்தது. 
தற்போது  அந்த உத்திரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது . 

வழக்கம் போல் JAO பதவிகளில் OFFICIATING 
பதவி உயர்வு வழங்கும் முறை தொடரும்...

Tuesday 16 July 2013

BSNL நேரடி நியமன ஊழியரின் ஓய்வூதிய பலன் 

01/10/2000க்குப்பின் BSNLலில் பணியில் சேர்ந்த நேரடி நியமன ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் 
என்பது நமது நீண்ட நாள் கோரிக்கையாகும். 
ஜூன் 2012 உடன்பாட்டின்படி இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. 
அந்த குழுவின் பரிந்துரையின்படி BSNLலில் பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு  மாதம் அவர்களது அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 2 சதம் BSNL தனது பங்களிப்பாக செலுத்தும். 
உதாரணமாக தற்போது அடிப்படைச்சம்பளம் ரூ. 10000/= பெறுவோருக்கு மாதம் ரூ.358/= பங்களிப்பாக செலுத்தப்படும். 
ஊழியர்களும் தங்களது பங்காக குறைந்த பட்சம் 2 சதம் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படியை அப்படியே செலுத்தலாம். 
இது பற்றி  அனைத்து சங்கங்களிடமும் 22/07/2013க்குள்  
கருத்து தெரிவிக்குமாறு BSNL நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது. 
DOT யின் அனுமதி பெற்ற பின்னர் இத்திட்டம் அமுல்படுத்தப்படும்.

Monday 15 July 2013

மனம் நிறை 
மாநிலச்சங்க அலுவலகத்திறப்பு விழா 

தமிழ் மாநிலச்சங்க அலுவலகத்திறப்புவிழா 15/07/2013 அன்று 
நோன்பு நோற்கும் புனித ரமலான் மாதத்திலே.. 
எளிமையான நேர்மையான  
பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர் பிறந்த தினத்திலே
சிறப்பு அழைப்பாளர் தோழர். ஜெயபால் அவர்களின் தலைமையிலே எளிமையாக இனிமையாக நடைபெற்றது.
முதன்மைப்பொதுமேலாளர்  முதல் உதவிப்பொதுமேலாளர் வரை அனைத்து  அதிகாரிகளும் 
அதிகாரிகள் சங்கங்கள் தொட்டு  ஊழியர் சங்கங்கள் வரை 
அனைத்து சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழர் ஆர்.கே., சிறப்புரையாற்ற, 
தோழர்.ஜெயராமனின் பங்கேற்பு மேலும் சிறப்பளித்தது.
சங்க அலுவலகம் NFTEஐ வலுவாக்கிட BSNLஐ வளமாக்கிட 
தனது பங்கை செலுத்திட வாழ்த்துகின்றோம் .

Thursday 11 July 2013

NFTE 
GM அலுவலகக்கிளை & புறநகர்க்கிளை 
காரைக்குடி 

இணைந்த கிளை மாநாடு 

13/07/2013 - சனிக்கிழமை - காலை 9  மணி 
GM அலுவலகம் - காரைக்குடி 

தலைமை : 
கிளைத்தலைவர்கள் : தோழர்கள்:
V. ஆறுமுகம் - K. சுந்தர்ராஜன் 

விவாதப்பொருள் :

                                 அஞ்சலி 
                                 வரவேற்புரை 
                                 செயல்பாட்டறிக்கை 
                                 நிதியறிக்கை 
                                 அமைப்புநிலை 
                                 தீர்மானங்கள் 
                                 புதிய நிர்வாகிகள் தேர்வு 
                                 நன்றியுரை 

தோழர்களே.. வாரீர்.
அன்புடன் அழைக்கும் ,

 KR. சேதுபதி - G. சுபேதார் அலிகான் 
கிளைச்செயலர்கள்.

.

DA 
BSNL உத்திரவு 

01/07/2013 முதல் 4 சத DA உயர்விற்கான  உத்திரவை BSNL 11/07/2013 அன்று வெளியிட்டுள்ளது.

Wednesday 10 July 2013

.

