Tuesday 31 January 2017

NFTE - NFTCL 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சம்மேளனம் 
காரைக்குடி மாவட்டம்

மாவட்டச்செயற்குழு 
பணி நிறைவு பாராட்டு விழா 

04/02/2017 - சனிக்கிழமை - காலை  10 மணி 
தொலைபேசி நிலையம் - பரமக்குடி 

கூட்டுத்தலைமை 
தோழர்.லால் பகதூர்  
NFTE மாவட்டத்தலைவர் 
தோழர்.முருகன்
NFTCL மாவட்டத்தலைவர் 

ஆய்படு பொருள் 
NFTCL  மாநில மாநாடு 
மாவட்ட நிலை 
அமைப்பு நிலை 
தலமட்டப்பிரச்சினைகள் 
மாற்றல் பிரச்சினைகள் 
மற்றும் பிற...

பணி நிறைவு பாராட்டுப்பெறுவோர் 
தோழர்.கல்யாண சுந்தரம்
TM /பரமக்குடி 
தோழர்.கணேசன் 
TM /இளையான்குடி 

சிறப்புரை 
தோழியர்.பரிமளம்
NFTE மாநில உதவித்தலைவர் 

தோழர்.சுபேதார் அலிகான் 
NFTE மாநில அமைப்புச்செயலர் 

அனைவரையும் அன்புடன் வரவேற்கும் 
பா.முருகன்   - NFTCL மாவட்டச்செயலர் 
வெ.மாரி - NFTE மாவட்டச்செயலர் 
NFTE - NFTCL 
இராமநாதபுரம் கிளைகள் 
இணைந்த பொதுக்குழுக்கூட்டம் 

31/01/2017 - மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் 
இராமநாதபுரம் 

தலைமை 
தோழர்.அமலநாதன் 
கிளைத்தலைவர் 

ஆய்படு பொருள் 

NFTCL மாநில மாநாடு 
தலமட்டப்பிரச்சினைகள்
இன்ன பிற...

அனைவரையும் அன்புடன்  அழைக்கும்...
S.தங்கராஜ் 
கிளைச்செயலர்  

Monday 30 January 2017

பணி நிறைவு வாழ்த்துக்கள்

இன்று 31/01/2017 பணி நிறைவு பெறும்
பரமக்குடியின் பாசமிகு அடையாளம்
அன்புத்தோழர்.
M.கணேசன்
TT/ILN
காரைக்குடியின்
கண்ணியமிகு அடையாளம்
அருமைத்தோழர்.
K.நல்லபெருமாள் 
SR.ACCT/KKD
ஆகியோரது பணிநிறைவுக்காலம்
சீரோடும்… சிறப்போடும் விளங்க
அன்புடன் வாழ்த்துகிறோம்…

Sunday 29 January 2017

உணர்வு மங்காத  உப்பு...

1930...
ஆங்கிலேய ஆட்சியில்...
உணர்வற்று இருந்த மக்களை
உப்பு என்ற  ஒற்றைச்சொல் உசுப்பேற்றியது...

உப்புக்கு வரி என்னும் கொடுமை எதிர்த்து...
அண்ணல் காந்தி தண்டி யாத்திரையைத் தொடங்கினார்...
23 நாட்கள்... 240 மைல் தூரம்...
லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம்...
80000 மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்...
உலகின் மாபெரும் போராட்டமாக...
உப்புச் சத்தியாக்கிரகம் பேசப்பட்டது...

87 ஆண்டுகள் கழிந்த பின்னும்...
இந்திய தேசத்தில்... 
தமிழகத்தின் இளையவர்கள் 
அண்ணலின் அறவழி நின்று 
அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளனர்...
அண்ணல் காந்தி மறைந்தாலும்...
அவரது அறவழி என்றும் மறையாது...
உலகிற்கு அதுவே ஒளி விளக்கு...

இன்று ... 30/01/2017
அண்ணல் காந்தி நினைவு தினம்...
தேசத்தந்தையைப் பெருமையுடன் 
நினைவு கூர்வோம்...

அண்ணல் காந்தி அமரத்துவ தினம் 
தியாகிகள் தின சிறப்புக் கூட்டம் 
30/01/2017 - சிவகங்கை 
பங்கேற்பு 
தோழர்.குணசேகரன் 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 
மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள்...
தோழர்களே... வாரீர்...
NFTCL வரவேற்புக்குழு கூட்டம்
NFTCL
தமிழக மாநில மாநாடு 
வரவேற்புக்குழு கூட்டம்
30/01/2017 – திங்கள் – மாலை 3 மணி –சிவகங்கை
தலைமை: தோழர்.குணசேகரன் EX.MLA 
வரவேற்புக்குழுத் தலைவர் 

வரவேற்புக்குழுத்தோழர்கள் மற்றும்
சிவகங்கை, மானாமதுரை தோழர்கள் 
கலந்து கொள்ளவும்.

அன்புடன்  அழைக்கும்
S.முருகன்              B.முருகன் 
NFTCL மாவட்டத்தலைவர்              NFTCL மாவட்டச்செயலர்.
சமவேலை சம ஊதியம் மாநில மாநாடு


29/01/2017 அன்று கல்பாக்கத்தில் ஒப்பந்த ஊழியருக்கான 
சம வேலைக்கு சம ஊதிய தமிழ் மாநில கோரிக்கை மாநாடு தோழர்.சுப்பராயன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 
தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 
தமிழகம் முழுவதும் இருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். காரைக்குடி மாவட்ட NFTCL சார்பாக மாவட்டப்பொருளர் தோழர்.வீரசேகர், NFTE மாவட்ட உதவிச்செயலர் தோழர். தமிழ்மாறன் கலந்துகொண்டனர். NFTCL சார்பாக தோழர். தமிழ்மாறன் உரை நிகழ்த்தினார். தேசம் முழுமையும் ஒப்பந்த ஊழியர்களை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்திற்கு
 AITUC சங்கம் விரைவில் களம் அமைக்கும். 
NFTCL உணர்வோடு போராட்டத்தில் பங்கு கொள்ளும்.

Saturday 28 January 2017

திரிசூலம் லால்-பால்-பால்…

இந்திய விடுதலை வரலாற்றில்
திரிசூலங்களாய்த் திகழ்ந்தவர்கள்
லாலா லஜபதிராய்
பால கங்காதர திலகர்
விபின் சந்திர பால்..

என் மீது அடிக்கப்படும் ஒவ்வொரு அடியும்
ஆங்கிலேய சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்
என்று வீர முழக்கமிட்ட லாலா லஜபதிராய்
அவர்களின் பிறந்த தினம் ஜனவரி 28…

சைமனே திரும்பிப்போ என்று குரலெழுப்பி
ஆங்கிலேயரிடம் அவர் தடியடி பட்ட காட்சி
பகத்சிங்கின் மனதில் விடுதலைத் தீயை மூட்டியது…
பாரதியாரும்… பகத்சிங்கும்…
இவரைத் தன் குருவாக வரித்துக்கொண்டார்கள்…

இந்திய அரசியலில்.. 
இந்துத்துவத்தை முன்னிறுத்தியதில்
இவருக்கு தொடர்பிருந்தாலும்…
இந்திய விடுதலைப் போராட்டத்தில்...
இவருடைய பங்கு இணையற்றது…
NFTCL - தமிழக  மாநில மாநாடு 

உழைப்புச் சுரண்டல் தடுக்க…
உழைப்பவர் உரிமைகள் காக்க…
ஒப்பந்த ஊழியர்கள் மாநில மாநாடு
பிப்ரவரி 11 & 12 – காரைக்குடி.

தோழர்களே...அணி திரள்வீர்….

Friday 27 January 2017

சம வேலைக்கு சம ஊதியம் - கோரிக்கை மாநாடு 

AITUC
சம வேலைக்கு சம ஊதியம் 
அமுல்படுத்தக் கோரி...

 அனைத்துப் பகுதி  ஒப்பந்தத் தொழிலாளர் 
தமிழ் மாநில கோரிக்கை மாநாடு 

29/01/2017 - ஞாயிறு - காலை 10 மணி 
வெங்கம்பாக்கம் - கல்பாக்கம் அணுமின் நிலையம் 

தலைமை 
தோழர்.சுப்பராயன்  
AITUC - மாநிலத்தலைவர் 

பங்கேற்பு : 
தோழியர்.உதயபானு 
AITUC - மாநிலத்தலைவர் கேரளா 

தோழர்.மூர்த்தி 
AITUC - தமிழ் மாநில பொதுச்செயலர் 

தோழர்.இரவி 
AITUC - துணைப்பொதுச்செயலர் 

தோழியர். வஹிதா நிஜாம் 
AITUC - செயலர் 

ஒப்பந்த ஊழியர்களே... வாரீர்...

Thursday 26 January 2017

ஒப்பந்த  ஊழியர்கள்  தமிழக மாநில மாநாடு 

உழைப்பாளிகளின் சங்கம்...
காரைக்குடியில் சங்கமம்...
தோழர்களே... திரள்வீர்...