செய்திகள் 

ஓய்வு  பெற்ற ஊழியர்களுக்கு குடியிருப்பு ஒதுக்குவதற்கான மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளை BSNL நிர்வாகம் 10/07/2013 அன்று வெளியிட்டுள்ளது. அநேகமாக.. யாருமே குடிவர முன்வராத அளவில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக.. TYPE III குடியிருப்பிற்கு C பிரிவு ஊர்களுக்கு 3070ம், B பிரிவு ஊர்களுக்கு 6140ம், A1 பிரிவு ஊர்களுக்கு 9210ம் வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சட்ட திட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

JAO தேர்வில் தேர்ச்சியுறாத SC/ST தோழர்களின் தேர்வு முடிவுகளை மறு ஆய்வு செய்ய BSNL நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
மாநில நிர்வாகங்கள் 11/07/2013க்குள் தேவையான விவரங்களை  டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.
இம்மாத இறுதிக்குள் மறுபரிசீலனை செய்யப்பட்ட
 தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

BSNL நிர்வாகம் ஊர்சுற்றிகளுக்கான 2 புதிய ROAMING TARIFF PLANகளை அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 5 ரூபாயும், மாதத்திற்கு 69 ரூபாய் என்ற அளவில் அளவற்ற உள்நுழைவு அழைப்புக்கள் அனுமதிக்கப்படும்.

Monday 8 July 2013

.

78.2
REVISED TABLE FOR FIXATION OF PAY 

01/01/2007 முதல் 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவதால் ஏற்பட்டுள்ள மாற்றியமைக்கப்பட்ட  சம்பள நிர்ணயப்பட்டியலை  
(REVISED TABLE FOR FIXATION OF PAY) அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி 01/01/2007 அன்று ஊழியர்களுக்கு
 குறைந்தபட்சம் அடிப்படைச்சம்பளத்தில்
 490/= ரூபாயும் அதிகபட்சமாக  1580/=ம் உயருகின்றது.
78.2 உயர்வு இம்மாதம் சம்பளத்தில் அமுல்படுத்தப்படும் 
என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Sunday 7 July 2013

.

NFTE 
சங்க அலுவலகம் திறப்புவிழா 
13/07/2013 - சனிக்கிழமை - காலை 10 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி 

சங்க அலுவலக திறப்பாளர் 
தோழர். 
ஆர்.கே 

சிறப்பு அழைப்பாளர் 
தோழர். சேது 

-:முன்னிலை:-
தோழர். பழ. இராமச்சந்திரன், AITUC  

திரு. S . இராமகிருஷ்ணன் 
துணைப்பொதுமேலாளர் - நிதி 

திரு. S. ஜெயச்சந்திரன் 
துணைப்பொதுமேலாளர் - நிர்வாகம் 

திரு A. சுவாமிநாதன் 
உதவிப்பொதுமேலாளர் நிர்வாகம் 

தோழர். R.பூபதி 

மற்றும் 
அனைத்து தோழமை 
தொழிற்சங்கத்தலைவர்கள்... 

தோழர்களே.. வருக..

.

தொலைத்தொடர்பில் 100 சத 
அந்நிய முதலீட்டைக்  கண்டித்து 
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் 

ஆர்ப்பாட்டம் 
09/07/2013 - செவ்வாய்க்கிழமை - மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி 

தோழர்களே..
சுதேசி இயக்கம் அன்று..
விதேசி மயக்கம் இன்று..
வெள்ளையனை வெளியேறச்சொன்னது அன்று...
விரைந்து அழைப்பது இன்று..

அன்றைய ஆட்சியாளர்களுக்கு வெள்ளை மனசு 
இன்றைய ஆட்சியாளர்களுக்கு வெள்ளையர் மனசு..
சுதந்திர நாட்டிலே..
தலைப்பாகை கட்டிய  அடிமைகள்..
இந்தியத்தாலி அறுக்கும் இத்தாலிகள் ..

இந்நிலை மாற்றிட..
தொழிலாளி வர்க்கமே.. தூக்கம் கெடு..

Friday 5 July 2013

.

DA - DPE  உத்திரவு 

01/07/2013 முதல் 4 சத IDA உயர்விற்கான
 DPE உத்திரவு 04/07/2013 அன்று 
வெளியிடப்பட்டுள்ளது.

BSNL உத்திரவு விரைவில் வெளிவரும்.