Wednesday 25 January 2017

தொடர்புடைய படம்

அண்ணல் காந்தி சொன்ன அறவழியில்..
அண்ணல் அம்பேத்கார் சொன்ன சமத்துவ வழியில்...
அப்துல்கலாம் கண்ட கனவு வழியில்...
நாளைய பாரதம்... 
நம்பிக்கை கொண்ட 
இளைய பாரதம்.. வளரட்டும்..
அனைவருக்கும் இனிய 
மக்களாட்சி தின நல்வாழ்த்துக்கள்

Tuesday 24 January 2017

NFTCL - தமிழக மாநில மாநாடு...

அணி திரள்வீர்... தோழர்களே...

Monday 23 January 2017

வீழ்ந்த காளை 

வீழ்ந்த காளை
தடையற்ற சுதந்திரமும்…
தலையற்ற இயக்கமும்…
நீண்ட நாள் நிலைத்ததில்லை…

ஆகாவென்றெழுந்த காளைகள்…
அய்யோவென்று வீழ்ந்தன…

முட்டுமிடம் தெரியாமல்
முடங்கிப்போயின…

எரிப்பது எளிது…
அணைப்பது கடிது…

பற்றியெரிந்த பெருநெருப்பு
பல பாடம் சொல்லிச்சென்றது…

வெற்றியே உலகில் பெரிது…
அனுபவம் வெற்றியினும் பெரிது…

ஆத்திரம் தடைக்கற்கள்
அனுபவம் படிக்கற்கள்…
படிக்கற்களில் பயணிப்போம்…
NFTCL மாநிலச் செயற்குழு
NFTCL 
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்
மாநில செயற்குழு
24/01/2017 – செவ்வாய் காலை 10 மணி
தான்தோன்றிமலை - கரூர்

தலைமை : தோழர்.மாலி – மாநிலத்தலைவர்
  • மாநில மாநாடு
  • குறைந்த பட்ச ஊதியம்
  • சமவேலைக்கு சம ஊதியம்
  • ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்
  • மற்றும் பிற…
பங்கேற்பு
தோழர்.ஆனந்தன் – மாநிலச்செயலர் – NFTCL
தோழர்.C.K.மதிவாணன் – பொதுச்செயலர் – NFTCL
மற்றும் மாநிலச்சங்கப்பொறுப்பாளர்கள்…

Sunday 22 January 2017

குன்றென  நிமிர்ந்து நில்...

உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியரின்...
உரிமை காக்கும் சங்கம்...
NFTCL 
தமிழக மாநில மாநாடு 
பிப்ரவரி  - 11 & 12
காரைக்குடி 
தோழர்களே... அணி திரள்வீர்...
குறைந்த பட்சக்கூலியைக் கொடு...
குறைந்த பட்சக்கூலி கேட்டு
சிகாகோவில் தொழிலாளர்கள் போராட்டம் 
கூலியைக் கொடு...
குறைந்த பட்சக்கூலியைக் கொடு...
இது உலகெங்கும் எதிரொலிக்கும் 
தொழிலாளர்களின் உரிமைக்குரல்...

இந்தியாவில்...
1948ல் குறைந்த பட்சக்கூலிக்கான சட்டம் இயற்றப்பட்டது...
ஆனாலும் இன்றுவரை தொழிலாளர்கள் 
குறைந்த பட்சக்கூலி கேட்டுப் போராடித்தான் வருகிறார்கள்...

சட்டங்களும்... திட்டங்களும் இந்தியாவில் ஏராளம் உண்டு...
ஆனாலும் அவைகள் மக்களைச் சென்றடைவதில்லை...

ஒருவர் இன்புற... 
ஓராயிரம் பேர் துன்புற...
இந்த இழிநிலைதான் இன்று...
இந்தியாவில் நாம் காணும் காட்சி...

ஏழாவது ஊதியக்குழு... 
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச்சம்பளம் 
மாதம் ரூ.18000/= வழங்கியுள்ளது...
ஆனால் அடிமட்ட ஊழியர்களுக்கு...
மாதம் ரூ.9100/= என்பதே இன்றைய 
குறைந்தபட்சக்கூலியாக மத்திய அரசு அறிவித்துள்ளது...
2014ல் அமுல்படுத்தப்பட வேண்டிய
குறைந்தபட்சக்கூலி 2017ல்தான் அமுலாகியுள்ளது...

தற்போதைய கூலி நிலவரம்...

UNSKILLED WORKER  
தொலைபேசி நிலையங்களில்  பணி செய்வோருக்கு...

A பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.523/=
B  பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.437/=
C  பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.350/=

WATCH AND WARD WITHOUT ARMS 
காவல் பணி செய்வோருக்கு...

A பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.637/=
B  பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.579/=
C  பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.494/=

கேபிள்  பணி செய்வோருக்கு...
A பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.579/=
B  பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.494/=
C  பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.410/=

CLERICAL DUTY 
அலுவலகங்களில் எழுத்தர் பணி செய்வோருக்கு...
A பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.637/=
B  பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.579/=
C  பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.494/=

மேற்கண்ட கூலி 19/01/2017 முதல் அமுலுக்கு வருகிறது...
தற்போது  நமது  பகுதியில் ஒப்பந்த ஊழியர்கள்...
HOUSE KEEPING, CABLE MAINTENANCE, WATCH AND WARD 
ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்...
HOUSE KEEPING என்ற பெயரில் தொழிலாளிகள் 
சுத்தம் செய்தல், துப்புரவுப்பணி, அலுவலகப்பணி, 
கணிப்பொறியில் வேலை செய்தல், எழுத்தர் பணி மற்றும் என்னென்ன பணிகளில் ஈடுபடுத்தப்படுமோ அனைத்திலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆனால் அனைவரும் 
திறனற்ற தொழிலாளி - UNSKILLED 
என்று பெயரிடப்பட்டு...அவர்களுக்கு..
ஒரே விதமான  கூலியே வழங்கப்படுகிறது...
சம வேலைக்கு சம ஊதியம் என்று சட்டம் சொன்னாலும்...
உச்ச நீதிமன்றம் உரக்க சொன்னாலும்...
அது இன்னும் கானல் நீராகவே உள்ளது...
காரணம் படித்தவர்கள் செய்யும் பாவமே...

எனவே...
அவரவர் செய்யும்... 
பணிக்கேற்ற கூலி என்பதே... 
நமது கோரிக்கையாகும்.. 
நமது  முழக்கமாகும்... 
நமது இலட்சியமாகும்...

பணிக்கேற்ற கூலி என்னும் 
நம்  கோரிக்கை வலுப்பெற...

பிப்ரவரி 11- 12ல் 
 NFTCL  ஒப்பந்த ஊழியர் 
தமிழக  மாநில மாநாட்டில் 
காரைக்குடியில் கூடுவோம்...

கரம் உயர்த்துவோம்...
களம் காண்போம்...
வாரீர்... தோழர்களே...
இன உணர்வுப்பேரணி 

காரைக்குடியில்...21/01/2017 அன்று 
அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள்,
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 
அணிதிரண்டு பேரணி நடத்தினர்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக...
சொல்லுக்கட்டு முழங்க 
வீதியெங்கும் கோரிக்கை முழங்கினர்...
மாணவர்கள் அணிதிரண்டு போராடும் 
கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு..
தமிழின உணர்வை வெளிப்படுத்தி...
வீறு கொண்டு முழங்கினர்...

உணர்வோடு கலந்து கொண்ட தோழர்களுக்கு 
உணர்வான வாழ்த்துக்கள் உரித்தாகுக...

Saturday 21 January 2017

குறைந்த பட்சக்கூலி உயர்வு 

19/01/2017 முதல் ஒப்பந்த ஊழியர்களது 
குறைந்த பட்சக்கூலி உயர்ந்துள்ளது.
இதற்கான இறுதி அரசிதழை 
மத்திய அரசு 19/01/2017 
அன்று வெளியிட்டுள்ளது.

UN SKILLED LABOUR 

A   பிரிவு  நகரம்  ரூ.523/-
B   பிரிவு  நகரம்  ரூ.437/-
C   பிரிவு  நகரம்  ரூ.350/-

Friday 20 January 2017

நெறி சார்ந்து  ஆட்சி செய்க...

அமெரிக்க அதிபராக 
திரு.டொனால்ட் டிரம்ப் 
ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளார்...

அவருக்கு  போப் பிரான்சிஸ் அவர்கள் 
அனுப்பியுள்ள வாழ்த்து பொருத்தமானது...
மனித குலத்திற்கு அவசியமானது...

போப்பின் வாழ்த்துக்கள் 
நெறிமுறை சார்ந்து ஆட்சி செய்க...
நெறிமுறை தவறாமல் ஆட்சி செய்க...
ஒதுக்கப்பட்டவர்களுக்காக ஆட்சி செய்க...
உதவியற்றவர்களுக்காக ஆட்சி செய்க...
அமெரிக்க மாண்பு குறையாமல் ஆட்சி செய்க...
மனிதநேயம் மங்காமல் ஆட்சி செய்க...
உலகில் சுதந்திரம் ஒளிவீச ஆட்சி செய்க...
உண்மை நெறி ஓங்க ஆட்சி செய்க...
எழுச்சி... மகிழ்ச்சி... நெகிழ்ச்சி...