Thursday 4 July 2013

-

செய்திகள் 

JTO இலாக்காத் தேர்வில் தவறுதலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய மதிப்பெண் வழங்க BSNL நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

உத்தர்கண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளம் வழங்க BSNL ஊழியர்களுக்கு CMD வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடல் ஊனமுற்றோரின் குடும்ப ஓய்வூதிய நடைமுறைகளை எளிமைப் படுத்தி ஓய்வூதியம் அவர்களுக்கு விரைந்து கிடைக்கும் வகையில் ஓய்வூதிய இலாக்கா உத்திரவிட்டுள்ளது.

USO நிதியிலிருந்து BSNLக்கு 1500 கோடி மானியம் அளித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

VODOFONE  நிறுவனம் NATIONAL ROAMINGல் இருப்போருக்கு 
 நாளொன்றுக்கு 5 ரூபாய் என்ற  கட்டண விகிதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Wednesday 3 July 2013

04/07/2013

 சுவாமி விவேகானந்தர் 
நினைவு நாள் 

தொண்டனாக இருக்க கற்றுக்கொள்..
தலைமைப்பதவி தானே வரும்..

.

கைபேசி வாங்க இனி 
கைரேகை வேண்டும்

SIM cardகள் வாங்குவோர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களது முகவரி உறுதிப்படுத்தபட்ட பின்பே SIM CARD செயல்படுத்தப்பட வேண்டும்.. என்றெல்லாம் விதிகள்  இருந்தாலும் கடுமையான போட்டி காரணமாக 
இவை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. 

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் 490 simcardகளை எந்த வித ஆவணங்களும் இன்றி ஒரே நபருக்கு விற்பனை செய்துள்ளது. எனவே தேச பாதுகாப்பு கருதி இனிமேல் SIMCARD வாங்குவோர்களின் கைரேகையையும் பதிவு செய்யுமாறு 
உள்துறை அமைச்சகம் DOTஐக் கேட்டுக்கொண்டுள்ளது.

.

தீயா.. வேலை.. செய்யணும்..
தோழர்களே..
இது ஜூலை மாதம்.. 
புது உறுப்பினர்களை சேர்க்கும் மாதம்.
ஜூலை 15க்குள் புது உறுப்பினர்களின் பட்டியலை
நிர்வாகத்திடம் நாம் அளித்திட  வேண்டும்.

அதற்கு முன்..
கடந்த தேர்தல் முடிவுகளை சற்று அலசிட வேண்டும்.
மற்றைய தேர்தல்களை விட இந்த தேர்தலில் நமது வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்பதை மனதில் இருத்த வேண்டும்.
100 சத குறைபாடுகள் இருந்தாலும்  BSNLEU சங்கம் 
50 சத உறுப்பினர் எண்ணிக்கையை தொட்டுக்கொண்டிருக்கின்றது  
என்ற உண்மையை நாம் மறந்திடல் ஆகாது.
எட்டாண்டுகளுக்குப் பின் இரண்டாவது சங்க அங்கீகாரம் நமக்கு கிட்டியுள்ளது . இந்த 3 ஆண்டுகளில் மிக மிக கடுமையாக நாம் உழைக்க வேண்டும். பெரும்பகுதி ஊழியரின் ஆதரவைப் பெற்று 
முதற்சங்கம் என்னும் நிலையை மீண்டும் அடைய வேண்டும்.
இல்லையேல்,  BSNLEU சங்கம் 50 சதம் அடைந்து 
ஒரு சங்க தொழிற்சங்க முறை மீண்டும் தலையெடுக்கும்..

எனவே தோழர்களே..
கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்துவோம்.
உள்குத்து,வெளிக்குத்து விவகாரங்களைக்  களைந்தெறிவோம்..
மாண்புமிக்க NFTE சங்கத்தை மீண்டும் முதன்மைச்சங்கமாக்கிட 
தீயவற்றை ஒதுக்கிடுவோம்..
தீயா வேலை செய்திடுவோம்..

Monday 1 July 2013

.

நெய்வேலி நிலக்கரி நிறுவன
பங்கு விற்பனையை எதிர்த்து 

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக 
இணைந்த ஆர்ப்பாட்டம் 

04/07/2013 - வியாழன் - மாலை - 5 மணி 
GM அலுவலகம் - காரைக்குடி. 

சிறப்புரை : தோழர்கள் 

பழ. இராமச்சந்திரன் AITUC 

மு. காசிநாதன் CITU 

தோழர்களே.. வருக ..