தமிழகம் கற்றுக்கொடுக்கிறது…
சொல்கிறார் NDTV இயக்குநர்….

கற்றுக்கொள்ளும் மாணவர்கள்…
இன்று உலகிற்கு
கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்…

காளைகள் மட்டுமே… கருப்பொருளல்ல…
பன்னாட்டுக் கொள்ளை அம்பலமாகிறது…
CORPORATE கலாச்சாரம் கிழிக்கப்படுகிறது…
மதவாதம் சாதிபேதம் உடைக்கப்படுகிறது…

அரியணை தந்ததும் முகநூலே…
போலிகளை அம்பலமாக்குவதும் முகநூலே…

தகவல் தொடர்பு….
மனத்தை பிணைத்தது…
இனத்தை இணைத்தது…

போராடும் மனிதனுக்கு
சாதி இல்லை… மதமில்லை…
கொள்கை உண்டு… கோஷம் உண்டு…
நமது ஆண்டாண்டு கால முழக்கத்தை
காதால் கேட்டோம்…
இன்று கண்ணால் கண்டோம்…

மனதிலே ஜல்லிக்கட்டு..
மத்தாப்பாய் மலரக்கண்டோம்…

தமிழ்க்குடிகளின் தன்மானம் காக்க
தமிழகம் ஓரிடம் கூடி விட்டது…

இது பாரதப்போர்….
நம் பண்பாட்டுப்போர்…
பாரதப்போர் பதினெட்டு நாள்…
நம் பண்பாட்டுப்போர்….
இன்று நான்காம் நாள்…
நம் உரிமையை எட்டும் நாள்…

தை பிறந்தால் வழி பிறக்கும்…
இது.. தமிழர்களின் நம்பிக்கை…

இதோ… தை பிறந்தது…
ஒரு வழி பிறந்தது…

அடங்கி விடும் இனமல்ல… தமிழர் இனம்…
முடங்கி விடும் இனமல்ல தமிழர் இனம்…
தொடங்கி விடும் இனமே நம் தமிழினம்…

Thursday 19 January 2017

NFTCL  - தமிழ் மாநில மாநாடு 
NFTCL 
தேசிய தொலைத்தொடர்பு 
ஒப்பந்த ஊழியர் சம்மேளனம் 

தமிழக மாநில மாநாடு 

11/02/2017 & 12/02/2017
சனி & ஞாயிறு

AP - மகால் 
பெரியார் சிலை அருகில் 
காரைக்குடி.

ஒப்பந்த ஊழியர்களே...
இது ஒப்பனை மாநாடல்ல...
உங்களின் உரிமை முழக்க மாநாடு...
உரிமை கேட்க... உரிமை மீட்க...
ஒன்று திரள்வீர்...

Wednesday 18 January 2017

எழுந்தது... இளையபாரதம்...

எழுந்தது…… இளைய பாரதம்...

மாணவர் சக்தி மாபெரும் சக்தி…
இது… தானே எழுந்த சக்தி…
இதுதானே நம் எதிர்கால சக்தி…

தமிழகம் முழுவதும்…
தடைகளைத் தகர்க்குது மாணவர் படை…

தேரோடும் வீதிகளில் போராட்டம்….
காரோடும் சாலைகளில் போராட்டம்…
இரயிலோடும் பாலங்களில் போராட்டம்…
அலையாடும் கடலோரங்களில் போராட்டம்…

தடைக்கற்களே… படிக்கற்கள்..
கொதிக்கும் தரை…
குளிரும் பனி…
தவிக்கும் நாவு
தகிக்கும் வயிறு…
மிரட்டும் காவல்துறை…
அரட்டும் கல்லூரித்துறை…
எல்லாம் இங்கே…
மோடியின் செல்லாநோட்டுக்கள்…

பசி நோக்கவில்லை…
கண் துஞ்சவில்லை…
கண்ணான மாணவ மணிகள்..
கருமமே…கண்ணாயினர்…

நூறு இளைஞர்களைக் கொடுங்கள்…
தேசத்தை மாற்றுகிறேன்...என
சுவாமி விவேகாநந்தர் சொன்னார்…
இதோ…
ஆயிரக்கணக்கான இளைஞர்கள்…
அல்லும் பகலும் அயர்வில்லாத இளைஞர்கள்…

வீரத்துறவியே… எழுந்து வா…
எங்களோடு இணைந்து வா…

நீ கண்ட இளையபாரதம்…
இதோ எழுந்து விட்டது…
மாற்றுவோம்… தேசத்தை
ஏற்றுவோம்… ஒளி தீபத்தை…